ஒருமுறை காஞ்சி மகாபெரியவா மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தின் சாலையோரத்தில் முகாமிட்டிருந்தார்கள்.
மகா பெரியவா சொன்ன வேடிக்கை கலந்த ஒரு சம்பவம்.
அப்போது அந்த வழியாக நான்கு பேர் ஒரு யானையின் மீது ஏறி சென்று கொண்டிருந்தார்கள்.
ஸ்வாமிகள் அவர்களைப் பார்த்ததும் மடத்தின் சிப்பந்தியைக் கூப்பிட்டு அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள்.
அவர்களும் யானையைவிட்டு இறங்கிவந்து ஸ்வாமிகளை சேவித்துவிட்டு கைகட்டி நின்றார்கள்.
அவர்களிடம் யார் நீங்கள் யானையின் மீது ஏறிக்கொண்டு எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்களும் பவ்யமாக “ஸ்வாமிகளே நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தராக இருந்தோம்.
எங்கள் தகப்பனார் எல்லாவற்றையும் தானம் தருமம் செய்து பின்னர் எஞ்சிய இந்த யானையை எங்களுக்கு அளித்து அதன் மூலம் பிழைத்துக்கொள்ளச் சொன்னார்.
நாங்களும் அதன் மீது ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வோம் பக்திப்பாடல்கள் பாடுவோம்.
புராணக் கதைகளைச் சொல்லுவோம் எங்களுக்கும் பொருள் கிடைக்கும் யானைக்கும் தீனி கிடைக்கும் இப்படித்தான் எங்கள் ஜீவன்ம் செல்லுகிறது என்றார்கள்.
உடனே மகாபெரியவா புன்சிரிப்புடனே சொன்னார் இங்கேயும் இதான் நடக்கிறது இவா என்னை யானை மாதிரி ஊர் ஊராக அழைத்து கொண்டு செல்கிறார்கள்.
நானும் அங்கே அங்கே போய் உபன்யாஸம் செய்கிறேன் ஸ்லோகங்களைப் பாடுகிறேன் போற இடத்தில இவாளுக்கும் சாப்பாடு பணம் எல்லாம் கிடைக்கிறது.
எனக்கும் பூஜை செய்ய இடம் பக்தர்கள் எல்லாம் கிடைக்கிறது நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்”‘ என்றார் மகா பெரியவா!
கூடியிருந்த பக்தர்கள் ஸ்வாமியின் நகைச்சுவை உணர்ச்சியையும் பக்தர்களை தனக்கு சாமானமாக பாவிக்கும் உயர்ந்த உள்ளத்தையும் கண்டு மெய்சிலிர்த்தார்கள்.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #🙏ஆன்மீகம் #🙏கோவில் #jai mahaperiyava #periyava mahaperiyava
"கலைந்தது மவுன விரதம்
பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்கள்"
அவர்களுக்கு தரிசனம் என்பது என்னுடைய தோற்றமில்லையே குரல் தானே அதைக் கேட்கத் தானே தொலைதூரத்திலிருந்து ஆவலோடு வந்திருக்கிறார்கள் பார்வையற்ற அந்தக் குழந்தைகளை மகிழ்விப்பதை விட என் மவுன விரதம் ஒன்றும் முக்கியம் இல்லை.
பார்வையற்ற மாணவர்களின் பாக்கியம் பெரியவா அருளினால்.
காஞ்சிபுரம் மடத்திற்கு பள்ளி ஆசிரியர் 50 மாணவர்களுடன்
பரமாச்சாரியாரை காண வந்தார்.
ஆனால் அன்று பரமாச்சாரியார் மவுன விரதம் இருக்கும் நாளாக இருந்தது இறை தியானத்தில் தோய்ந்திருக்கும் அவர் இது போன்ற நாட்களில் பொதுவாக யாரையும் சந்திப்பதில்லை.
சந்தித்தால் பேச நேரிடும் அதிலும் மாணவர்களிடம் கட்டாயம் பேசித்தான் ஆக வேண்டும்.
காஞ்சி பரமாச்சாரியார் மேற்கொண்டது சாதாரண மவுனம் அல்ல காஷ்ட மவுனம் அதாவது சைகையால் கூடப் பேசாத நாள்.
மடத்தின் பணியாளர் சிந்தித்தார் என்ன ஆனாலும் சரி பரமாச்சாரியாரிடம் தகவலைத் தெரிவிப்பது தான் சரி என முடிவு செய்தார்.
அதன் பிறகு என்ன செய்வதென்று பரமாச்சாரியாரே முடிவெடுக்கட்டும் மாணவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு பரமாச்சாரியாரிடம் சென்றார் பணியாளர்.
விஷயத்தை சற்றுத் தயங்கியவாறு தெரிவித்தார்
பரமாச்சாரியார் கணீரென்ற குரலில் அவர்களை உடனே இங்கு அழைத்து வா என வாய் திறந்து உத்தரவிட்டார்.
பணியாளருக்கு வியப்பு மவுனத்தை எதன் பொருட்டும் கைவிடாத பரமாச்சாரியார் இன்று கைவிட்டு விட்டாரே இது எப்படி.
மாணவர்கள் பரமாச்சாரியார் முன் ஆவலோடு வந்து நின்றார்கள் அவர்களுக்கு பத்து நிமிடம் அருளுரை வழங்கினார் அவர் பிரசாதம் கொடுத்து அனைவருக்கும் என் ஆசி என்றும் உண்டு எனக் கூறி அனுப்பி வைத்தார்.
மாணவர்கள் விடைபெற்றுச் சென்றதும் பணியாளர் வியப்போடும் தயக்கத்தோடும் கேட்டார்.
