💞💞💞
ShareChat
click to see wallet page
@607240774
607240774
💞💞💞
@607240774
I Love Sharechat :)
உறவுகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு,ஆனால், அந்த வேறுபாடுகளை நாம் கையாளும் விதம் தான் அந்த உறவு நம்மை வளர்க்கிறதா அல்லது வதைகிறதா என்பதைத் தீர்மானிக்கிறது... உறவில் கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவில்லாத போர் போலவே இருக்கும், சில உறவுகளில், நீங்கள் ஒரு மாற்றுக் கருத்தைச் சொன்னால் அது உடனே ஒரு போராக உருவெடுக்கும், இங்கே நோக்கம் தீர்வை நோக்கியது அல்ல, மாறாக உங்களை மண்டியிடச் செய்வது மட்டுமே... நீங்கள் ஒரு வலியைப் பற்றிப் பேச ஆரம்பிப்பீர்கள், ஆனால் அவர்கள் சட்டென்று அன்று நீ செய்த தவறு என்ன தெரியுமா என்று பழைய கதையைத் தோண்டுவார்கள், உங்கள் உணர்வுகள் அங்கே காணாமல் போய்விடும்... உங்கள் கருத்தைச் சொன்னதற்காக உங்களிடம் பேசாமல் இருப்பது, உங்களைப் புறக்கணிப்பது, அல்லது உங்களைக் குற்ற உணர்வுக்குள்ளாக்குவது, போன்ற தண்டனைகள் வழங்கப்படும்... அவர்களை யாராவது கேள்வி கேட்டால், அதை ஒரு பெரிய பிரச்சினையாக அவர்கள் உணர்வார்கள், நான் எப்போதும் தப்பு செய்பவனா... என்ற கேள்வியின் மூலம் உங்களை வாயடைக்கச் செய்வார்கள்... இத்தகைய சூழலில் இருப்பவர்கள் காலப்போக்கில்... பேசாமல் இருப்பதே மேல்என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள், தன் குரலைத் தானே நெரித்துக் கொள்வது அவர்களது தந்திரமாக மாறிவிடுகிறது... ஆரோக்கியமான உறவில் கருத்து வேறுபாடுகள், மனங்களின் சங்கமம் ஆரோக்கியமான மனநிலை கொண்ட ஒருவரிடம் கருத்து வேறுபாடு என்பது ஒரு உரையாடல், அங்கே இருவருமே ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிடுவதில்லை, மாறாக இருவரும் சேர்ந்து அந்தப் பிரச்சனைக்க எதிராகப் போராடுகிறார்கள்... நீ சொல்வது எனக்குப் புரிகிறது, என் செயல் உன்னை இப்படி காயப்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை, இதைப் பற்றி இன்னும் விரிவாகச் சொல்.. என்று அவர்கள் இடமளிப்பார்கள்... ஒரு விஷயத்தில் இருவருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம், ஆனால், உன் கருத்து எனக்குச் சம்மதமில்லை என்றாலும், உன்னை நான் மதிக்கிறேன், என்ற பக்குவம் அங்கே இருக்கும்... இந்த மோதல்கள் உறவை உடைக்காமல், ஒருவரைப் பற்றி ஒருவர் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன,ஒவ்வொரு விவாதத்திற்குப் பிறகும் அந்த உறவு இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருக்கும்... நாம் ஏன் அமைதியைக் கடனாக வாங்குகிறோம், நமது குரல் ஒடுக்கப்படும்போது, நாம் ஒரு இருள் வட்டத்திற்குள் சிக்கிக்கொள்கிறோம், நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில், நம்முடைய உண்மையான உணர்வுகளைப் புதைத்து விடுகிறோம்... ஒரு கட்டத்தில், சண்டை என்றால் இப்படித்தான் வலிக்கும், இப்படித்தான் ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ள வேண்டும், என்ற தவறான புரிதல் நமக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது... கருத்து வேறுபாட்டின் போது நீங்கள் பாதுகாப்பற்ற உணர்வையும், அவமானத்தையும், தனிமையையும் உணர்ந்தால், அந்த உறவின் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது... நினைவில் கொள்ளுங்கள், உங்கள் குரல் என்பது உங்களின் அடையாளம், உங்களை நேசிக்கும் ஒருவர் உங்கள் குரலை மதிக்கத் தயங்க மாட்டார், உங்களை நீங்களே தண்டித்துக் கொள்ளும் அமைதிbயை விட, உங்கள் உணர்வுகளை மதிக்கும் ஆரோக்கியமான மோதல் எவ்வளவோ மேலானது... வாழ்க்கையில் உங்களைப் பக்குவப்படுத்தும் மனிதர்களைத் தேடுங்கள், உங்களைப் பயமுறுத்தி பணிய வைப்பவர்களை அல்ல, கருத்து வேறுபாடு ஏற்படும்போது அங்கே கசப்புக்கு பதிலாகக் கருணை இருக்கிறதா என்று பாருங்கள், அதுவே உங்கள் மனநலத்தைக் காக்கும்... ✍️ மனால்றியா அம்மு #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓
