#🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் யார் இந்த பீளமேடு தண்டபாணி?
கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் மாரியப்பன் - மாரியம்மாள் இருவரின் இளைய மகனாக 1944இல் பிறந்தவர் தண்டபாணி.பூளைமேட்டில் (இன்றைய பீளமேடு) பொறியியல் மாணவராக விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.
மகன் பொறியாளரானதும் வறுமை மாறும் எனக் குடும்பம் கனவு கண்டது.
இந்தித் திணிப்பை எதிர்த்து இளைஞர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மாண்ட செய்திகள் தண்டபாணிக்குக் கவலை தந்தன.
மாணவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிக் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகும் நிகழ்ச்சிகள் அவர் கவலையைக் கூடுதலாக்கின.
தமிழுக்கு வாழ்வைத் தேடிய அவர் மனம், தன் வாழ்வைப் பொருட்படுத்த மறுத்தது.
'உயிர்தமிழுக்கு! உடல் மண்ணுக்கு! என்று, தன் இறப்பின் காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்தார் தண்டபாணி. தமிழ் பெற்ற தான் பெற்ற துயரமாக எண்ணிய அவர் 2.3.1965 ஆம் நாள் பூளைமேடு (பீளமேடு) கல்லூரி விடுதி அறையிலேயே நஞ்சுண்டு மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.
தமிழுக்காக தன்னுயிரை ஈகம் செய்த பீளமேடு தண்டபாணி போன்று 20க்கும் மேற்பட்டோர் ஆகியோர் ஆகியுள்ளனர். மொழிக்காக மாண்ட வரலாறு தமிழினத்தில் மட்டுமே அரங்கேறியுள்ளது.
ஆதிக்கம் எந்த வழியில் வந்தாலும் தமிழன் அஞ்சாநெஞ்சோடு எதிர்த்திட தயங்கமாட்டான் என்பது வெறும் வாக்கியமல்ல வரலாறு
இதோ எங்கள் புரட்சி கவி பாடும் இந்தி எதிர்ப்பு போர் பாடல்..
முந்துவட ஆரியத்தை முறித்த வர்யாம்
மூவேந்தர் மரபுவழி வந்த வர்யாம்
இந்தியநாட் டரசியலை ஒப்ப வில்லை
இந்திமொழி பொதுவாக்கல் விரும்ப வில்லை
அந்தஇழி செயல்செய்ய அடிமைக் கூட்டம்
ஆளுவோர் பக்கத்தில் இருப்ப துண்மை
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வேலை வேண்டாம்.
விடுதலையால் கெடுதலையா? தீமை! தீமை!
- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 17 பக்கம்: 247)
வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் - எதிர்
வரக்காணில் காறிநீ உமிழ்வாய்!
- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் – 15 பக்கம்: 132)
புரட்சி கவி வரிகளுக்கு மேலும் வலுசேர்த்திட இன்றைய சூழலில் பீளமேடு தண்டபாணி நினைவாக தமிழ் மொழிக்கு இன்னல் விளைவிக்கும் ஆதிக்க இந்தியை அழித்திடுவதே ஒவ்வொரு தமிழனின் கடமை. எனவே திரண்டிடுவோம். கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்!
நாள் : மார்ச் 01 ஞாயிறு
இடம்: கோவை ரயில் நிலையம்.
ஆதிக்க இந்தி ஒழிக
தமிழ் வாழ்க! #கோவை #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே!