சுவாமி எவ்வளவு பெரிய பதவியில் உள்ளவர்கள் வந்தாலும் இதுபோன்ற நாளில் நீங்கள் ஒருமுறை கூடப் பேசியதே இல்லையே எதன் பொருட்டும் விரதத்தைக் கைவிடாத நீங்கள் இன்று கைவிட்ட காரணம் என்ன என்று தெரிந்துகொள்ளலாமா.
பணியாளரை சற்றுநேரம் அருள்பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த பரமாச்சாரியார் புன்முறுவல் பூத்தவாறு விளக்கினார்.
'வந்த குழந்தைகள் எல்லாம் எந்த ஸ்கூல்லேர்ந்து வந்திருக்கான்னு நீ சொன்னாய் அல்லவா நான் என் மவுனத்தை கைவிட்டது அதனால் தான்.
அவர்கள் எல்லாம் பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவர்களுக்கு தரிசனம் என்பது என்னுடைய தோற்றமில்லையே குரல் தானே.
அதைக் கேட்கத் தானே தொலை தூரத்திலிருந்து ஆவலோடு வந்திருக்கிறார்கள் பார்வையற்ற அந்தக் குழந்தைகளை மகிழ்விப்பதை விட என் மவுன விரதம் ஒன்றும் முக்கியம் இல்லை.
பரமாச்சாரியாரின் பதிலைக் கேட்ட பணியாளர் நெகிழ்ச்சியில் தளும்பிய விழிகளைத் துடைத்துக் கொண்டார்.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
ஒரு நாள் சிறு விவாதம் வந்தது அப்போது அவர்கள் சங்கீத மும்மூர்த்திகள் 3 பேருமே சம்ஸ்க்ருதம் & தெலுங்கில் தான் பாடி இருக்கிறார்கள்.
எனவே தெலுங்கும் சம்ஸ்க்ருதமும் இல்லை என்றால் சங்கீதமே இல்லை என்று தெலுங்கர்கள் கூறினார்கள்.
தமிழ் சுத்த waste என்றார்கள் சாதாரணமாக நான் மொழிகளுக்கிடையில் எந்த வித்யாசமும் பார்ப்பதில்லை ஆனால் அவர்கள் இப்படி சொன்னதும் மிகவும் கஷ்டமாக இருந்தது.
ஆகையால் நானும் பதிலுக்கு ஏன் தமிழில் தேவாரம் திருவாசகம் எல்லாம் இல்லையா பழந்தமிழர் இசை எல்லாம் இல்லையா என்று வாதாடினேன்.அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால், தனியே வாதாடிக் கொண்டிருந்த என் வாதம் ஈடு படவில்லை.
அதற்குள் கல்லூரி முடிந்து அன்று சோர்ந்து போய் கிட்டத்தட்ட அழுத நிலையில் வீட்டுக்குப் போனேன்.
என் முக வாட்டத்தைக் கண்ட என் தாயார் என்ன விஷயம் என்று விசாரித்தார்கள் நானும் சொன்னேன் ஆனால் இதை ஒரு பொருட்டாகவே மதிக்காக என் அம்மா நாளைக்கு காஞ்சீபுரத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் பண்ணப் போறேன்.
நாளைக்கு காலேஜுக்கு லீவ் போட்டுவிட்டு நீயும் வா என்றார் எனக்கோ மன சங்கடம் நம் வருத்தத்தைப் பற்றி அம்மா கொஞ்சம் கூட கவலையே படவில்லையே என்று அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.
எனவே அடுத்த நாள் கல்லூரிக்குச் செல்லாமல் காஞ்சீபுரம் செல்வது என்று தீர்மானித்தேன்.
எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு எனவே நான் வரைந்த சங்கீத மும் மூர்த்திகளின் (தியாக ராஜர் முத்து சுவாமி தீட்சிதர் சியாமா சாஸ்த்ரிகள்) ஓவியங்களை மஹா சுவாமிகளுக்கும் காட்டி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
மறுநாள் நானும் என் அம்மாவும் மஹா சுவாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருந்தோம் தரிசனமும் நன்றாகக் கிடைத்தது.
நான் கொண்டு சென்றிருந்த ஓவியங்களை சுவாமிகளின் அருகில் இருந்த உதவியாளர் மூலமாக சுவாமிகளிடம் கொடுத்தேன் அந்த மூன்று படங்களையும் பார்த்த பெரியவர் இதெல்லாம் யார் வரைஞ்சா என்றார்.
அந்த உதவியாளர் என் பெயரையும் ஊரையும் கேட்டார் சொன்னேன் அப்படியே பெரியவாளிடம் சொன்னார் உடனே பெரியவா அந்த குழந்தையை என் முன்னாடி வர சொல்லு என்றார் நானும் அம்மாவும் போனோம். எங்களை உட்கார சொன்னார்.
அதற்கு முன் அவரை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததோ அவருடன் பேசியதோ இல்லை என்பதால் ஆச்சர்யம் சந்தோஷம் பயம் என பலவித உணர்சிகளுடன் எதிரே அமர்ந்திருந்தேன்.
என்னுடைய படிப்பு பற்றி எல்லாம் விசாரித்தார் நானும் சங்கீதக் கல்லூரியில் படிப்பதாகக் கூறினேன் அப்போது ஒரு க்ஷண நேரம் முதல் நாள் நடந்த வாக்கு வாதத்தைப் பற்றி பெரியவாளிடம் சொல்லி அதற்கு ஒரு தீர்வு கேட்கலாமா என்று தோன்றியது.
அப்படி செய்தால் அதிகப் பிரசங்கி என்று நினைத்துவிடப் போகிறார்களே என்று என்னை நானே அடக்கிக் கொண்டு விட்டேன்.
ஓவியங்களைப் பார்த்த பெரியவர் சங்கீத மும் மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பாட சொன்னார் மூன்று பேருடைய கீர்த்தனைகளிலும் ஒவ்வொன்று பாடினேன்.
