இந்த ஆண்டின் மிகச்சிறந்த முட்டாள்தனமான முடிவென்று ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், அது அமெரிக்கா தனது USS Abraham Lincoln விமானம் தாங்கிப் போர்க்கப்பலை ஈரானுக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தியதைச் சொல்லலாம்.
இது ஒரு தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது என்று சொன்னால் அது மிகையாகாது.
இதற்கு மிக முக்கியமான காரணம்: ஈரானின் அசுரத்தனமான ட்ரோன் (Drone) தொழில்நுட்பம்.
ஈரானிய ட்ரோன் தொழில்நுட்பத்தின் ஆழம் தெரியாமல் அமெரிக்கா காலை விட்டு ஆழம் பார்க்க முற்பட்டுள்ளது.
இதை விளக்கும் முன், ஒரு வரலாற்றை நாம் நினைவு கூர வேண்டும்.
அதுதான் அமெரிக்காவையே அதிரவைத்த அந்த 2011 சம்பவம்.
ஈரானின் இன்றைய ட்ரோன் பலத்திற்கு அடித்தளமிட்டது அமெரிக்காவின் அவமானம் மிக்க ஒரு மிகப்பெரிய சறுக்கல் தான்.
அமெரிக்காவின் அதிநவீன உளவு ட்ரோனான Lockheed Martin RQ-170 Sentinel, ஈரானிய எல்லைக்குள் நுழைந்தபோது, ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் அதன் கட்டுப்பாட்டு அமைப்பிற்குள் ஊடுருவி (Electronic hijacking), அதை எவ்வித சேதமுமின்றி பத்திரமாக தரையிறக்கினர்.
உலகமே வியக்கும் வண்ணம், அந்த அதிநவீன ட்ரோனை முழுமையாக ஆய்வு செய்து (Reverse-engineering), அதன் நகலாக Shahed 171 Simorgh என்ற புதிய வகை ட்ரோனை ஈரான் உருவாக்கியது.
அமெரிக்காவின் ரகசிய தொழில்நுட்பத்தையே அமெரிக்காவிற்கு எதிராகத் திருப்பும் வித்தையை அன்று ஈரான் உலகிற்கு நிரூபித்தது.
போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்தவன் என்றவகையில் எனது கணிப்பின்படி, ஒருவேளை யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால், சில மணிநேரங்களிலேயே அமெரிக்காவின் பிரம்மாண்டமான Abraham Lincoln கப்பல் கடலுக்கு அடியில் சங்கமிக்க அதிக வாய்ப்புள்ளது.
அதற்கு மிக முக்கியமான காரணம் ஈரானின் Swarm Drone Technology.
"ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஒரு தேனீக் கூட்டம் போல பாய்ந்து வரும்போது, உலகின் எவ்வளவு பெரிய பாதுகாப்பு அமைப்பாக இருந்தாலும் நிலைகுலைந்து போகும்."
அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் (Missile Defense Systems) மிக வலிமையானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஈரானின் மலிவான மற்றும் அதிவேக ட்ரோன்கள் ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் தாக்கும்போது, அமெரிக்காவின் ரேடார் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் அவை அனைத்தையும் இடைமறிக்க முடியாது.
ஈரானின் ட்ரோன்கள் வெறும் உளவு பார்ப்பதோடு நின்றுவிடாமல், வெடிமருந்துகளைச் சுமந்து கொண்டு தற்கொலைப்படைத் தாக்குதல் (Kamikaze Drones) நடத்துவதில் வல்லமை பெற்றவை.
அமெரிக்கா ஒரு ட்ரோனைச் சுட்டு வீழ்த்த பயன்படுத்தும் ஏவுகணையின் விலை பல மில்லியன் டாலர்கள். ஆனால், ஈரானின் ஒரு ட்ரோனின் விலை மிகக் குறைவு.($20,000).
ரேடார்களில் சிக்காமல் பறக்கும் (Stealth) தொழில்நுட்பத்தில் ஈரான் இன்று ரஷ்யாவிற்கே ட்ரோன்களை வழங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
பாரசீக வளைகுடா (Persian Gulf) என்பது புவியியல் ரீதியாக மிகவும் குறுகலான ஒரு பகுதி. இவ்வளவு சிறிய பரப்பளவிற்குள் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலைக் கொண்டு வந்து நிறுத்துவது என்பது, ஒரு குறுகிய அறைக்குள் ஒரு பெரிய யானையை நிற்க வைத்துவிட்டு, அதைச் சுற்றி நூற்றுக்கணக்கான தேனீக்களை ஏவிவிடுவதற்கு சமம்.
யானை எவ்வளவு பலமானதாக இருந்தாலும், தேனீக்களின் தாக்குதலில் இருந்து அதால் தப்பிக்க முடியாது.
அமெரிக்கா தனது பலத்தைக் காட்ட விரும்பி, தனது கப்பலை ஈரானின் ஏவுகணைகளுக்கும் ட்ரோன்களுக்கும் மிக எளிய இலக்காக (Sitting Duck) மாற்றிவிட்டது.
ஈரானின் வீட்டு வாசலுக்கே வந்து, அவர்களின் பலமான ட்ரோன் தாக்குதல் எல்லைக்குள் கப்பலை நிறுத்தியது அமெரிக்காவின் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ராஜதந்திர மற்றும் இராணுவத் தோல்வியாகும்.
ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஈரான் அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியை உணராமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அமெரிக்காவிற்கு ஒரு கசப்பான பாடத்தை புகட்டப்போவது உறுதி.
படித்ததில் பகிர்வது. #👨மோடி அரசாங்கம்