ஆண்களில் சிலர் பொதுவாக ஆலோசனைகளை தேடுவதில்லை, மாறாக, தங்கள் பொய்களை அறியாத ஒரு புதிய பெண்ணைத் தேடிச் செல்கிறார்கள், இதன் மூலம் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் தப்பித்துக்கொள்கிறார்கள்... அவர்கள் தங்களின் உணர்ச்சிக் சுமைகளையும் ஆழமான பாதுகாப்பற்ற தன்மையையும், விஷம் வாய்ந்த நடத்தைகளையும் எதிர்கொள்வதைத் தவிர்க்கிறார்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவான, அழகான தோற்றம் அல்லது சாதுர்யமான பேச்சால் மறைத்துவிட்டு, அடுத்த அப்பாவிப் பெண்ணை நோக்கி நகர்கிறார்கள்... அவர்கள் தங்கள் அகோரங்களை எதிர்கொள்வதில்லை, மாறாக, தங்கள் இடங்களை மட்டுமே மாற்றிக்கொள்கிறார்கள்... இதுவே மாறி மாறி மீண்டும் தொடர்கிறது, இது உடைந்த இதயங்களையும், குழப்பமடைந்த பெண்களையும் மட்டுமே விட்டுச் செல்கிறது, அதே சமயம், அந்த ஆண்கள் தங்கள் குறைகளையும் தவறுகளையும் ஒப்புக்கொள்ள மறுத்து, தேக்க நிலையிலேயே இருக்கிறார்கள்... அவர்கள் சுய முன்னேற்றத்தை விட தங்கள் ஈகோவுக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள், அவர்களின் பொறுப்பற்றத் தன்மை இந்த விஷ சுழற்சியைத் தொடரச் செய்கிறது... அவர்கள் உதவியைத் தேடுவதில்லை, மாறாக, தங்கள் தவிர்ப்புப் பண்பை ஆதரிக்கும் ஒருவரைத் தேடுகிறார்கள், அவர்கள் ஒரு நிலைக்கு மேல் வீழ்ச்சியைச் சந்திக்கும் வரை அல்லது தங்கள் பிரச்சினைகளைத் தைரியமாக எதிர்கொள்ள முடிவு செய்யும் வரை, ஒரு உறவிலிருந்து மற்றொரு உறவிற்குத் தாவிக் கொண்டே இருப்பார்கள்... அவர்கள் ஒருபோதும் உண்மையாகக் தன்னை மாற்றி கொள்வதோ அல்லது புரிந்து கொள்வதோ இல்லை... சகோதரிகளே , இதன் அறிகுறிகளைக் கண்டறிந்து உங்கள் நிம்மதியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், மாற மறுக்கும் ஒரு சின்ன புத்திக்காரனை 'விடச் சிறந்த ஒருவருக்கு நீங்கள் தகுதியானவர்கள்... மாற்றத்தைத் தவிர்க்கும் நபர்கள் பெரும்பாலும் பழியை மற்றவர்கள் மீது சுமத்திவிட்டு புதிய இடங்களுக்குத் தப்பிச் செல்வார்கள், ஆனால், எல்லா ஆண்களும் இப்படி இருப்பதில்லை என்பதும், தங்களைத் திருத்திக்கொண்டு முன்னேற நினைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதும் நம்பிக்கையூட்டும் விஷயம்... உங்களை நீங்களே தற்காத்துக் கொள்வதும், உங்கள் எல்லைகளை வகுத்துக் கொள்வதும் மிகவும் அவசியம்... ✍️ மனால்றியா அம்மு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💪Motivational Quotes
7ஒரு பெண் பேசும்போது... எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெண் வாதிடும்போது... எல்லாம் நன்றாக இருந்தாலும், ஏதேனும் தவறு இருக்கலாம் நம்புங்கள். ஆனால்... ஒரு பெண் அமைதியாக இருக்கும்போது... ஏதோ பெரிய தவறு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு பெண்ணுக்கு மௌனம்தான் அவளுடைய கடைசி வழி. அவள் பேசுகிறாள், விளக்கம் அளிக்கிறாள், சமாதானப்படுத்துகிறாள், சமரசம் செய்கிறாள், வாதாடுகிறாள், அழுகிறாள். ஆனால்... எல்லாம் அர்த்தமற்றது, முற்றிலும் வீண் என்று அவள் உணரும்போது, அவள் மௌனத்தைத் தேர்ந்தெடுத்து