ஓவியங்களைப் பார்த்த பெரியவர் சங்கீத மும் மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பாட சொன்னார் மூன்று பேருடைய கீர்த்தனைகளிலும் ஒவ்வொன்று பாடினேன்.
பிறகு அந்த ஓவியங்களைப் பற்றி விசாரித்தார் அதில் முத்து
சுவாமி தீட்சிதரின் கையில் உள்ள வீணையில் நான் ஒரு தவறு செய்திருந்தேன்.
முத்து சுவாமி தீட்சிதரின் வீணை மற்ற வீணைகளைப் போல் இல்லாமல் யாளி மேல் பக்கமாக இருக்கும் ஆனால் எவ்வளவு முயன்றும் ஏனோ அந்த இடம் மட்டும் எனக்கு சரியாகவே வரைய வரவில்லை.
ஆகையால் எல்லா வீணைகளையும் போல் யாளியைக் கீழ்ப் பக்கமாகவே வரைந்திருந்தேன்.
அந்தத் தவறை சுட்டிக் காட்டிய பெரியவா அந்த வீணை தீட்சிதருக்கு சாக்ஷாத் கங்கா தேவியே அனுக்ரஹம் பண்ணிக் கொடுத்தது அதை மாத்தறது தப்பு அடுத்த தரம் வரும் போது அதை சரியா வரைந்து எடுத்துண்டு வா. என்றார்.
பிறகு இவளோட ஜீவிய சரித்ரம் தெரியுமோ உனக்கு என்றார் நானும் ஓரளவுக்குத் தெரியும் பெரியவா என்றேன் தெரிஞ்சமட்டும் சொல்லு என்றார்.
இவா மூணு பேரும் திருவாரூர்லே பிறந்ததா என்று நான் ஆரம்பித்தது தான் தாமதம் உடனே நிறுத்து என்று சைகை செய்த பெரியவர் தொடர்ந்தார் அவர் வாக்கிலேயே சொல்கிறேன்.
தர்சநாத் அப்ர சதஸி ஜனநாத் கமலாலையே காச்யாம்
து மரணான் முக்தி: ஸ்மரணே அருணாச்சலே இதுக்கு
என்ன அர்த்தம்னா.
சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணினா முக்தி சிதம்பரத்தை அப்ர சதஸ்ன்னே சொல்லிலிருக்கு சபைன்னா
சித் சபைதான்.
சபாபதின்னா நடராஜ மூர்த்திதான் ருத்ரத்துலே கூட சபாப்யோ சபாபதிப்யச்சவோ நமோ நமோன்னு நமோ நமோன்னு சொல்லி இருக்கு.
இப்பேர்பட்ட மஹா சபையான பொன்னம்பலத்தை தரிசனம் பண்ணிக்கணும் அடுத்தது ஜனநாத் கமலாலையே.
இதுக்கு கடைசிலே வரேன்
காச்யாம்து மரணான்
முக்தின்னா காசியிலே போய் ஜீவனை விட்டா மோக்ஷம் இது நம் எல்லாருமே கேள்விப் பட்டுருக்கற சமாச்சாரம்தான்.
ஸ்மரணே அருணாச்சலே சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணிண்ட முக்தின்னா இங்கே அருணாசலேஸ்வரரை நினைச்சுண்ட தத் க்ஷணத்திலே அந்த நிமிஷத்திலேயே முக்தி.
இப்போ கமலாலயம் சமாசாரத்துக்கு வருவோம்
ஜனநாத் கமலாலையேன்னா திருவாரூர்லே பிறந்தால் முக்தி அந்த ஓவியங்களைக் காட்டி இவா மூணு பேருமே திருவாரூர்லே பிறந்திருக்கா அங்கே பிறந்ததுனாலேயே ஜீவன் முக்தாள் ஆய்ட்டா.
இப்போது என்னிடம் ஆமா
ஆமா உனக்கு ஒரு சமாசாரம் தெரியுமோ இந்த திருவாரூர் நம்ப தஞ்சாவூர் ஜில்லாலதான் இருக்கு ஆமாம் என்பது போல் நான் தலையை ஆட்டினேன்.
அவா எந்த பாஷையிலே பாடி இருந்தாலும் அவா பிறந்த இடம் நம் தமிழ்நாடுதான் அப்படி பார்த்தா சங்கீதத்தினுடைய பிறப்பிடமே நம் தமிழ்நாடு தான்னு சொல்லலாம் இல்லையா.
தமிழ்நாடு இல்லேன்னா சங்கீதமே இல்லைன்னு சொல்லிடலாமே இல்லையா
பாஷைங்கறது நம் மனசுலே நினைக்கறதை வெளிப் படுத்தற ஒரு கருவிதான் அதனாலே அவா தமிழ்லே பாடலயேன்னு நாம் ஒண்ணும் வருத்தப் பட்டுக்க வேண்டாம்.
முதல் நாள் கல்லூரியில் நடந்த வாக்குவாதத்திற்கு ஒரு விளக்கம் கேட்காமலேயே கிடைத்தது.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்
"இவர் தான் எனக்கு குரு ஜட்கா ஓட்டியைப் பார்த்து மஹா பெரியவா"
ஜாதி மதம் பாராமல் தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது.
காஞ்சி மஹாப்பெரியவரை தங்கள் குருவாக ஏற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு வாழும் தெய்வமான அவரை இன்றும் கூட பலரும் மானசீக குருவாக ஏற்று வருகின்றனர்.
ஆனால் அந்த குரு தனக்கு குரு என்று யாரைச் சொன்னார் தெரியுமா தெரிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்.
மஹாபெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு பணக்கார பக்தர் அடிக்கடி காஞ்சி மடம் வந்து பெரியவரைத் தரிசித்து செல்வார்.
