.
வாழ்கவளமுடன்.
உலகமே நமக்காகப் படைக்கப்பட்டது தான்
எல்லா வாய்ப்புகளும் நம்மைச் சுற்றியே இருக்கின்றன.
பிறரை எதிர்பார்த்துக் காத்திருப்பதை விட
நாமே முயன்றால் எதையும் வெல்ல முடியும்
ஜெயித்தவர்களிடம் அப்படி என்ன தான் இருக்கிறது......???
சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது
வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது
வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது
அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது
அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது
வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது
வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது
உணவு, உறக்கம் இவற்றைக் கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது
தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது
அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது
தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது
தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது
சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப் போகும் அடக்கம் இருக்கிறது. சிறுசிறு மாற்றங்கள் ஒருசேரத் தரும் பலன் மிகப் பெரியதாக இருக்கும்.சிறிய விஷயம் என்று தள்ளிப் போடாமல் இன்றே இனிதே துவங்குவோம்.
முயற்சி அது நாளை உங்கள் வாழ்க்கைக்கான பெரியதொரு விடியலுக்கான அஸ்திவாரமாக அமையும். 😊😊😊 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #பொழுது போக்கு