தனக்குள் ஒதுங்கிக் கொள்கிறாள். ஒரு பெண் வெளியில் அமைதியாகத் தோன்றுவது எப்போது என்று உங்களுக்குத் தெரியுமா? அது அவள் உள்ளுக்குள் உடைந்து, சிதைந்து, முற்றிலும் இனி முடியாது, என்ற பேரழிவிற்கு உள்ளாகும் போது. ஒரு பெண்ணின் மௌனத்தை ஒருபோதும் இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால்... ஆழமாக நேசிக்கக்கூடிய பெண், தான் மிகவும் நேசிக்கும் நபர் இல்லாமல் வாழ்வது, தாங்க முடியாத நரகம் என்று கருதுகிறாள். வாழ்த்துக்கள் நண்பர்களே. புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓
அவர் என்னை நேசித்தார். எனக்குத் தெரியும். மறுக்கவில்லை. ஆனால் காதல் அவரது பிரச்சினையாக இருக்கவில்லை. நிலைத்தன்மை(Consistency) தான் பிரச்சினையாக இருந்தது. அவர் இரண்டு வாரங்களுக்கு அன்பாக, அற்புதமாக இருப்பார்... பின்னர் மூன்று நாட்கள் அவரிடம் எதுவும் இருக்காது. நான் கேட்பேன், அவர் தன்னை மாற்றிக் கொள்வதாக உறுதியளிப்பார்... பின்னர் மீண்டும் விஷயங்கள் கடினமாகும் அமைதியாகிவிடுவார். அவர், "நான் உன்னை இழக்க விரும்பவில்லை" என்று கூறுவார். ஆனால் என்னை இழக்கச் செய்கின்ற அவரது நடவடிக்கையை மாற்றவும் மாட்டார். ஒரு நாள் நான் அவரிடம் சொன்னேன்: "நான் போய்விடுவேன் என்று பயந்துகொண்டு நீ என்னை நேசித்துக்கொண்டு இருக்கிறாய்... ஆனால் உனது நடவடிக்கையெல்லாம் நான் போனாலும் பரவாயில்லை என்பது போல் உள்ளது." அவர் என்னை முறைத்துப் பார்த்தார். அவர் என்னுடன் வாதிடவில்லை. ஏனென்றால் உள்ளுக்குள், அவருக்குத் தெரியும். அவர் செய்வது manipulation. நான் இறுதியாக விலகிச் சென்றபோது, அவர் கூறினார்: "நான் இன்னும் தயாராக இல்லை. எனக்கு நேரம் வேண்டும் " நான் பதிலளித்தேன்: "நான் யாருக்காகவும் காத்திருக்க படைக்கப்படவில்லை. எனக்கும் ஒரு வாழ்க்கை உண்டு. " அதைவிட "ஒரு ஆண் கொடுக்க வேண்டிய நம்பிகையை நீங்கள் கொடுக்க தவறி விட்டீர்கள். உங்களுக்கு மட்டுமே முன்னுரிமை இருக்கும் இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை." அதுதான் எங்களின் கடைசி உரையாடல். இது அவர்களின் பிரச்சினை மட்டுமல்ல. இங்கு பெரும்பாலானவர்களின் பிரச்சனை. #unfilteredbyak #ak #storiezbyak #ajaykumarperiyasamy #positivemindset #ammikalammamasala #akshinifoodz #optimization #elimination #successmindset #relationshipconsultant #familycounselor #mindsetcoach #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
வலி உண்மையானது ஆனால், அது கற்றுக்கொடுத்த பாடமும் உண்மையானது... இதயங்கள் உடையும்போது, அது நம்மிடம் இருக்கும் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது... உங்கள் முடிவுகளை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள், உங்கள் மதிப்பைப் பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள், ஒரு காலத்தில் மிகச் சரியாகத் தெரிந்த ஒன்று, இவ்வளவு ஆழமான காயத்தை எப்படி ஏற்படுத்தியது என்று நீங்கள் வியக்கிறீர்கள்... சில இரவுகளில், நினைவுகளை விட அமைதி அதிக சத்தமாகத் தோன்றும், எப்போது விஷயங்கள் மாறத் தொடங்கின என்பதைத் தேடி, பழைய msg களை மீண்டும் ஓட்டிப் பார்க்கிறீர்கள்... அறிகுறிகளை கவனிக்கத் தவறிவிட்டோமா, அதிகமாகக் கொடுத்துவிட்டோமா, அல்லது அங்கேயே ரொம்ப காலம் தங்கிவிட்டோமா, என்று நீங்கள் யோசிக்கிறீர்கள்... ஆனால் வலி உண்மையானது, அது எதிர்பாராத தருணங்களில் வெளிப்படுகிறது. பழகிய இடங்களில்... வலிக்காது என்று நீங்கள் நினைத்த எல்லாம், முன்பு