ShareChat
click to see wallet page
search
மாசி மாதம் 10ம் நாள் 22-பிப்ரவரி-26 ஞாயிறு பானு வாரம் சஷ்டி விரத நாளில் உதய பானு சூரியன் போல் பிரகாசித்து மனதில் உள்ள சஞ்சலம் தரும் இருளை அறவே நீக்கி அமைதியான ஆனந்தமான தேஜோமய வாழ்க்கை அருளிட எல்லாம் வல்ல கார்த்திகேய முருகனை அசஞ்சலா பக்தியோடு போற்றி பாடி வணங்கிடுவோம் வாரீர் சக்தி கொடுப்பாய் சக்தி வேல் ஏந்திடும் உன் கரத்தால் என் கரங்களால் சேவை உனக்கு செய்திடும் எனக்கு எங்கும் எப்போதும் உன் திருப்புகழை வாயினால் சொல்லி வணங்கும் தவறுகளை மன்னித்து அருள்வாய் அருளை அருவிபோல் பொழியும் உன்னிடம் தூய தமிழில் வேள்வியாக பக்தி பாடல்களை பாட வைப்பாய் வையகத்தில் நான் வேண்டும் வரங்களை நிறைவேற்றுபவனே என் இதய கமலத்தை வைத்தேன் உன் காலடியில் காலால் அனுதினமும் உன் சந்நிதி சுற்றி வந்து அழகா உனை என் இதயத்தில் ஸ்திரமாக அமர்த்தி பார்த்திடுவேன் வேண்டிய போதெல்லாம் எங்கும் எந்த வேளையிலும் உன் அழகு ரூபத்தை ஆசைதீர பார்த்து ஆனந்தம் அடைவேன் வேதனை மனதை மற்றும் உடலை வாட்டும்போது குமரா நீயே ஓடி வந்து அணைத்து ஆறுதல் தந்து போக்கிடுவாய் போற்றி மனம் உருகிட உன் தண்ணருள் பிரவாகத்தில் மூழ்கி மெய் மறந்து எனை மறந்து அமைதி அடைந்திடுவேன் சக்தி சிவபாலா, சக்தி வடிவேலா, சடாக்ஷரா, சண்முகா, சரவண பவா, சக்ரதாரி மருகா, சரணம் சரணம் கார்த்திகேயா 🙏🦚🐓 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ஓம் முருகா #📸பக்தி படம் #✨கடவுள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ShareChat