ShareChat
click to see wallet page
search
"எத்தனை முறை படித்தாலும் என்னையும் அறியாமல் அழுதுவிடுவேன்" இப்படி ஒரு தபஸ்வியை ஸன்யாஸியை குருவை, ஆச்சார்யாளை மடாதிபதியை இனி இந்த ஜன்மம் இல்லை எந்த ஜன்மத்திலும் பார்க்க முடியாது. பிறர்க்குரிமையாக்கும் பெம்மானே போற்றி தங்களை எல்லாம் அழப் பண்ணுவதில் தான் எனக்கு என்ன அப்படி ஓர் ஆனந்தமோ ஆனால் இது ஆனந்தக் கண்ணீர். இந்த கண்ணீர் நம் பாவங்களை எல்லாம் துடைத்து நம்மையெல்லாம் புனிதப் படுத்தும் மேலே படியுங்கள். ஸ்ரீ ரா கணபதி அண்ணா அவர்கள் மைத்ரீம் பஜத புத்தகத்தில் பலமுறை நடந்த நிகழ்ச்சி ஸ்ரீ சரணாள் கடும் அலுவல்கள் முடித்து அப்போது தான் விஸ்ராந்தி செய்து கொள்ளப் போயிருப்பார். அப்போது வரும் பக்தர்களிடம் கிங்கரர்கள் பெரியவாளைத் தொந்தரவு செய்வதற்கில்லை என்று கூறி விடுவர். பக்தர்களும் மனிமில்லாமல் திரும்ப இருப்பர் சரியாக அச்சமயம் பார்த்து உள்ளேயிருந்து பெரியவாள் வெளியே வந்து விடுவார் அல்லது உள்ளேயே இருந்து கொண்டு குரல் கொடுப்பார். யாராவது வந்திருக்காளா யாரோ வந்தாப்பல இருக்கே நெழல் ஆடித்தேயார் வந்தா கூப்டுங்கோ அவாளை இப்படி ஏதேனும் சொல்லி தமது ஸ்ரமத்திற்கு மெய்யான பரிஹாரமாக அவர் கருதிய குறை தீர்க்கும் படலத்தைத் தொடங்கி விடுவார். கிங்கரர்களிடம் என் சிரமத்தை நினைக்கிறீர்களே வருகிறவர்களின் சிரமத்தையும் தான் நினைத்துப் பாருங்களேன். எங்கெங்கே இருந்து எல்லாமோ வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு காசையும் பொழுதையும் செலவழித்துக் கொண்டு பஸ்ஸில் ரயிலில் இடிபட்டுக் கொண்டு தானே வருகிறார்கள் அவர்களில் பல பேருக்கு அவசர ஜோலி இருந்து உடனே திரும்பும்படி இருக்கலாம். எனக்கு சிரம பரிஹாரம் என்று சொல்லிச்ரமப்பட்டு வந்திருக்கிற அவர்கள் மனசை உடைத்து இன்னும் ச்ரமப் படுத்தி அனுப்பலாமா என்பார். கோவில் வாயிலில் அமர்ந்த கோ மகனே கோவிந்தா உம்மை நமஸ்கரிக்கின்றேன். புன்னகை சிரிப்புடன் பூத்த மலராய் புவியை காக்க வந்த கலியுக வரதன் கச்சி மாமுனி காலடி பணிகின்றேன். ஆசை துறந்து என் ஆனவம் அழித்து ஆன்மீக சிந்தனை அடியேனுக்கும் அளித்த ஆதி சங்கரா உன்னை துதிக்கிறேன் உளமாற பாடுகிறேன். உன் அருளை நித்தம் பெற வேண்டுகிறேன் அப்பா. மோனமாய் தண்டம் தாங்கி, நெற்றியில் நீறு பூசி, ஞானமாம் ஒளியை வீசிக், கண்களால் ஆசி நல்கி, வானதி தலையில் சூடி, வானதாய்ப் பரந்த ஈசன் தானதாய் அமர்ந்த தேவே! உன்பதம் சரண் எமக்கே! சங்கரன் நாமம் எங்கள் சங்கடங்களைப் போக்கும். சங்கரன் தரிசனம் எங்கள் வாழ்வில் சரித்திரம் படைக்கும். ஹரி ஓம் பிறர்க்குரியாளர் என்று ஒரு சொற்றொடர் அடிக்கடி கேட்கிறோமே அதன் வார்ப்பு வடிவம் பெரியவா தான். "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
jai mahaperiyava - ShareChat
00:29