நம்பிக்கை குடியிருந்த இடங்களில் அது தங்கியிருக்கிறது... ஆனால், இதயம் உடைந்து போவது வலியை மட்டும் விட்டுச் செல்வதில்லை... அங்கு ஒரு பாடமும் இருக்கிறது உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பாடம், உங்களுக்கு எது தகுதியானது என்பதைப் பற்றிய பாடம், தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், சகித்துக் கொள்ளப்படுவதற்கும் இடையிலான வித்தியாசத்தைப் பற்றிய பாடம்... இதய வலி உங்களுக்குத் தெளிவான பார்வையைத் தருகிறது, அது கனவுகளை நீக்குகிறது, யார் உங்களுடன் தங்குவதற்குத் தயாராக இருந்தார்கள், யார் கடந்து போனவர்கள் என்பதை அது வெளிப்படுத்துகிறது, வெறும் வார்த்தைகளுக்கும், வாழ்ந்து காட்டிய உறவுக்கும் உள்ள வித்தியாசத்தை அது காட்டுகிறது... இழப்புகளை உங்களால் தாங்கி உயிர்வாழ முடியும் என்பதை அது உங்களுக்குக் கற்பிக்கிறது, மற்றவர்கள் தங்குவதைச் சார்ந்து உங்கள் அடையாளம் இல்லை என்பதும், ஒருவரால் உங்கள் மதிப்பை அடையாளம் காண முடியவில்லை என்பதற்காக உங்கள் மதிப்பு குறைந்துவிடாது என்பதும் உங்களுக்குப் புரிகிறது... வலி உண்மையானது. ஆனால் உங்கள் பலமும் உண்மையானது தானே... நீங்கள் இப்போதும் இங்கேயே இருக்கிறீர்கள், நிமிர்ந்து நில்லுங்கள், இப்போது உங்கள் இதயம் சற்று எச்சரிக்கையாக இருக்கும்... ஆறுதல் அடைவது என்பது மறப்பது என்று பொருளல்ல, அது புரிந்துகொள்வது. கசப்பான நினைவுகளைச் சுமக்காமல், அதன் பாடத்தை மட்டும் சுமந்து செல்வதே உண்மையான ஆறிப்போன காயம்... ஒரு நாள், நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது ஒன்று புரியும், இந்த இதயம் உடைந்த தருணம் உங்களை அழித்துவிடவில்லை, மாறாக உங்களைச் செதுக்கியிருக்கிறது, நிலைத்து நிற்கும் அன்பை அடையாளம் காண அது உங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது... உங்கள் மதிப்பைக் கேள்விக்குள்ளாக்கிய அந்த உறவை அடையாளம் காட்டியது, வலி உண்மையானது, ஆனால் அந்தப் பாடம் மிக வலிமையானது...✍️ மனால்றியா அம்மு #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓
அவருக்கு msg அனுப்பாதீர்கள், அவர் உங்களைப் புறக்கணிக்கிறார் என்றால், அவருக்கான இடைவெளியைக் கொடுங்கள், ஒரு ஆண் உங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றால், அவருக்கு உங்கள் மீது ஆர்வம் இல்லை என்றுதான் அர்த்தம்... உங்களை மதிக்காத ஒருவருடன் நீங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, தன்னை விரும்பும் பெண்ணைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு ஆண் நிச்சயம் முயற்சி செய்வான்... தொலைபேசியை ஓரமாக வையுங்கள், விலகி இருங்கள், இந்த முறை மெசேஜ் அனுப்பினால் அவர் மாறிவிடுவார், என்று நினைத்து மீண்டும் மீண்டும் அழகான வரிகளைத் தயார் செய்வதை நிறுத்துங்கள், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த கசப்பான உண்மை இதுதான், அவர் உங்களிடம் பேச விரும்பியிருந்தால், இந்நேரம் பேசியிருப்பார் உங்களை வருட கணக்காக கெஞ்ச விட மாட்டார்... தாங்கள் விரும்பும் பெண்ணிடம் ஆண்கள் மிகவும் வெளிப்படையாகவே இருப்பார்கள், அவர்கள் முதலில் மெசேஜ் செய்வார்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் call செய்வார்கள், திட்டமிடுவார்கள். