நிறத்தில் என்ன இருக்கிறது?
மனதை மிகவும் பாதித்த விசயமும் கூட...
உலகில் மனிதர்கள் மத்தியில் மதம், இனம், மொழி, பண்பாடு இவற்றில் உள்ள வேறுபாடு கடந்து நிறத்தில் வேறுபாடு காணப்படுகிறது. நிறத்தில் வேறுபாடுதான் உலகில் பல புரட்சிகளுக்கும் விடுதலைப் போராட்டங்களுக்கும் வித்திட்டது.
அழகு என்று வரும் போது முதலாவதாக முன் வைக்கப்படுவது தோல் நிறம் தான். பெண்களுக்கான சிவப்பு அழகு பசைகளால் ஐந்து அல்லது ஆறு வாரங்களில் சிவப்பாகி விடலாம் என்று பொய் விளம்பரங்களால் விளைவது சொறி, முகப்பரு போன்ற சரும நோய்களே.
இதனால் சிவப்பு நிறம் தான் உயர்ந்தது என்ற மாயையை விதைத்து தாழ்வு மனப்பான்மையை வளர்க்கின்றனர். சமீபகாலமாக ஆண்களுக்கான சிவப்பு அழகு பசைகளும் சந்தைக்கு வந்துவிட்டன.
வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற வசனத்தை வைத்து மனித மனங்களில் வேற்றுமையை ஏற்படுத்துகிறார்கள்.
நம் தோலின் நிறம் மரபணுவால் தீர்மானிக்கப்படுகிறது.தோலின் நிறத்தை நிர்ணயிப்பது மெலனின் எனும் நிறமிகள் தான்.
மெலனின் அதிகம் உள்ளவர்கள் கறுப்பாகவும் குறைவாகவுள்ளவர்கள் வெளுப்பாகவும் உள்ளனர்.
மேலும் இந்த மெலனின் தான் சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்கள் தோலுக்குள் ஊடுருவும் அளவை கட்டுப்படுத்துகின்றன.
சுருக்கமாக சொன்னால் வெள்ளையாக இருப்பவர்களை விட கருப்பாக இருப்பவர்களுக்கு இயற்கை கூடுதல் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
தோலின் நிறத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கல்வி அறிவியல் விளையாட்டு கலை சினிமா அரசியல் உள்ளிட்ட எண்ணற்ற துறைகளில் சாதித்தவர்கள் ஏராளமானோர்.
அழகு என்பது நிறம் சார்ந்ததல்ல அது மனம் சார்ந்ததல்ல அது மனம் சார்ந்தது என்பதை நாம் உணர வேண்டும்.
எந்த நிறமாக இருந்தாலும் நன்றாக படித்து சொந்த காலில் நிற்கும் போது அவர்களுடைய அறிவும் தன்னம்பிக்கையும் தான் அவர்களுக்கு அழகைத்தருகிறது. #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

