🔱🕉️🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱 🕉️ 🔱
🔱🕉️🔱தென்னிலங்கையரை யன்வரைபற்றி
எடுத்தான்முடி திண்தோள்
தன்குலங்குவிர லால்நெரிவித்துஇசை
கேட்டுஅன்றுஅருள் செய்த
மின்இலங்குசடை யான்மடமாதொடு
மேவும்இடம் என்பர்
பொன்இலங்குமணி மாளிகைமேல்மதி
தோயும்புக லூரே.🔱🕉️🔱
🪷🪷🪷பொருள் : 🪷🪷🪷
🔱🕉️🔱தென்னிலங்கையின் அதிபதியாகிய இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுக்கும் போது அம்மலையின் மீது எழுந்தருளியுள்ள ஈசன், மலையைப் பெயர்த்த அரக்கனுடைய முடியும் உறுதியான தோள்களும் நெரிய அடர்த்து, பின்னர் அவ்வரக்கன் பக்தியால் எழுப்பிய இசையில் மகிழ்ந்து அருள் புரிந்தான். அப்பெருமான் உமாதேவியுடன் மேவும் இடம் பொன்னும் மணியும் திகழும் மாளிகையின் மேல் குளிர்ந்த நிலவு தோயும் புகலூர்🔱🕉️🔱
🕉️திருச்சிற்றம்பலம் 🕉️ #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய
00:27