ஒருமுறை அவர் தனது குடும்பத்தாருடன் தான் வாங்கிய புதிய காரில் மடத்திற்கு வந்தார்.
அதுசமயம் ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் அருகிலுள்ள கலவை கிராமத்திற்கு சென்றுள்ளார் என்பதை அறிந்து இவரும் அங்கு சென்றார்.
கலவையில் பெரியவரைத் தரிசித்த அவர் தன் கார் சாவியை பெரியவரிடம் கொடுத்து பெரியவரே தாங்கள் தொட்டு ஆசிர்வதிக்க வேண்டும் என்றார்.
பெரியவர் அவரிடம் கலவையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி நீ அங்கு செல் அங்குள்ள மரத்தின் அடியில் ஒரு பெரியவர் தாடி மீசையுடன் படுத்திருப்பார்.
அவரை உன் புதுக்காரில் அழைத்து வா என்று உத்தரவிட்டார்.
பெரியவர் சொன்னபடியே அவரும் அங்கு சென்று அந்த முதியவரை அழைத்து வந்தார் இருவரும் பெரியவர் முன்னால் அடக்கமாக நின்றனர்.
பெரியவர் பணக்காரரிடம்
இவரை யாரென்று உனக்குத் தெரியாது ஏன் அழைத்து வரச்சொன்னேன் என்றும் தெரியாதல்லவா.
இவர் தான் எனக்கு குரு
நான் துறவுப்பட்டம் ஏற்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்கு வந்தேன்.
அங்கிருந்து என்னை ஜட்காவில் - குதிரை வண்டி அழைத்து வந்தவர் இவர் தான்.
வரும் வழியில் ஸ்ரீமடம் குறித்தும் அங்குள்ள நடைமுறைகள் குறித்தும் தனக்குத் தெரிந்த மொழியில் இயல்பான பேச்சு எனக்குச் சொல்லிக்கொண்டே வந்தவர்.
அவர் மூலம் பல விஷயங்களை நான் அறிந்து கொண்டேன் அது மட்டுமல்ல மிகவும் ராசியானவரும் கூட.
அவர் கையில் சாவியைக் கொடுத்து வாங்கிக்கொள் நலமாய் இருப்பாய் என்றார்.
ஆச்சரியப்பட்ட பணக்காரர் அந்த முதியவரிடம் சாவியைக் கொடுத்து வாங்கிக் கொண்டார்.
ஜாதி மதம் பாராமல் தனக்காக ஜட்கா ஓட்டி வரும் போது இயல்பான தகவல்களைச் சொன்னவரை தனது குருவாக ஏற்ற மஹாபெரியவரின் பரந்த மனப்பான்மையை புகழ்வதற்கு வார்த்தைகள் ஏது.
அந்த தெய்வத்தை நம் மானசீக குருவாக ஏற்று அவரது நல்லாசியுடன் உயர்ந்த நிலையை அடைவோம்.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #🙏ஆன்மீகம் #🙏கோவில் #jai mahaperiyava #periyava mahaperiyava
"கவியரசரின் சந்தேகத்தைத் தீர்த்துவைத்த காஞ்சி மகான்"
கவியரசர் கண்ணதாசன் ஆத்திகத்தின் பக்கம் திரும்பத் தொடங்கியிருந்த காலகட்டம் அது.
நாத்திகத்தை நாடி நின்றபோது காஞ்சி மடத்தின் பக்கம்கூட வந்திராத அவர் பக்திப் பாதைக்குத் திரும்பியதும் மகானின் தரிசனத்தை நாடி பலமுறை ஸ்ரீ மடத்துக்கு வந்திருக்கிறார்.
அப்படி ஒரு முறை அவர் காஞ்சி மடத்துக்கு வந்திருந்த சமயத்தில் மகானுக்கும் அவருக்கும் இடையேயான உரையாடல் ரொம்ப நேரம் நீண்டது.
இந்து மதத்தின் தத்துவங்கள் பலவற்றில் தனக்கு இருந்த சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார், கண்ணதாசன்
இந்து மதம் சார்ந்த தத்துவங்களின் நம்பிக்கைகளின் இன்னொரு கோணத்தை அவருக்கு விவரித்துச் சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருந்தார் மகாபெரியவர்.
அந்த சமயத்தில் சுவாமீ எனக்கு ஒரு சந்தேகம் பால் என்றாலே அது வெள்ளை நிறத்தில்தானே இருக்கும்.
ஆனால் பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் திருப்பாற்கடல் நீல நிறத்தில் காட்சி தருவதாக அல்லவா குறிப்பிட்டிருக்கிறார்கள்.
புராணங்களும் அப்படித்தானே சொல்கின்றன அது எப்படி பாற்கடல் நீலமாகத் தெரியும் என்று கேட்டார் கவியரசர்.
அவருக்கு உடனடியாக பதில் சொல்லாத மகான் கொஞ்ச நேரம் இரு ஒருத்தர் இங்கே வரப்போகிறார் அவர் வந்ததும் உனக்கு விளக்கமா சொல்றேன் என்றார்.
பெரியவர் சொன்னபடியே காத்திருந்தார் கண்ணதாசன் சுமார் அரைமணி நேரம் கழித்து பெரிய நகைக்கடை ஒன்றின் உரிமையாளர் மகானை தரிசிக்க வந்தார்.
மகாபெரியவரின் பரமபக்தரான அவர் விலை உயர்ந்த மரகதக்கல் ஒன்றை எடுத்து வந்திருந்தார்.
கனிகள் புஷ்பங்களுடன் அந்தக் கல்லையும் வைத்து பெரியவர் முன் சமர்ப்பித்தார்.
