"முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, ‘மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான்."
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு அதில் தொழுவார்கள். அதைப் பகல் நேரத்தில் கீழே விரித்துக் கொண்டு அதன் மீது அமர்வார்கள்.
மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் இவ்வாறு இரவில் வந்து தொழும் மக்கள் எண்ணிக்கை அதிகமாகி விடவே,
நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, ‘மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்) செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்’ என்றார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)
(புகாரி: 5861)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