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தங்களுக்குப் பிடித்தமான ஒருவருடனான தொடர்பை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள், ஒரு நிமிடம் சரி அவர்களின் குரலை கேட்கவே விரும்புவார்கள்... எனவே, அவர் அமைதியாக இருக்கிறார் என்றால், பல நாட்கள் கடந்தும், பல மாதங்கள் கடந்தும், ஏன் வருடங்கள் இரண்டானாலும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்றால், அந்த #அமைதி நீங்கள் அனுப்பும் எந்தவொரு செய்தியையும் விட சத்தமாக உண்மையைச் சொல்கிறது... அவருக்கு சிக்னல் கிடைக்காமல் இல்லை, ஒரு முப்பது வினாடி மெசேஜ் செய்ய முடியாத அளவுக்கு அவர் பிஸியாகவும் இல்லை, அவர் உங்களிடம் பேச வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார், அந்த முடிவே உங்களுக்கு எல்லாவற்றையும் உணர்த்த வேண்டும்... நீங்கள் எதற்குத் தகுதியானவர், நீங்கள் அருகில் இல்லாதபோதும் உங்களைப் பற்றி நினைப்பவர் உங்களுக்குத் தேவை... #உன்_நினைவு_வந்தது என்று சொல்ல உங்களைத் தேடி வருபவர் உங்களுக்குத் தேவை... யாரையும் நீங்கள் துரத்த வேண்டியதில்லை, உங்கள் இருப்பை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய அவசியமும் இல்லை... உங்கள் கவனத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில், உங்களுக்காகத் தொடர்ந்து முயற்சி செய்யும் ஒருவரே உங்களுக்குத் தகுதியானவர்... உங்கள் இருப்பை ஒரு பொருட்டாக மதிக்காத ஒருவருக்காக உங்கள் நேரத்தைச் செலவிடாதீர்கள், உங்களுக்காக எதையும் செய்யாத ஒருவரிடம் உங்கள் ஆற்றலை வீணாக்காதீர்கள், உங்களை நோக்கி வராத ஒருவரைத் துரத்துவதை நிறுத்துங்கள்... உங்களை விரும்பும் ஒரு துணை உங்களைக் கண்டடைவார், அவர் உங்களைத் தேடி வருவார், தொடர்பு கொள்வார், உங்கள் உறவில் உங்களுக்கு இருக்கும் இடத்தை அவர் உறுதிப்படுத்துவார்... உங்களுக்கு ஒரு உறவில் சந்தேகம் வருகிறது என்றால், அங்கேயே உங்களுக்குப் பதில் கிடைத்துவிட்டது என்று அர்த்தம், தயவுசெய்து தொலைபேசியை வைத்துவிட்டு, அந்த அன்பையும் ஆற்றலையும் அதற்குத் தகுதியான ஒருவருக்காக செலவிடுங்கள்... ✍️ மனால்றியா அம்மு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓
மனசு சொல்லும், மெசேஜ் பண்ணுடா...அவங்க ஆன்லைன்ல தான் இருக்காங்க, புத்தி சொல்லும், வேண்டாம், இதுக்கு மேல அங்க மரியாதை இல்லை. மத்தவங்க கூட ஜாலியா இருக்கிறவங்களுக்கு நடுவுல உனக்கு எங்க இடம் இருக்க போகுது, புத்தி மறுபடியும் சொல்லும், மறந்துடுடா, எல்லாம் முடிஞ்சு போச்சு. இதையே நினைச்சு ஏன் இன்னும் கஷ்டப்படுற, மனசு மெதுவா சொல்லும், இன்னொரு தடவை மட்டும் ட்ரை பண்ணிப் பாரு, இந்த வாட்டி ஒருவேளை எல்லாம் சரியாகி உனக்கு காயம் படாம கூட இருக்கலாம்ல, புத்தி குறுக்க வந்து கேக்கும், உன் மேல அக்கறை இருந்தா அவங்களே உன்னைத் தேடி வந்திருக்க மாட்டாங்களா, ஒரு போன் இல்ல, ஒரு மெசேஜ் இல்ல... அப்போ அவங்க உன்னை மிஸ் பண்ணலன்னு தானே அர்த்தம், ஒண்ணா இருந்தப்பவே கண்டுக்காதவங்க, பிரிஞ்சதுக்கு அப்புறமா உன்னை நினைப்பாங்கன்னு எப்படித் தோணுது, மனசு அடம் பிடிக்கும், ஆனா அவங்க கூட இருந்த அந்த அழகான நிமிஷங்களை யோசிச்சுப் பாரு... ஒரு வாட்டி ரிஸ்க் எடுத்துப் பார்ப்போமே, புத்தி பதிலடி கொடுக்குது, அவங்களை நீ விடாத வரைக்கும், உன்னால நிம்மதியா இருக்கவே முடியாது, மனசு பழைய ஞாபகத்தை தூண்டிவிடுது, அவங்க உன்னைக் கட்டிப்பிடிச்சது, கொடுத்த முத்தம், அந்த அரவணைப்பு... அதெல்லாம் எவ்வளவு சூப்பரா இருக்கும், நீ அதைத் தானே இப்பவும் ஏங்குற.. புத்தி கோவமா கேக்குது, அப்போ அவங்க உன்னை அழ வச்சது, உன்னை நீ செய்யாத தப்புக்காக விட்டுட்டு போனது, அவளோ கெஞ்சினியே அப்போ உன் வார்த்தைகளை காது குடுத்து கேட்டாங்களா, அதெல்லாம் மறந்துட்டியா, அன்னைக்கே செட் ஆகாத விஷயம், இன்னைக்கு