தனக்கு முன்னால் வைக்கப்பட்டவற்றைப் பார்த்ததும் மகான் தன்னருகே இருந்த அணுக்கத் தொண்டர் ஒருவரை அழைத்தார்.
கோசாலையிலிருந்து ஒரு பாத்திரத்துல கறந்த பால் கொஞ்சம் வாங்கிண்டு வா சொன்னார் பிறகு கண்ணதாசனை தம்மருகே அழைத்தார்.
சில நிமிடத்தில் கறந்த பசும்பாலுடன் வந்தார் அணுக்கத் தொண்டர்.
அந்தப் பாலை இதோ இங்கே வை இந்த மரகதக் கல்லை எடுத்து அதுல போடு உத்தரவு பிறந்தது மகானிடமிருந்து.
இந்த சமயத்தில் நகைக்கடை அதிபருக்குள்ளும் கவியரசருக்குள்ளும் இருவேறு விதமான எண்ணங்கள் ஓடின.
சுத்தமான மரகதத்தைப் பரிசோதிக்கும் முறை, அதைப் பாலில் போட்டுப் பார்ப்பதுதான். எனவே, 'தான் கொண்டுவந்த கல்லின் தரத்தை சந்தேகப்பட்டு மகான் அப்படிச் செய்கிறாரோ?' என்ற எண்ணம் நகைக்கடைக்காரருக்குள் எழுந்து அவரைப் பதற்றப்படுத்தியது.
கவியரசருக்கு உள்ளே கொஞ்ச நேரம் முன்னால் நாம் கேட்ட கேள்விக்கு யாரோ வந்ததும் பதில் சொல்வதாகச் சொன்னாரே அது இதுவாக இருக்குமோ என்ற எண்ணம் இழையோடியது.
மகான் உத்தரவுப்படி பாலில் மரகதக் கல்லை இட்டதும் பால் முழுக்க இளம் பச்சை நிறமாகத் தெரிந்தது.
என்ன பாலின் நிறம் மாறி இருக்கா இல்லை உள்ளே பச்சைக்கல் இருக்கறதால இப்படித் தெரிகிறதா தெரியாதவர் போல் கேள்விகேட்டு கவியரசர் முகத்தைப் பார்த்தார் மகான்.
புரிந்து கொண்ட தன் அடையாளமாக மெய்சிலிர்த்து வாய் பொத்தி நின்றார் கவிஞர்.
திருப்பாற்கடல் வெள்ளைதான் அதில் மேகவண்ணப் பெருமாள் சயனித்துஇருப்பதால் அந்த நிறத்தை உள்வாங்கி பாற்கடலும் மேகவண்ணமாய்க் காட்சி தருது எல்லோருக்கும் புரியும்படி சொன்னார் மகான்.
அதைக் கேட்டதும் நகைக்கடை அதிபருக்கும் சந்தேகம் தீர்ந்தது மகான் தான் சமர்ப்பித்த கல்லை சந்தேகப்படவில்லை.
கவிஞருக்கு இருந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்க அதைப் படுத்தியிருக்கிறார் புரிந்து கொண்ட அவர் மகானைப் பணிந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
சற்று நேரத்துக்குப் பிறகு மகானிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்ட கவியரசர் அந்த அனுபவத்தையே பாடமாகக் கொண்டு ஒரு பாடலை இயற்றினார்.
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமந் நாராயணா என்று இப்போதும் எங்காவது எதிரொலித்து எம்பெருமான் புகழ்பாடும் அந்தப் பாடல் பிறந்த வரலாற்றின் பின்னணியாக இருப்பது மகாபெரியவரின் இந்த மகத்தான அனுகிரஹம் தான் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #periyava mahaperiyava #jai mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
"எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே குடு அதை பாமர ஆசாமியிடம் பரமாசார்யா"
துவாதசி பாரணையும் நெல்லிக்காயும் மகா பெரியவா
எந்த விரதமானாலும் சரி துளிக்கூட நியம நிஷ்டை தவறாம அனுஷ்டிப்பார்.
சில விரதங்கள் இருக்கிற சமயத்துல கூடவே மௌன விரதத்தையும் சேர்ந்து அனுஷ்டிப்பார் ஒரு சமயம் ஏகாதசி விரதம் இருந்துட்டு மறுநாள் துவாதசி அன்னிக்கு பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார் பரமாசார்யா.
வழக்கமா துவாதசி அன்னிக்கு மகா பெரியவாளைப் பார்க்க வர்றவா பலரும் நிறைய கனி வர்க்கங்களைத்தான் வாங்கிண்டு வருவா ஏன்னா முதல்நாள் உபவாசமிருந்த பெரியவா மறுநாள் பாரணை பண்றச்சே அந்தப்பழங்கள்ல ஒரு விள்ளலையாவது எடுத்துண்டா பெரும் புண்ணியம் கிடைக்குமேன்னுதான்.
அதே மாதிரி அந்த துவாதசியிலயும் நிறையபேர் வகை வகையான பழங்களை எடுத்துண்டு வந்து பெரியவாளுக்கு சமர்ப்பிச்சிருந்தா.
அந்த சமயத்துல சாதாரணமா இருந்த பக்தர் ஒருத்தர் பெரியவா முன்னால் வந்து நின்னு நமஸ்காரம் பண்ணினார் அவர் கையில் மஞ்சள் பை ஒண்ணு இருந்தது.
நமஸ்காரம் செஞ்சவருக்கு குங்குமமும் கல்கண்டும் குடுத்தார் மகாபெரியவா அதை வாங்கிண்டு நகர ஆரம்பிச்சார்.
அப்போ மகாபெரியவா கொஞ்சம் நில்லு அப்படின்னு உரத்த குரல்ல சொல்ல அந்த ஆசாமி சட்டென்னு நின்னு திரும்பிப் பார்த்தார்.
