#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️
திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள் வாயாக.
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்.
திருமுறை : தேவாரம், முதல்-திருமுறை.
பண் : பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்.
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை.
தலம் : திருநெடுங்களம்.
சுவாமி : நித்யசுந்தரேஸ்வரர்.
அம்பாள் : மங்களநாயகி.


