எல்லாரையும் நம் இதயத்திற்குள் அனுமதித்துவிட முடியாது, அன்பிற்காகவும், உண்மையான பிணைப்பிற்காகவும் ஏங்குவது மனித இயல்புதான், ஆனால், அந்த ஏக்கத்தினால் தகுதியற்றவர்களிடம் நம்மை நாமே இழந்துவிடக் கூடாது...
உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளப் பழகுங்கள், இது திமிர் அல்ல, இது சுயமரியாதை, தற்காலிகமானவர்களுக்குத் தடை போடுங்கள்,
உங்கள் மன அமைதியையும், உங்கள் நேரத்தையும் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருங்கள்...
ஒரு சில உரையாடல்களிலேயே உங்களால் உணர முடியும், யார் உங்கள் ஆழத்தைப் புரிந்துகொள்பவர்கள், யார் வெறும் பொழுபோக்குக்காக வருபவர்கள் என்று, அத்தகைய timepass மனிதர்களுக்காக உங்கள் ஆன்மாவைத் திறந்து வைக்காதீர்கள்...
ஆழமற்ற உறவுகளில் இருந்து வெளியேறுங்கள்,
உங்களைப் புரிந்து கொள்ளும் Capacity இல்லாதவர்களிடம், உங்கள் அன்பையும் உணர்வுகளையும் துண்டு துண்டாகப் பிய்த்துக் கொடுக்காதீர்கள், ஆழமற்ற கிணற்றில் நீர் தேடுவது போல, ஆழமற்ற மனிதர்களிடம் ஆழமான அன்பை எதிர்பார்ப்பது வீண் வேலை,உங்களைச் சரியாகத் தாங்கிப் பிடிக்கத் தெரியாதவர்களிடம் உங்களை ஒப்படைக்காதீர்கள்...
கடந்த கால வலிகள் உங்கள் பலம்,
கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த துரோகங்கள், காயங்கள் மற்றும் மனப் போராட்டங்கள் உங்களை உடைப்பதற்காக வந்தவை அல்ல, உங்களைச் செதுக்குவதற்காக வந்தவை, அந்தப் பாடங்கள் உங்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கற்பித்திருக்க வேண்டும்...
உங்களை நீங்களே மதிக்கவில்லை என்றால், வேறு யாரும் மதிக்க மாட்டார்கள், ஒரு சத்தியம் செய்துகொள்ளுங்கள் வாழ்க்கையில் இனி எதற்கும் சமரசம் செய்துகொண்டாலும், ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருங்கள், அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழ்வதை உங்கள் சுயமரியாதையைக் கேள்விக்குறியாக்கும், உங்கள் மதிப்பை மழுங்கடிக்கும் யாருடனும் ஒரு நிமிடம் கூட அமர வேண்டாம்,
தனிமை என்பது பயமல்ல, அது ஒரு தவம்
தவறான எண்ணம் கொண்ட ஒருவருடன் கைக்கோர்த்து நடப்பதை விட, கம்பீரமாகத் தனிமையில் நடப்பதே மேலானது, தனிமையைக் கண்டு அஞ்சாதீர்கள், தகுதியற்ற ஒருவருக்காக உங்கள் தரத்தைக் குறைத்துக் கொண்டு, அங்கு செட்டில் ஆகிவிடுவோமோ என்று மட்டும் பயப்படுங்கள்...
உண்மை என்னவென்றால், இந்த அவசரமான, போலியான உலகில்... உண்மையான அன்பு, விசுவாசம் மற்றும் நேர்மையான நோக்கங்களுடன் இருப்பது ஒரு அபூர்வம், நீங்கள் அப்படிப்பட்ட ஒரு அபூர்வமான மனிதராக இருந்தால், உங்களை அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்கச் செய்துவிடாதீர்கள்...
யாரையும் நேசிப்பது கடினமல்ல... ஆனால் உங்களை அடைவதை அவ்வளவு எளிதாக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் ஆழத்தைப் புரிந்துகொள்பவர்களுக்காக மட்டும் உங்கள் கதவைத் திறங்கள், உங்களுக்கு தெரியும் உங்களின் தரம்...✍️
மனால்றியா அம்மு #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓

