ஏகாதசி #🙏ஏகாதசி🕉️ #🌞சூரிய பகவான் வழிபாடு🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
இன்று பாபமோசனி ஏகாதசி
பெருமாளின் அருளை பெறுவதற்காக இருக்கப்படும் மிக முக்கியமான விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசியில் விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும். கஷ்டங்கள் விலகும். செல்வ வளம் பெருகும். தொடர்ந்து ஒரு வருடத்தில் வரும் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவருக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். ஏகாதசி விரத மகிமை பற்றி மகாபாரதத்தில், பகவான் கிருஷ்ணரே பாண்டவர் களுக்கு பல கதைகளை சொல்லி விளக்கி உள்ளார்.
அனைத்து ஏகாதசி விரதங்களும் பாவங்களை போக்கக் கூடியது என்றாலும், சில குறிப்பிட்ட மாதங்க ளில் வரும் ஏகாதசி கூடுதல் சிறப்பு பெற்றவை ஆகும். குறிப்பாக பங்குனி மாதத்தில் வரும் பாபமோசனி ஏகாதசி, பாவங்களை அடியோடு நீக்கி, அனைத்து விதமான நலன்களையும் தரக் கூடியதாகும். ஏகாதசி விரதம் இருப்பதால் விரதம் இருப்பவர் மட்டு மின்றி, அவர்களின் குடும்பத்தினர் களும் பலன் அடைகிறார்கள்
ஏகாதசி விரதம் :
விரதங்களில் மிகவும் உயர்ந்த புண்ணிய பலன்களை தரக் கூடியது ஏகாதசி விரதம் என இந்து புராணங்கள் சொல்கின்றன. வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் ஏகாதசி விரதம் இருப்பதால் நீங்கி விடும் என சொல்லப்படுகிறது. ஆனால் ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கி விடும் என்பது உண்மை தானா என்ற சந்தேகம் பலருக்கும் பல காலமாக இருந்து வருகிறது. ஏகாதசி விரதம் இருந்தால் எப்படி பாவங்கள் நீங்கும் என்பதை பாபமோசனி ஏகாதசி விரத கதை நமக்கு புரிய வைக்கும்.
பாபமோசனி ஏகாதசி :
ஏகாதசி என்பது பெருமாளுக்குரிய திதியாகும். திதிகளில் 11 வது திதியாக வருவது ஏகாதசி. வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகள் வீதம் வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இவற்றின் பெயர்களிலேயே அந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படி பங்குனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு பாபமோசனி ஏகாதசி என்று பெயர். பக்தர்களின் பாவங்களை போக்கக் கூடிய மிகவும் புனிதமான விரத நாள் இதுவாகும்.
பாபமோசனி என்பதில் பாபம் என்றால் ஒருவர் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் பாவங்கள். மோசனி என்றால் பாவங்களை அழிப்பது என்று பொருள். பாபமோசனி என்பது ஒருவர் செய்யும் பாவங்களை அழிக்கக் கூடிய ஏகாதசி என்று பொருள்.
பாபமோசனி ஏகாதசி விரத கதை :
புராணங்களின் படி, பாபமோசனி ஏகாதசி விரத மகிமை குறித்த கதையை பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனுக்கு விளக்கினார். அவர் கூறிய கதையின் படி, மிகப் பெரிய சிவ பக்தரான மேதாவி முனிவர், சைத்ரரதா என்ற வனத்திற்கு சென்று கடும் தவம் இருந்தார். அவரின் தவத்தை கெடுக்க நினைத்த காமதேவன், மஞ்சுகோசா என்ற அப்சரசை அனுப்பி மேதாவி முனிவரின் தவத்தை கலைக்க முயற்சி செய்தார். பல முறை முயற்சி மேதாவி முனிவரின் தவத்தை கலைத்தாள் மஞ்சுகோசா. அவளின் அழகில் மயங்கி, அவளை திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் அவளுடன் வாழ்ந்தார் மேதாவி முனிவர். பிறகு சொர்க்கத்திற்கு திரும்பி செல்வதற் காக மேதாவி முனிவரிடம் அனுமதி கேட்டாள் மஞ்சுகோசா. அப்போது தான் தன்னுடைய தவறை உணர்ந்து, தன்னிலைக்கு வந்த மேதாவி முனிவர், தன்னுடைய தவத்தை கலைத்து, புனித தன்மையை இழக்க செய்த மஞ்சுகோசாவை கொடூரமான காட்டேரியாக ஆகும் படி சாபம் அளித்தார். அவரிடம் சாப விமோசனம் கேட்ட மஞ்சுமோட்சாவிடம், பாபமோசனி ஏகாதசி விரதம் இருக்கும் படி அறிவுறுத்தியதுடன், தானும் அந்த விரதத்தை இருந்தார் மேதாவி முனிவர். இருவரும் தங்களின் பாவங்களில் இருந்து விடுபட்டனர்.
ஏகாதசி விரதம் இருக்கும் முறை :
ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து தூய்மையாக நீராடி, வீட்டையும் சுத்தம் செய்து, விஷ்ணு மற்றும் லட்சுமி படங்களுக்கு பூ போட்டு அலங்கரித்து, நெய் விளக்கு ஏற்ற வேண்டும். மஞ்சள் நிற மலர்கள், துளசி படைத்து வழிபடுவது சிறப்பு. பெருமாளுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்து வழிபட வேண்டும். மாலையில் ஏதாவது நைவேத்தியம் படைத்து பெருமாளை வழிபட வேண்டும். முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவுகளை தவிர்த்து, பால் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
"ஓம் நமோ பகவதே வாசுதேவாய"
"ஓம் நமோ லட்சுமி நாராயணாய நமஹ"
" ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே"
ஆகிய மந்திரங்களை எத்தனை
முறை முடியுமோ, அத்தனை முறை பாராயணம் செய்யலாம்.
ஏகாதசி விரதம் இருக்கும் அனைவரின் பாவங்களும் நீங்கி விடுமா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. வெறும் உபவாசமாக இருந்து, பெருமாளை வழிபட்டு, விரதம் இருப்பதால் மட்டும் பாவங்கள் தீர்ந்து விடாது. எவர் ஒருவர் தான் கடந்த காலத்தில் செய்த பாவங்களுக்காக மன வருந்தி, அதில் இருந்து விடுபட வேண்டும் என உண்மையாகவே விரும்பி, பெருமாளின் பாதங்களை சரணடைந்து, அவரிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைக்கிறாரோ அவரின் பாவங்கள் மட்டுமே நீங்கி, வைகுண்ட பதவி கிடைக்கும்.
அதோடு இனி வாழும் காலத்திலும் கடந்த காலத்தில் செய்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி பெருமாளே கதி என சரணடைந்து, மற்றவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து, புண்ணிய காரியங்கள், நல்ல எண்ணங்களுடன் வாழ்கிறோரோ அவரின் பாவங்கள் மட்டுமே ஏகாதசி விரதம் இருப்பதால் நீங்கும்.
நன்றி
இனிய காலை வணக்கம்
வாழ்க வளமுடன்💐❤️K. R💐❤️


