நீங்கள் இன்னும் “அமெரிக்கா தாக்குகிறது”, “இஸ்ரேல் பாதுகாப்பாக உள்ளது” போன்ற பழக்கப்பட்ட செய்திகளையே கேட்டு கொண்டிருக்கலாம். ஆனால் இங்கு சொல்லப்படுவது அந்த எல்லா செய்தித் தலைப்புகளின் பின்னாலும் மறைந்து கிடக்கும், உலக அதிசக்திகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள உண்மைக் கதையாகும். இதைச் சொல்வது ஒரு ஈரான் ஆதரவாளர் அல்ல. அலொன் மிஸ்ராஹி எனப்படும் உலகில் கீர்த்திமிக்க யூத செய்தியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் இஸ்ரேலியர் ஆவார்.
அவர் சொல்வதன் சாரம் இதுதான்:
“நாம் இப்போது ஒரு வரலாற்றையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலகையே அதிர்ச்சியடையச் செய்து, ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்களை எவ்வளவு கொடூரமாகவும் எவ்வளவு பெரிய அளவிலும் அழித்து வருகிறது என்ற உண்மையை உலகம் இன்னும் ஏற்கத் தயாராக இல்லை!”
30 ஆண்டுகளாக கட்டிய அமெரிக்க கனவு வெறுமனே 4 நாட்களில் சாம்பலானது
உலகில் பாதுகாப்புக்கென அதிகூடிய தொகையை செலவு செய்யும் நாடு அமெரிக்காவாகும். கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாக பஹ்ரைன், குவைத், கட்டார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா டிரில்லியன் டாலர்கள் செலவில் பிரமாண்டமான இராணுவத் தளங்களை அமைத்தது. உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டதும் மற்றும் மிக விலை உயர்ந்த அதி நவீன இராணுவ வசதிகளைக் கொண்டவையுமாக இவை கருதப்படுகின்றன.
ஆனால், அலொன் மிஸ்ராஹி எடுத்துக் காட்டுவது மிகவும் கவலைக்குரியதும் அதிர்ச்யூட்டுவதுமான உண்மைகளாகும்.“30 ஆண்டுகள் செலவழித்து அமைக்கப்பட்ட அந்த டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்கள், ரேடார் அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்பு தளங்கள் அனைத்தையும் ஈரான் நான்கு நாட்களுக்குள் சாம்பலாக்கி விட்டது.”
நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள ரேடார் அமைப்புகள் கண் இமைக்கும் நேரத்தில் அழிக்கப்படுவதும், அமெரிக்க வீரர்கள் தங்களது மிகப் பலம் போருந்திய முகாம்களை விட்டு பயந்தோடுவதுமே இன்று மத்திய கிழக்கில் இருந்து வெளியாகும் தகவல்களாக உள்ளன.
மிஸ்ராஹியின் கூற்றுப்படி, ஜப்பானின் 'பர்ல் ஹார்பர்' தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்க இராணுவம் சந்தித்த பெரிய அழிவு இதுவேயாகும். ஆனால் பர்ல் ஹார்பர் என்பது ஒரு தாக்குதல் மாத்திரம்தான்; தற்போது ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் அதைவிட முற்றிலும் வேறுபட்டதும் மிகக் கடுமையானவையும் ஆகும்.
ஏன் இவற்றை செய்திகளில் காண்பதற்கில்லை?
“இந்த தகவல்களை ஏன் எம்மால் எமது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பார்க்க முடியாதுள்ளது?” என்று நீங்கள் கேட்கலாம். 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த முதலாவது ஈராக் யுத்தம் நினைவிருக்கிறதா? அப்போது ஒவ்வொரு இரவும் “ஸ்மார்ட் குண்டுகள்” விழுவது, அமெரிக்க போர் விமானங்கள் ஈராக் வானில் வட்டமடிப்பது போன்ற காட்சிகளை எமது தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது. ஆனால் இன்று? இன்று ஒரு பெரிய அமைதியே நிலவுகிறது.
இந்த அமைதிக்குக் காரணம் என்ன? அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள கடுமையான தகவல் கட்டுப்பாடுகளேயாகும் என மிஸ்ராஹி கூறுகிறார். “தகவல்கள் வெளிவருவது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலகின் மிகப் பலம் பொருந்திய வான்படை என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்க விமானங்களில் ஒன்றேனும் ஈரான் வான்வெளியில் பறப்பதை காட்டும் எந்த வீடியோவும் இதுவரையில் இல்லை. அப்படியானால் எங்கே போனது அந்த மகா பலம் ?” என்று அவர் கேட்கிறார்.
நடந்து கொண்டிருப்பது என்ன?
இப்போது அமெரிக்க வீரர்கள் ஈரான் மண்ணில் காலடி வைப்பதை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அவர்களின் பெரிய தாக்குதல் திறன் ஈரானின் பாதுகாப்பு வலைகளால் முடக்கப்பட்டுள்ளது. போர் எவ்வளவு மோசமான நிலைக்கு சென்றுள்ளது என்றால், தற்போதைய அமெரிக்க நிர்வாகமே பதட்டத்தில் இருப்பதாக மிஸ்ராஹி கூறுகிறார். பாரசீக வளைகுடாவிலிருந்து செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க அமெரிக்க யுத்தக் கப்பல்களை அனுப்புவதற்கு அவர்கள் யோசிக்கின்றனர்.
“இது எந்தளவு நகைப்புக்கிடமானது?” என மிஸ்ராஹி கேட்கிறார். “ஆயிரக்கணக்கான ஈரான் ஏவுகணைகள் ஏவப்பட்ட பகுதிக்கு அமெரிக்க கப்பல்களை அனுப்புவதென்பது அவற்றை அழிக்க இடமளிப்பதற்கு சமமானதில்லையா. இப்போது ஹோர்முஸ் நீரிணையை யாராலுமே பாதுகாப்பாக கடக்க முடியாதுள்ளது.”