என்ன நீ இப்படிப் பண்றே எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே குடு அதை அப்படின்னார் பெரியவா.
தன் கையில் இருந்த மஞ்சள் பையைக் கொஞ்சம் தயக்கத்தோட பார்த்த அந்த ஆசாமி இல்ல சாமீ அது வந்து வார்த்தைகளை முடிக்காம இழுத்தார்.
என்ன இங்கே ஆப்பிள் ஆரஞ்சுன்னு குவிஞ்சு இருக்கே இதுல நாம எடுத்துண்டு வந்ததுக்கு என்ன மதிப்பு இருக்கப்போறதுன்னு நினைக்கறியா.
இதெல்லாத்தையும் விட அதுதான் ஒசந்தது அதுவும் துவாதசி அன்னிக்குக் கொண்டு வந்திருக்கே குடு அதை என்று சொன்னார் பரமாசார்யா.
தன்கையில இருந்த பையை பவ்யமா பெரியவா கிட்டே நீட்டினார் அந்த ஆசாமி பக்கத்துல இருந்த சீடரைப் பார்த்தார் மகாபெரியவா.
அதைப் புரிஞ்சுண்ட சீடர் மூங்கில் தட்டு ஒண்ணை எடுத்து அந்த ஆசாமி பக்கமா நீட்டி அதுல அந்தப் பையில இருந்த வஸ்துவை கொட்டச் சொன்னார்.
மஞ்சள் பையை மூங்கில் தட்டுல கவிழ்த்துக் கொட்டினார் அந்த ஆசாமி அதுலேர்ந்து குண்டு குண்டான நெல்லிக் காய்கள் அழகா கொட்டி தட்டை நிரப்பித்து.
இன்னிக்கு பிக்ஷைல இதை அவசியம் சேர்க்கணும்னு சொல்லிடு சீடரிடம் சொன்னார் பெரியவா.
எத்தனையோ பணக்காரா எடுத்துண்டு வந்து குவிச்சிருந்த ரகம் ரகமான கனி வர்க்கம் எல்லாம் நெல்லிக்காய்க்குக் கிடைச்ச பாக்யம் தங்களுக்குக் கிடைச்சுலையேன்னு தோணித்து அங்கே இருந்தவா எல்லாருக்குமே.
அற்பமா தான் நினைச்சதை ஏத்துண்டு அற்புதமா ஆக்கிட்ட ஆசார்யாளை மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுட்டுப் புறப்பட்டார் அந்த ஆசாமி.
துவாதசி அன்னிக்கு நெல்லிக்காய் கொண்டு வந்து குடுக்கணும்னு அந்தப் பாமர ஆசாமிக்கு எப்படித் தோணித்து அவர் நெல்லிக்காய் கொண்டு வந்துட்டு தராமாப் போறார்னு பரமாசார்யாளுக்கு எப்படித்
தெரிஞ்சுது எல்லாம் அந்தப் பரந்தாமனுக்கே வெளிச்சம்.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #periyava mahaperiyava #jai mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்
திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா கிண்டலா என்று
சீடர்களுக்குப் புரியவில்லை
ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை.
ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை ஒரு சிறிய ஊரில் பெரிய கட்டடத்தில் ஸ்ரீமடம் முகாம் பெரியவா தங்கியிருந்த அறையை ஒட்டியிருந்த அறையில் முகாம் அலுவலகம்.
அங்கே மரப் பெட்டிகளில் புதிய வேஷ்டி புடவைகள் சால்வைகள் வெள்ளிக்காசு தங்கக்காசு போன்ற சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஓர் இரவு பகல் முழுவதும் ஏகப்பட்ட வேலைகள் உட்காரக்கூட நேரம் கிடைக்காமல் உள்ளேயும் வெளியேயும் நடந்து கொண்டேயிருக்க வேண்டியியிருந்தது
மெய்த்தொண்டர்களுக்கு.
எனவே இரவில் அயர்ந்த தூக்கம் நள்ளிரவில் ஒரு திருடன் அலுவலக அறைக்குள் புகுந்து ஒரு பெட்டியைத் தூக்க முயன்றான்.
கனமாக இருந்ததால் சட்டென்று தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்
சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பெரியவா திருடன் வந்திருப்பதைத் தெரிந்து கொண்டார்கள்.
ஆனால் உடனே திருடன் திருடன் என்று கூப்பாடு போடவில்லை எப்போதும் போன்ற மிருதுவான குரலில் ஓரிரு சிஷ்யர்களை எழுப்பினார்கள்.
பக்கத்து ரூம்லே மரப்பெட்டியைத் தூக்க முடியாமே ஒருத்தன் சிரமப்பட்டுண்டிருக்கான் நீங்க போய் ஒத்தாசை பண்ணுங்கோ.
பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டருக்கு, உடனே விஷயம் விளங்கி விட்டது அவரும் சத்தம் போடாமல் மின்விளக்குகளின் ஸ்விச்சைப் போட்டார் ஒரே வெளிச்சம்.
திருட வந்தவன் தலைதெறிக்க ஓடிப் போனான் அடாடா சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போயிட்டானே.
பொட்டியிலேர்ந்து வேணும்கிறதை எடுத்துண்டு போகச் சொல்லியிருக்கலாமே என்றார்கள் பெரியவா.
இது என்ன கருணையா, கிண்டலா என்று சீடர்களுக்குப் புரியவில்லை.
ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #🙏ஆன்மீகம் #🙏கோவில் #periyava mahaperiyava #jai mahaperiyava
"எத்தனை முறை படித்தாலும் என்னையும் அறியாமல் அழுதுவிடுவேன்"
இப்படி ஒரு தபஸ்வியை ஸன்யாஸியை குருவை, ஆச்சார்யாளை மடாதிபதியை இனி இந்த ஜன்மம் இல்லை எந்த ஜன்மத்திலும் பார்க்க முடியாது.
