🍂🍃🍂🍃🍂🍃🍂
*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*12.02.2026 (வியாழன்)*
*⚜️ஒளி நிறை மறையுண்மைகள்⚜️*
*🌿🌹முதலாவது. ஆண்டவர் இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,*
மறைசாட்சியாக மரித்தவரும், இன்றைய புனிதருமான புனித அப்பல்லோனியா, பல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பல் மருத்துவர்களின் பாதுகாவலராவார்.
பல் சம்பந்தப்பட்ட நோய்களினால் அவதியுறுவோர் அவற்றிலிருந்து பரிபூரண சுகம்பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹இரண்டாவது. ஆண்டவர் இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,*
*உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது."* என இன்றைய நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில் கூறப்பட்டுள்ளது.
நமக்கு அளிக்கப்பட்ட இறைவார்த்தை நம்மை மீட்கவல்லது என்பதை உணர்ந்து இறைவார்த்தையின்படி நாம் எந்நாளும் நடந்திட வேண்டி இந்த 8இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்பபோம்.
*🌿🌹மூன்றாவது. ஆண்டவர் இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
*"சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே."* என இயேசுவிடம் கூறி தமது விசுவாசத்ததால் தமது மகளை குணம்பெற வைத்த கிரேக்கப் பெண்ணிடமிருந்து தளரா விசுவாசத்தை நாம் கற்றுக்கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹நான்காவது. ஆண்டவர் இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,*
பெர்னதெத்துக்கு 18 முறை தரிசனமளித்த தூய லூர்து அன்னை, திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களில் 15 மறையுண்மைகளை நாளுக்கு ஒன்றாக தியானித்து செபிக்க வலியுறுத்தினார்.
குடும்ப செபமாலை செபிக்கும் பழக்கத்தை இல்லங்களில் தொய்வில்லாமல் கடைபிடிக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹ஐந்தாவது. ஆண்டவர் இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,*
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🙏🏻ஆமென்.🙏🏻* #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்