ஈரானின் நீண்டகாலத் தயாரிப்பு
இந்தப் போருக்காக ஈரான் இன்று அல்லது நேற்று தயாராகவில்லை. பல தசாப்தங்களாகவே இந்த நாளுக்கான திட்டமிடல்களுடன் காத்திருந்தது. அவர்களிடம் உள்ள ஏவுகணை சக்தியும், நிலத்தடியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புகளும் எளிதில் அழிக்க முடியாத அளவு ஆழமாகவும் பலமானதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
"குர்திஷ் ஆயுதக் குழுக்களை பயன்படுத்தி ஈரானை ஆக்கிமிக்க வேண்டும் என சில அமெரிக்க ஆலோசகர்கள் கூறுகின்றனர். அப்படி சொல்வதற்கு ஈரான் என்பது வரைபடத்தில் ஒரு சிறிய புள்ளி அல்ல!" எனக்கூறி மிஸ்ராஹி சிரிக்கிறார்.
“நீங்கள் ஒருபோதும் ஈரான் வரைபடத்தை பார்த்ததில்லையா? அது எவ்வளவு பெரிய நாடு என்று தெரியாதா? 10,000 பேர், 50,000 பேர், அல்லது ஒரு லட்சம் ஆயுத வீரர்கள் வந்தாலும் ஈரானால் அவர்களை விழுங்கிவிட முடியும். ஈரானை ஆக்கிரமிக்க எத்தனிப்பது மரணத்துக்கு கைலாகு கொடுப்பதற்கு சமமானது.”
அலொன் மிஸ்ராஹியின் கணிப்பு மிகவும் தெளிவானது. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் குண்டுகளை வீசி கட்டிடங்களை அழிக்க முடியும்; மில்லியன் கணக்கான பொதுமக்களை கொன்று குவிக்கவும் முடியும். ஆனால் அவர்களால் ஒருபோதுமே இந்தப் போரில் வெற்றி பெற்றுவிட முடியாது.
“அவர்கள் தொடங்கியிருப்பது முடிவுக்கு கொண்டுவர முடியாத ஒரு யுத்தமாகும். இதனா இறுதியில் அமெரிக்காவினால் மேற்காசியாவிற்கோ அதாவது, மத்திய கிழக்கிற்கோ மீண்டும் வர முடியாத நிலை உருவாகலாம். அந்தப் பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கமும் இருப்பும் நிரந்தரமாகவே முடிவுக்கு வரலாம்.”
எமது சிந்தனைக்கானது...
நண்பர்களே, இங்கே சொல்லப்படுவது உலக அரசியலில் ஒரு பெரிய திருப்பத்தைப் பற்றியதாகும். நாம் பார்க்கும், கேட்கும் ஊடகச் செய்திகளின் அடிப்படையில் மாத்திரம் உலகை புரிந்துகொள்வது போதுமானதா? மிகப் பலம்வாய்ந்த அதிகார வர்க்கத்தின் இராணுவ பலத்தை விடவும் ஒரு இனத்தின் அர்ப்பணிப்பும் பல தசாப்தங்களாக செய்துவந்த திட்டமிடலும்தான் வலிமை மிக்கது என்பதை இதன்மூலமாவது புரிந்துகொள்ள முடியாதுள்ளதா?
உங்களுடைய கருத்து என்ன? மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கம் உண்மையாகவே முடிவடையுமா? அல்லது இது ஒரு தற்காலிக பின்னடைவு மட்டும்தானா?
இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை அலோன் மிஸ்ராஹி முதலில் வெளியிட்டது அவரது அதிகாரப்பூர்வ X (முன்னாள் Twitter) கணக்கிலும் அவரது தனிப்பட்ட இணையத்தளம்/ப்ளொக் மூலமும் ஆகும். பாரம்பரிய ஊடகங்களுக்கு வெளியே சுயாதீனமாகவும் நேர்மையாகவும் கருத்துகளை வெளிப்படுத்தும் எழுத்தாளராக அவர் அறியப்படுகிறார்.
இந்த கருத்துகள் முதலில் ஆங்கிலத்தில் வெளியானது. பின்னர் அவை அரபி, பாரசீகம், ரஷ்யம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. இஸ்ரேலியராக இருந்தாலும், தனது அரசாங்கத்தையும் அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கையையும் கடுமையாக விமர்சிப்பவர் என்பதால், அவரது கருத்துகள் மேற்கத்திய பிரதான ஊடகங்களில் பெரும்பாலும் வெளியாகாது; மாற்று ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மட்டுமே காணப்படுகின்றன.
அவரது கருத்துகள் சமீபத்தில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய இராணுவ ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை. “US Military Bases in Middle East” என்ற வரைபடத்தை பார்த்தாலே அந்தத் தளங்கள் எவ்வளவு பெரிய இலக்குகளாக உள்ளன என்பதை புரிந்துகொள்ளலாம்.
இறுதியாக, “ஒரு போரில் முதன் முதலில் கொல்லப்படுவது உண்மையே” என்ற பழமொழி உள்ளது. இரு தரப்பும் தங்களுக்கு சாதகமாக தகவல்களை பரப்பும் சூழலில், புத்திசாலி வாசகர்களாக நாம் செய்ய வேண்டியது எல்லா தகவல்களையும் ஒப்பிட்டு ஆராய்வதே.
சிங்களத்தில்: Sagara Diyagama #👨மோடி அரசாங்கம்


