ShareChat
click to see wallet page
search
#magill vithu magill. மகிழ். 1. நீங்கள் யார்? 2. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? 3. யாருக்காக நீங்கள் அதைச் செய்கிறீர்கள் ? 4. யாருக்காக நீங்கள் அதை செய்கிறீர்களோ அவர்களுக்கு அது வேண்டுமா அல்லது தேவையா ? 5. நீங்கள் அதைச் செய்வதன் மூலமாக அவர்களுக்கு என்ன கிடைக்கிறது ? அதன் விளைவால் ஏற்படும் மாற்றம் தான் என்ன ? இந்த ஐந்தையும் தெளிவாக அறிந்திருந்தால் உங்கள் வாழ்வின் நோக்கத்தை எளிதாக அறிந்து விடலாம். முதல் இரண்டு கேள்விகளும் உங்களைப் பற்றியது . அடுத்த மூன்றும் அடுத்தவர்களைப் பற்றியது . உங்கள் நோக்கம் அனைத்தும் வெளி வட்டாரத்தை நோக்கி இருக்க வேண்டும். பெரும்பாலான வெற்றி பெற்ற மனிதர்கள் எந்த துறையானாலும் சரி அவர்களின் கவனம் அவர்களுக்கே சேவை செய்வதை விட மக்களுக்கு சேவை என்றே இருந்து இருக்கிறது .மகிழ்ச்சிகரமான மக்கள் அடுத்தவர்களை மகிழ்விப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். வாழ்க்கை சொல்லும் பாடம் இது தான். நீங்கள் அடுத்தவர்களை மகிழ்வாக வைக்கும் பொழுது இந்த பிரபஞ்சம் உங்களை மகிழ்வாக வைத்துக் கொள்ளும். இந்த ஐந்து கேள்விகளையும் நீங்கள் மனப்பூர்வமாக உங்களைக் கேளுங்கள்.அதில் திருப்தி இருந்தால் நீங்கள் இப்போது செய்து கொண்டு இருப்பது தான் உங்கள் வாழ்வின் நோக்கமாகும். எனவே உங்களுக்கு பேரானந்தத்தைக் கொடுக்கும் வாழ்வின் நோக்கத்தை கண்டு பிடியுங்கள். அதை அனுபவியுங்கள்... நீங்களும் மகுடம் சூட தயக்கமின்றி பேசுங்கள். சரளமாக வார்த்தைகள் வந்து விழும்.சாதனைகளைப் பெருக்கி விடலாம். தக்க வார்த்தைகளைத் தேர்வு செய்து தகுந்ததைப் பேசுங்கள்.தரணி புகழ் எய்திடலாம். இனிமையாகப் பேசுங்கள். எல்லோருடைய மனதிலும் இடம் பெறுங்கள். கனிவாகப் பேசுங்கள். காரியத்தை சாதிக்கலாம். நல்ல உச்சரிப்புடன் பேசுங்கள். புகழ் பெறலாம். சிறிதே பேசுங்கள் அதனைச் சிறப்பாகப் பேசுங்கள். மற்றவர்கள் பேசும் போது கவனமாகக் கேளுங்கள். மௌனமாக இருங்கள். மகான் ஆகலாம். 😊😊😊
magill vithu magill. - அழுத்தத்தோடு மை சிந்திக்காதே அது ஒரு போதும் வெற்றியை தராது புன்னகையோடு சிந்தித்துப்பார் புது அறிவு பிறக்கும் வெற்றி பெறுவாய் அழுத்தத்தோடு மை சிந்திக்காதே அது ஒரு போதும் வெற்றியை தராது புன்னகையோடு சிந்தித்துப்பார் புது அறிவு பிறக்கும் வெற்றி பெறுவாய் - ShareChat