பிறர்க்குரிமையாக்கும் பெம்மானே போற்றி தங்களை எல்லாம் அழப் பண்ணுவதில் தான் எனக்கு என்ன அப்படி ஓர் ஆனந்தமோ ஆனால் இது ஆனந்தக் கண்ணீர்.
இந்த கண்ணீர் நம் பாவங்களை எல்லாம் துடைத்து நம்மையெல்லாம் புனிதப் படுத்தும் மேலே படியுங்கள்.
ஸ்ரீ ரா கணபதி அண்ணா அவர்கள் மைத்ரீம் பஜத புத்தகத்தில் பலமுறை நடந்த நிகழ்ச்சி ஸ்ரீ சரணாள் கடும் அலுவல்கள் முடித்து அப்போது தான் விஸ்ராந்தி செய்து கொள்ளப் போயிருப்பார்.
அப்போது வரும் பக்தர்களிடம் கிங்கரர்கள் பெரியவாளைத் தொந்தரவு செய்வதற்கில்லை என்று கூறி விடுவர்.
பக்தர்களும் மனிமில்லாமல் திரும்ப இருப்பர் சரியாக அச்சமயம் பார்த்து உள்ளேயிருந்து பெரியவாள் வெளியே வந்து விடுவார் அல்லது உள்ளேயே இருந்து கொண்டு குரல் கொடுப்பார்.
யாராவது வந்திருக்காளா யாரோ வந்தாப்பல இருக்கே நெழல் ஆடித்தேயார் வந்தா கூப்டுங்கோ அவாளை இப்படி ஏதேனும் சொல்லி தமது ஸ்ரமத்திற்கு மெய்யான பரிஹாரமாக அவர் கருதிய குறை தீர்க்கும் படலத்தைத் தொடங்கி விடுவார்.
கிங்கரர்களிடம் என் சிரமத்தை நினைக்கிறீர்களே வருகிறவர்களின் சிரமத்தையும் தான் நினைத்துப் பாருங்களேன்.
எங்கெங்கே இருந்து எல்லாமோ வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு காசையும் பொழுதையும் செலவழித்துக் கொண்டு பஸ்ஸில் ரயிலில் இடிபட்டுக் கொண்டு தானே வருகிறார்கள் அவர்களில் பல பேருக்கு அவசர ஜோலி இருந்து உடனே திரும்பும்படி இருக்கலாம்.
எனக்கு சிரம பரிஹாரம் என்று சொல்லிச்ரமப்பட்டு வந்திருக்கிற அவர்கள் மனசை உடைத்து இன்னும் ச்ரமப் படுத்தி அனுப்பலாமா என்பார்.
கோவில் வாயிலில் அமர்ந்த கோ மகனே கோவிந்தா உம்மை நமஸ்கரிக்கின்றேன். புன்னகை சிரிப்புடன் பூத்த மலராய் புவியை காக்க வந்த கலியுக வரதன் கச்சி மாமுனி காலடி பணிகின்றேன்.
ஆசை துறந்து என் ஆனவம் அழித்து ஆன்மீக சிந்தனை அடியேனுக்கும் அளித்த ஆதி சங்கரா உன்னை துதிக்கிறேன் உளமாற பாடுகிறேன். உன் அருளை நித்தம் பெற வேண்டுகிறேன் அப்பா.
மோனமாய் தண்டம் தாங்கி, நெற்றியில் நீறு பூசி,
ஞானமாம் ஒளியை வீசிக், கண்களால் ஆசி நல்கி,
வானதி தலையில் சூடி, வானதாய்ப் பரந்த ஈசன்
தானதாய் அமர்ந்த தேவே! உன்பதம் சரண் எமக்கே!
சங்கரன் நாமம் எங்கள் சங்கடங்களைப் போக்கும். சங்கரன் தரிசனம் எங்கள் வாழ்வில் சரித்திரம் படைக்கும்.
ஹரி ஓம் பிறர்க்குரியாளர் என்று ஒரு சொற்றொடர் அடிக்கடி கேட்கிறோமே அதன் வார்ப்பு வடிவம் பெரியவா தான்.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
ஒரு கிராமத்தில் இருந்து முக்கியஸ்தர்கள் சிலர் தரிசனத்துக்கு வந்தார்கள்.
கிராமத்திலிருந்த விநாயகர் சிலை திருட்டு போய்விட்டது பெரியவா வேறொரு சிலை கொடுத்து உதவ வேண்டும் என்று பிராத்தித்தார்கள்.
உங்க கிராமத்திலே ஏரி இருக்கா என்று பெரியவா கேட்டார்கள் பஞ்சாயத்திலே தூர் வாரலே தண்ணி ரொம்பக் கொஞ்சமா இருக்குங்க.
ஏரியில் நிறைய தண்ணீர் இருந்தால் எல்லா ஜனங்களுக்கும் சௌகரியம் கன்று காலிகளுக்கும் உபயோகப்படும் இல்லையா
ஆமாங்க.
முதல்லே ஏரியை ஆழபடுதுங்கோ என்று சொல்லிவிட்டு பிரசாதம் கொடுத்து விட்டார்கள்
அதாவது போய் வாருங்கள் என்று அர்த்தம்.
வந்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம் விநாயகர் சிலை தற்சமயம் கைவசம் இல்லை என்று சொல்லியிருந்தால் கூட கொஞ்சம் சமாதானமாக இருந்திருக்கும்.
சிலையை பற்றி பேசவே இல்லையே ஏரியை ஆழப்படுத்துவது கவர்ன்மென்ட்
வேலை அதைப் போய் நாம் செய்வானேன் ஆனால்
கிராமத்தில் சில வயோதிகர்கள் இருந்தார்கள்.
