ShareChat
click to see wallet page
search
#நல்லதே பேசு நல்லதே நினை தின வாழ்த்து தெரிவித்தார் முனைவர் ச.சு. ஜைனுதீன் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது: “தாய்மை என்ற அருமை இல்லாமல் அடுத்த தலைமுறை இல்லை; பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை. விடியாத இரவு இல்லை போல, பெண்களால் முடியாததும் எதுவும் இல்லை. தன்னம்பிக்கையுடன் உயர்ந்து நிற்கும் பெண்களுக்கும், பெண் என்பதே ஒரு பெருமை. அன்பு, தைரியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவமாக இருக்கும் பெண்கள், அள்ளிக் கொடுத்து அன்பை பகிர்ந்து, தேவைப்படும் போது ஆறுதலாக நின்று, வாழ்நாள் முழுவதும் குடும்பத்தின் தூணாக திகழ்கின்றனர். நிபந்தனையற்ற நேசத்தையும் அளவற்ற பாசத்தையும் பொழியும் அனைத்து பெண்களும், நதி போல இடையறாது ஓடி வாழ்க்கையை முன்னேற்றுகின்றனர். பெண்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று மகிழ வாழ்த்துக்கள். அனைவருக்கும் முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நல்லதே பேசு நல்லதே நினை - ShareChat