ShareChat
click to see wallet page
search
எது இல்லையென்று தவித்தோமோ அது விரும்பி கிடைத்தாலும் வேண்டாமென்று சொல்லும் காலம் வரும். எதற்கு ஏங்கி உயிரை விட்டோமோ அதுவே கிடைத்தாலும் உதாசீனபடுத்தும் காலம் வரும். இது இல்லையென்றால் நாம் இல்லை என்று எதை நினைத்தோமோ அது இல்லையென்று ஆனபின்னும் வாழும் காலம் வரும். நூறு ஆண்டுகள் இணைபிரியா வாழ்க்கை வாழ வேண்டுமென யாரிடம் சத்தியம் செஞ்சோமோ அவர் முன்பின் அறியாதவர் போல எதிரில் செல்லும் காலம் வரும். எதையெல்லாம் வேண்டாமென தள்ளி வைக்க அரும்பாடு பட்டோமோ அதெல்லாம் அருகிலியே வாழும் காலம் வரும். எந்த ஒரு பிரிவுக்காக உயிரை விட்டு அழுதோமோ அதெல்லாம் 'ஒரு காலத்தில் விரும்பினேன்' என்று நினைக்கும் காலம் வரும். இன்று இருப்பது நாளை இல்லை நாளை இருப்பது இன்று இல்லை நேற்று என்பது நேற்று தான் முடிந்த ஒன்று. நாளை என்பது நாளை தான் இன்னும் வரவே இல்லை. நேற்றைய நானும் இன்றைய நானும்கூட ஒன்றில்லை என்றபோது எல்லாம் ஒரே மாதிரி நடக்கும் பிடித்த மாதிரி நடக்கும் நினைத்த மாதிரி நடக்கும் என்று சொல்ல நாம் யார்? காலங்கள் கைபிடித்து அழைத்துச்செல்லும். எவர் வருவர் எவர் வரமாட்டாரென காலம் தான் முடிவு செய்யும் நீயும் நானும் அல்ல.. #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #⚡️Trending Quotes✍️ #👌அருமையான ஸ்டேட்டஸ்