மட்டும் எப்படி சரியாகும்னு நினைக்கிற, கடைசியில #அவள் ஒரு பக்கம் அழகான நினைவுகளையும், இன்னொரு பக்கம் கசப்பான ஏமாற்றங்களையும் நினைச்சு குழம்பிப் போய் நிப்பாள், வெறிச்சோடிப் போன சாட் ஸ்கிரீனை #chatscreen பார்த்துக்கிட்டே, ஆன்லைன்ல இருக்குற அந்த நபர் யாரு கூட பேசிட்டு இருப்பாங்க, யாருக்காக இந்த ராத்திரி முழுக்க முழிச்சிருக்காங்கன்னு தவிச்சுப் போவாள், கடைசில விடிகாலையில ஒரு வழியா கண்ணு சொருகித் தூங்கிட்டாள், ஆனா மனசுக்கும் அறிவுக்கும் இடையில நடக்கப்போற அடுத்த நாள் போர்க்களம் அவளுக்காகக் காத்துக்கிட்டு இருக்கும்... இப்படி தான் மறக்க முடியாத ஒரு காதல் எல்லாருக்கும் இருக்கும், அது தினந்தோறும் தூங்க விடாம கொன்னுட்டே இருக்கும் மரணம் வரைக்கும்...✍️ மனால்றியா அம்மு #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💔Breakup Quotes😔
ஒரு ஆண் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கும் அதே வலியை அவள் திருப்பி தரும் போது அவனால் தாங்கிக்கொள்ள முடியாது... இதுதான் பலரும் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மை. ஒரு பெண் அழுவாள், உடைந்து போவாள், தன்னைத்தானே கேள்வி கேட்பாள், தேவையற்ற இடத்திலும் அதிக காலம் பிடிவாதமாக இருப்பாள், எப்படியாவது இதைச் சரிசெய்ய முயற்சிப்பாள்... அவள் மௌனமாக வலியைச் சுமப்பாள், மன்னிக்கக் கூடாதவற்றை மன்னிப்பாள், #ஒருவேளை... ஒருவேளை அவன் மாறிவிடுவான்" என்று நம்பிக்கொண்டிருப்பாள்.... தான் நேசிக்கும் ஒருவர் ஏன் தன்னை இப்படி காயப்படுத்துகிறார் என்று புரியாமல் தனக்குள்ளேயே போராடுவாள். கடைசியில் அவள் அந்த உறவை விட்டு விலகும்போது, ஒரு மனிதரால் தாங்கவே முடியாத அளவு வலியை அனுபவித்த பின்னரே அந்த முடிவை எடுக்கிறாள்... ஆனால் ஒரு ஆண்...? அவள் அனுபவித்த வலியில் ஒரு சிறு பகுதியை அவன் உணரும்போது... ஒரு பதில் வராத msg, தவிர்க்கப்படும் ஒரு call அல்லது அவளது நடத்தையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம்... அவன் நிலைகுலைந்து போகிறான்...... அவன் கோபப்படுகிறான், குற்றம் சாட்டுகிறான், காயப்படுகிறான். அவளைக் கண்ணுக்குத் தெரியாதவளாகவும், தகுதியற்றவளாகவும், அன்பற்றவளாகவும் உணரச் செய்த அதே ஆணால், தனது சொந்த நடத்தையின் பிரதிபலிப்பைத் தாங்க முடிவதில்லை... ஏனென்றால், ஒரு பெண் அவனுடைய அதே குணாதிசயத்தைக் காட்டத் தொடங்கும்போது, அது அவன் செய்த அனைத்தையும் அவனையே நேருக்கு நேர் பார்க்க வைக்கிறது.... அது அவனுக்குப் பாரமாகவும், சங்கடமாகவும், மிகவும் கசப்பான உண்மையாகவும் இருக்கிறது. ஆனால், அவள் அதே பாரத்தை யாரிடமும் இறக்கி வைக்காமல் மாதக்கணக்கில், ஏன் வருட கணக்கில் சுமந்தாள்? பெண்கள் வலியைத் தாங்கிக் கொள்ள வேண்டும், #தைரியமாக இருக்க வேண்டும், #மறந்துவிட வேண்டும் என்று ஆண்கள் பெரும்பாலும் எதிர்பார்க்கிறார்கள்..... ஆனால் நிலைமை மாறும்போது மட்டும் அவர்கள் உடைந்து போகிறார்கள், ஓடிவிடுகிறார்கள் அல்லது சுருண்டு விடுகிறார்கள். அதனால்தான் அவள் #மாறிவிட்டாள், என்று அவர்கள் சொல்கிறார்கள்.... ஆனால் உண்மை என்னவென்றால்... எதையும் திரும்பப் பெறாமல் எல்லாவற்றையும் உணர்ந்து அவள் சோர்வடைந்துவிட்டாள்... எனவே, ஒரு ஆணால் வலியைத் தர முடியுமே தவிர, அதைத் தாங்க முடியாது... தன்னால் ஒருபோதும் பிரியமாட்டாள் என்று அவன் நினைத்த பெண், ஒரு கட்டத்தில் வலியை விட நிம்மதியே முக்கியம் என்று தேர்ந்தெடுப்பாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை. #🚹உளவியல் சிந்தனை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💔Breakup Quotes😔 #😔தனிமை வாழ்க்கை 😓
