உறவுகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு,ஆனால், அந்த வேறுபாடுகளை நாம் கையாளும் விதம் தான் அந்த உறவு நம்மை வளர்க்கிறதா அல்லது வதைகிறதா என்பதைத் தீர்மானிக்கிறது...
உறவில் கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவில்லாத போர் போலவே இருக்கும்,
சில உறவுகளில், நீங்கள் ஒரு மாற்றுக் கருத்தைச் சொன்னால் அது உடனே ஒரு போராக உருவெடுக்கும், இங்கே நோக்கம் தீர்வை நோக்கியது அல்ல, மாறாக உங்களை மண்டியிடச் செய்வது மட்டுமே...
நீங்கள் ஒரு வலியைப் பற்றிப் பேச ஆரம்பிப்பீர்கள், ஆனால் அவர்கள் சட்டென்று அன்று நீ செய்த தவறு என்ன தெரியுமா என்று பழைய கதையைத் தோண்டுவார்கள், உங்கள் உணர்வுகள் அங்கே காணாமல் போய்விடும்...
உங்கள் கருத்தைச் சொன்னதற்காக உங்களிடம் பேசாமல் இருப்பது, உங்களைப் புறக்கணிப்பது, அல்லது உங்களைக் குற்ற உணர்வுக்குள்ளாக்குவது, போன்ற தண்டனைகள் வழங்கப்படும்...
அவர்களை யாராவது கேள்வி கேட்டால், அதை ஒரு பெரிய பிரச்சினையாக அவர்கள் உணர்வார்கள்,
நான் எப்போதும் தப்பு செய்பவனா... என்ற கேள்வியின் மூலம் உங்களை வாயடைக்கச் செய்வார்கள்...
இத்தகைய சூழலில் இருப்பவர்கள் காலப்போக்கில்...
பேசாமல் இருப்பதே மேல்என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள், தன் குரலைத் தானே நெரித்துக் கொள்வது அவர்களது தந்திரமாக மாறிவிடுகிறது...
ஆரோக்கியமான உறவில் கருத்து வேறுபாடுகள், மனங்களின் சங்கமம்
ஆரோக்கியமான மனநிலை கொண்ட ஒருவரிடம் கருத்து வேறுபாடு என்பது ஒரு உரையாடல், அங்கே இருவருமே ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிடுவதில்லை, மாறாக இருவரும் சேர்ந்து அந்தப் பிரச்சனைக்க எதிராகப் போராடுகிறார்கள்...
நீ சொல்வது எனக்குப் புரிகிறது, என் செயல் உன்னை இப்படி காயப்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை, இதைப் பற்றி இன்னும் விரிவாகச் சொல்.. என்று அவர்கள் இடமளிப்பார்கள்...
ஒரு விஷயத்தில் இருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம், ஆனால்,
உன் கருத்து எனக்குச் சம்மதமில்லை என்றாலும், உன்னை நான் மதிக்கிறேன், என்ற பக்குவம் அங்கே இருக்கும்...
இந்த மோதல்கள் உறவை உடைக்காமல், ஒருவரைப் பற்றி ஒருவர் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன,ஒவ்வொரு விவாதத்திற்குப் பிறகும் அந்த உறவு இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருக்கும்...
நாம் ஏன் அமைதியைக் கடனாக வாங்குகிறோம்,
நமது குரல் ஒடுக்கப்படும்போது, நாம் ஒரு இருள் வட்டத்திற்குள் சிக்கிக்கொள்கிறோம், நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில், நம்முடைய உண்மையான உணர்வுகளைப் புதைத்து விடுகிறோம்...
ஒரு கட்டத்தில், சண்டை என்றால் இப்படித்தான் வலிக்கும், இப்படித்தான் ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ள வேண்டும், என்ற தவறான புரிதல் நமக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது...
கருத்து வேறுபாட்டின் போது நீங்கள் பாதுகாப்பற்ற உணர்வையும், அவமானத்தையும், தனிமையையும் உணர்ந்தால், அந்த உறவின் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது...
நினைவில் கொள்ளுங்கள், உங்கள் குரல் என்பது உங்களின் அடையாளம், உங்களை நேசிக்கும் ஒருவர் உங்கள் குரலை மதிக்கத் தயங்க மாட்டார், உங்களை நீங்களே தண்டித்துக் கொள்ளும் அமைதிbயை விட, உங்கள் உணர்வுகளை மதிக்கும் ஆரோக்கியமான மோதல் எவ்வளவோ மேலானது...
வாழ்க்கையில் உங்களைப் பக்குவப்படுத்தும் மனிதர்களைத் தேடுங்கள், உங்களைப் பயமுறுத்தி பணிய வைப்பவர்களை அல்ல, கருத்து வேறுபாடு ஏற்படும்போது அங்கே கசப்புக்கு பதிலாகக் கருணை இருக்கிறதா என்று பாருங்கள்,
அதுவே உங்கள் மனநலத்தைக் காக்கும்... ✍️
மனால்றியா அம்மு #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