பெரியவங்க சொன்னப்படி செய்யலேனா அது பெரிய குத்தம் நமக்கு கஷ்டம் வரும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டார்கள்.
வேறு வழி இல்லை விலை கொடுத்து வம்பை வாங்கி கொண்டு வந்தாகிவிட்டது
இனியும் தாமதப்படுத்துவதில் அர்த்தமில்லை.
குறிப்பிட்ட நாளில் வாட்டசாட்டமான பேர்கள் சிலர் மண்வெட்டியும் கூடையுமாக ஏரியில் இறங்கினார்கள்.
ஒரு மணி நேரத்துக்குபின் ஒரு டங் அண்ணே என்னமோ
சத்தம் ஜாக்கிரதையாக
கையை விட்டு துழாவினார்கள்.
பிள்ளையார் கெட்டுப்போனவர் அல்ல இவர் ரொம்ப பழமையானவர்.
அடுத்து ஒரு டங் சிவலிங்கம்
அடுத்து நந்தி அம்பாள் முருகன் பலிபீடம் துர்க்கை காஞ்சிபுரம்
ஒட்டோட்டமாக வந்தார்கள்.
நெஞ்சம் குதூகலிக்க விண்ணப்பித்து கொண்டார்கள் பெரியவாளிடம்.
சாமிகிட்டே ஒரு பிள்ளையார் சிலை தான் கேட்டோம் இப்போ ஒரு கோயிலே கிடைச்சிருக்கு
பெரியவாள் ஏரிக்கரையிலே ஒரு கீற்று கொட்டகை போட்டு சிலைகளை வைத்து விளக்கு ஏற்றி பழங்கள் நிவேதனம் செய்து வாருங்கள் என்று உத்திரவிட்டார்கள்.
கோயில் என்று இழுத்தார்கள் கிராமவாசிகள் பிள்ளையார்
வந்துட்டாரே அவர் பார்த்துப்பார்.
ஏரியிலிருந்து இபோது தான் வெளியே வந்திருக்கிறார் பிள்ளையார் நாளைடிவில் சிவலிங்கத்துக்கு ஓர் அரண்மனை அரனுக்கு ஒரு மனை - சிவன் கோயில் கட்டி கொடுக்கமாட்டரா என்ன.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
பெரியவா ஓரிடத்தில் தங்கியிருந்தார் அன்று ஏகாதசி தண்ணீர் கூட சாப்பிடமாட்டார்.
அங்கே ஒருவர் மின்சாரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்
மணி ஆகிக் கொண்டே இருந்தது.
அதைப் பார்த்த பெரியவா,
இந்த ஆள் சாப்பிடவே போகாமல் வெலை செய்து
கொண்டிருக்கிறார் சாப்பிட்டு விட்டு வரச்சொல்லுங்கள்
என்கிறார்.
அதைக் கேட்டுவிட்டு அவர் இன்று ஏகாதசி நான்
சாப்பிட மாட்டேன் என்றார்.
அவர் மராட்டிக்காரர் மராட்டியர்
ஏகாதசி உபவாசங்களில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.
ஆச்சர்யப்பட்ட பெரியவா சரி சாப்பிட வேண்டாம் டீயாவது
குடித்து விட்டு வரச் சொல்லுங்கள் என்றார்.
அவரோ நான் தண்ணி கூடக்
குடிக்க மாட்டேன் நீங்க கவலைப்படவேண்டாம்
என்றார் அதைக் கேட்டதும் அன்று முதல் ஏகாதசியில் குடித்த வந்த பாலையும் பெரியவா விட்டுவிட்டார்.
அந்த பழுது பார்க்க
வந்தவரிடமிருந்து ஓர் உபதேசம் பெற்றதாக நினைத்தாரோ
இந்த ஜகத்குரு இப்படி ஏகாதசி தண்ணீர் கூட இல்லாமல்
கழிந்தது மறுநாள் துவாதசி.
ஏகாதசியில் பட்டினி கிடக்காவிட்டால் கூட நாமெல்லாம் துவாதசியில்
பாரணை என்று சொல்லிக்கொண்டு
சீக்கிரமாகச் சாப்பிட உட்கார்ந்துவிடுவோம்.
சாஸ்திரப்படி துவாதசி ஸ்ரவண நட்சத்திரத்தில் வந்துவிட்டால் ஏகாதசிக்கு பட்டினி கிடக்காவிட்டாலும் துவாதசியில் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது என்பர்.
அப்படிப்பட்ட துவாதசியாக அமைந்து விட்டதால் பெரியவாளுக்கு அன்றும் உபவாசம்.
அடுத்த நாள் பிரதோஷம் அதில் பகலெல்லாம் விரதமிருந்து
இரவு சிவ பூஜை பண்ணி சிவ தரிசனமான பின் தான் உண்பது
வழக்கம்.
அதிலும் பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமையில்
வந்துவிட்டால் சூரியாஸ்தமனம் ஆன பிறகு சாப்பிடக் கூடாது.
நாலாம் நாள் மகாசிவராத்திரி அன்றும் உபவாசம் தீர்த்தமாட
மட்டும்தான் சுவாமிகள் தண்ணீரைப் பார்த்தார்.
அவ்வளவு கடுமையாக
கடுமையாக உபவாசங்களைத் தொடர்ந்து அனுஷ்டித்தவர்
அவர்.
அப்படிப்பட்டவர்தான் வேளாவேளைக்குப் பசியெடுக்காத
நிலை எனக்கு இன்னும் வரவில்லை என்கிறார்.
பின் குறிப்பு : இன்று கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி - ரமா ஏகாதசி.
"ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர"
#periyava #mahaperiyava #truestory
#kanchimahaperiyava #kanchimahan
#kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman
#mahaperiyavamagimaigal
#sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்