சுயநலவாதிகளின் முதல் வெற்றி அவர்களின் முகமூடியில் இருக்கிறது. அவர்கள் உங்கள் வாழ்க்கைக்குள் வரும்போது ஒரு வசந்த காலத்தைப் போல வருவார்கள். நீங்கள் எதையெல்லாம் தேடினீர்களோ, அதையெல்லாம் தன்னிடம் வைத்திருப்பவர் போல ஒரு நாடகத்தை உருவாக்குவார்கள்... இதைத்தான் அன்புப் பொழிதல் என்பார்கள். ஆனால், அந்த அன்பு என்பது உங்களை வசப்படுத்துவதற்கான ஒரு தூண்டில் மட்டுமே. ஒரு மீன் தூண்டிலில் சிக்கியவுடன், அவர்கள் மெல்ல மெல்லத் தங்கள் வேஷத்தைக் கலைக்கத் தொடங்குவார்கள்... வெளியுலகிற்கு அவர்கள் ஒரு பண்பாளராக, தியாகியாக, அல்லது சிறந்த மனிதராக தெரிவார்கள். ஆனால், அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால், அவர்கள் உங்களை நோக்கி வீசும் ஒவ்வொரு சொல்லும் ஒரு கூர்மையான அம்பாக இருக்கும்... இரட்டை வேடம் அவர்கள் செய்யும் துரோகங்கள் அனைத்தும் தவிர்க்க முடியாதவை என்று நியாயப்படுத்தப்படும். ஆனால், நீங்கள் ஒரு சிறு தவறு செய்தாலோ அல்லது உங்கள் உரிமையை நிலைநாட்ட முயன்றாலோ, நீங்கள் ஒரு #நன்றிகெட்டவளாக சித்திரிக்கப்படுவீர்கள்... அவர்கள் மற்றவர்களுக்கு வகுக்கும் விதிகள் எதையும் தாங்கள் பின்பற்றுவதில்லை. நான் எதை வேண்டுமானாலும் செய்வேன், ஆனால் நீ என்னை எதற்கும் கேள்வி கேட்கக் கூடாது, என்பதே அவர்களின் எழுதப்படாத சட்டம்... நீங்கள் அவர்களைத் திருத்த முயலும்போது அல்லது அவர்கள் செய்த தவற்றைச் சுட்டிக்காட்டும் போது, அந்த அறையின் சூழலே நரகமாக மாறும். உங்கள் வார்த்தைகளைத் திரிப்பதிலும், உண்மையை மூடி மறைப்பதிலும் அவர்கள் சிறப்பாய் செய்வார்கள்... சுயநலவாதிகளிடம் சிக்கிய ஒரு பெண் சந்திக்கும் மிகப்பெரிய சவால் இதுதான். நீங்கள் ஒன்றை நேரில் பார்த்திருப்பீர்கள், ஆனால் அவர்கள் நீ கற்பனை செய்கிறாய், உனக்கு மனநிலை சரியில்லை, என்று அடித்துச் சொல்வார்கள். மீண்டும் மீண்டும் இப்படிச் சொல்லப்படும்போது, ஒரு கட்டத்தில் உங்கள் புத்தி மீதே உங்களுக்குச் சந்தேகம் வரும்... நான் தான் தவறாகப் புரிந்துகொண்டேனோ, அவர் நல்லவர்தான், நான்தான் தேவையில்லாமல் சந்தேகப்படுகிறேனோ, என்று உங்களை நீங்களே நொந்துகொள்ள வைப்பார்கள். உங்கள் சுயமரியாதையை அணு அணுவாகச் சிதைத்து, உங்களை ஒரு பலவீனமானவளாக மாற்றுவதே அவர்களின் நோக்கம்... அப்போதுதான் நீங்கள் அவர்களை விட்டுப் போக மாட்டீர்கள் என்பதும், அவர்களைச் சார்ந்தே இருப்பீர்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்... நீங்கள் அழுவதும், கதறுவதும் அவர்களுக்கு ஒரு #வெற்றி போன்றது. நீங்கள் காயப்படும்போது அவர்கள் ரகசியமாக ரசிப்பார்கள். நீங்கள் அவர்களின் நயவஞ்சகத்தை உணர்ந்து ஒதுங்கத் தொடங்கும்போது, அவர்கள் உங்களை உங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் உங்களைப் பற்றித் தவறான பிம்பத்தைக் கட்டமைப்பார்கள்... ஆனால், ஒரு பெண்ணின் ஆன்மா இத்தனை சித்ரவதைகளையும் தாண்டி ஒரு முடிவுக்கு வரும்போது, அங்கிருந்து அவளை யாராலும் தடுக்க முடியாது. அவள் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருந்த காலம் முடிந்து, அவள் தனக்கான எல்லையை வகுக்கும்போது, அந்தச் சுயநலவாதியின் அதிகாரம் சரிந்து விழும்... பெண்களே, உங்களை மதிக்காத இடத்தில் உங்கள் அன்பைக் கொட்டுவது என்பது, காய்ந்த நிலத்தில் நீரை ஊற்றுவதற்குச் சமம். உங்கள் விசுவாசம் என்பது உங்கள் பலவீனம் அல்ல, அது உங்கள் கௌரவம். அதைத் தகுதியற்றவர்களுக்குத் தானமாக வழங்காதீர்கள்... யார் ஒருவர் உங்கள் வலியைப் புரிந்துகொள்ளவில்லையோ, யார் உங்கள் கண்ணீரை ஒரு நாடகமாகப் பார்க்கிறாரோ, அவரிடமிருந்து விலகி இருப்பதே உங்கள் ஆன்மாவுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி. சிதைந்த பிம்பத்தை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது, ஆனால் புதிய பிம்பத்தை உங்களால் உருவாக்க முடியும். உங்கள் மதிப்பு என்பது மற்றவர் தரும் அங்கீகாரம் அல்ல அது உங்களின் சுயமரியாதையில் இருக்கிறது... ✍️ மனால்றியா அம்மு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #👌அருமையான ஸ்டேட்டஸ்
#அவள்களுக்கு வலிக்கும் வரை வலிக்கட்டும்... அது தானாகவே மரத்துப் போகும் வரை... வாழ்க்கையின் சில பக்கங்கள் நாம் எதிர்பாராத விதமாக கிழிந்து போகின்றன. நாம் கட்டி எழுப்பிய கனவுகள், நம் கண் முன்னாலேயே சிதைந்து போகும்போது, எல்லாம் சரியாகிவிடும் என்று யாரோ சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் அந்த நேரத்தில் வெறும் சத்தமாக மட்டுமே இருக்கும்... வலியை ஏன் நாம் மறைக்க வேண்டும் நிழலைத் துரத்துவது போல, காயங்களை ஒளித்து வைத்து ஓடாதீர்கள். ஆறிவிட்டதாக நீங்களே உங்களுக்குப் பொய் சொல்லிக் கொள்ளாதீர்கள். ஒரு காயம் முழுமையாக ஆற வேண்டுமானால், அதன் ரணத்தை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்... உங்கள் நம்பிக்கைகள் சிதறிய அந்த கணத்தை எதிர்கொள்ளுங்கள்... இறுதிவரைக்கும் கூடவே வருவேன் என்று இருந்தவர்கள் பாதியில் விலகிய அந்த வெறிச்சோடிய மௌனத்தை உணருங்கள்... இதுதான் என் உலகம் என்று நீங்கள் எதை நினைத்தீர்களோ, அது காணாமல் போன அந்த சூன்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்... அழுகை பலவீனமல்ல... அது ஒரு விடுதலை கண்ணீர் சிந்துவது கோழைத்தனம் என்று யார் சொன்னது, உள்ளுக்குள் தேங்கி நிற்கும் பாரத்தை வெளியேற்ற இயற்கை கொடுத்த வடிகால் அது அழுகை... அவர்களை நினைத்து ஏங்குவது உங்களை முட்டாளாக்காது, மாறாக, உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதைக் காட்டும்... மறந்துவிடாதீர்கள் காயங்களை மறுப்பது வலியை இன்னும் அதிகமாக்கும். அதை உணரத் தொடங்கும் போதுதான், தீர்வுக்கான முதல் அடியே தொடங்குகிறது... அந்த வலியோடு சற்று நேரம் அமர்ந்து பாருங்கள். அது உங்களுக்கு எதையோ கற்றுத் தரப் பார்க்கிறது. யாரை நம்ப வேண்டும், எங்கே எல்லையை வகுக்க வேண்டும், உங்களுக்கான முக்கியத்துவம் என்ன என்பதை அந்த வலி உங்களுக்குச் சொல்லும். இது உங்களை முடக்கிப் போடும் நேரமல்ல, உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளும் காலம்... அந்த விடியல் வெகு தொலைவில் இல்லை இன்று பாரமாகத் தெரிவது, ஒரு நாள் பஞ்சாக மாறும். காலங்கள் உருண்டோடும் போது, ஒரு நாள் காலையில் நீங்கள் விழிப்பீர்கள்.... அன்று அந்தப் பழைய நினைவுகள் உங்கள் நெஞ்சைக் கிள்ளாது... அவர்களின் பெயர் காதில் விழுந்தால் கண்கள் கலங்காது... ஏன் எனக்கு இப்படி நடந்தது என்ற கேள்வி மறைந்து, நடந்தது ஒரு பாடமாக இருக்கட்டும் என்ற தெளிவு பிறக்கும்... அப்போது நீங்கள் கண்ணாடியைப் பார்த்தால், ஒரு புதிய மனிதரைக் காண்பீர்கள். வலியிலிருந்து தப்பித்து ஓடியவர் அல்ல நீங்கள்... வலியை நேருக்கு நேர் சந்தித்து, அதைத் தோற்கடித்த ஒரு வெற்றியாளர்... வலிகள் உங்களைக் கொல்லாது, அவை உங்களை இன்னும் உறுதியானவராக உருமாற்றும். அதுவரை... வலிக்கும் வரை வலிக்கட்டும்... ✍️ மனால்றியா அம்மு #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்