பணம் என்பது வெறும் காகிதமல்ல, அது ஒரு மனிதனின் சுயாட்சியின் (Autonomy) சின்னம்.
ஆனால், இன்று 'நவீனம்' மற்றும் 'வசதி' (Convenience) என்ற போர்வையில், நாம் ஒரு மாபெரும் கண்காணிப்பு வளையத்திற்குள் (Surveillance Architecture) தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதுதான் Digital currency,
ஆரம்பத்தில் இது "சில்லறைப் பிரச்சனை இல்லை", "வேகமான பரிவர்த்தனை" என இனிமையாக அறிமுகமானது. Wallet க்கு பதில் Apps வந்தன.
நாணயங்களின் சத்தம் குறைந்து, QR கோடுகளின் scan சத்தம் அதிகரித்தது. ஆனால், இந்த வசதிக்கு நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா?
நமது அந்தரங்கம் (Privacy).
"பணம் அழுக்கானது, கிருமிகளைப் பரப்பும், கறுப்புப் பணத்திற்கு வழிவகுக்கும்" என ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது.
காகிதப் பணத்தைப் பயன்படுத்துபவர்கள் ஏதோ சட்டவிரோதமானவர்கள் அல்லது நாகரிகமற்றவர்கள் என்ற எண்ணம் மெல்ல விதைக்கப்பட்டது.
இதன் மூலம், பணத்தைப் பயன்படுத்துவதை மக்களே ஒரு சுமையாகக் கருதும் 'உளவியல் போர்' (Psychological Warfare) ஒன்று தொடுக்கப்பட்டது.
உலகிலேயே மிகச்சிறந்த அந்தரங்கத் தொழில்நுட்பம் (Truly Private Technology) எதுவென்றால் அது ரொக்கப் பணம்தான்.
ஏனெனில் இடைத்தரகர் இல்லை . நீங்கள் ஒரு டீக்கடையில் பணம் கொடுக்கும்போது, உங்களுக்கும் கடைக்காரருக்கும் இடையே வங்கி கிடையாது, Data Serverகிடையாது.
அந்தப் transaction எந்தத் தரவுத்தளத்திலும் (Database) பதிவாவதில்லை.
ஆனால், டிஜிட்டல் முறையில் நீங்கள் வாங்கும் ஒரு தீப்பெட்டி கூட ஒரு Data Point-ஆக மாறுகிறது.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது வெறும் டிஜிட்டல் பணம் மட்டுமல்ல.
அது Programmable Money. அதாவது உங்கள் பணத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை விட, அதை வெளியிடும் மத்திய வங்கிக்கு அதிக அதிகாரம் இருக்கும்.
"இந்த 5000 ரூபாயை இந்த மாதத்திற்குள் செலவு செய்யாவிட்டால் அது செல்லாது" என Expiry dates அவர்களால் நிர்ணயிக்க முடியும்.
"இந்தத் தொகையை நீங்கள் உணவகங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், மதுபானம் வாங்கக் கூடாது" என உங்கள் விருப்பத்தைச் கட்டுப்படுத்த முடியும்.
எதிர்காலத்தில் உங்களது வங்கி இருப்பு உங்களின் தகுதியைத் தீர்மானிக்காது. மாறாக, உங்கள் நடத்தையே அதைத் தீர்மானிக்கும்.
"அரசின் கொள்கையை விமர்சித்தீர்களா? உங்களின் Digital wallet முடக்கப்படும். நீங்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாது."
இது கற்பனையல்ல, ஏற்கனவே சில நாடுகளில் சோதனை முறையில் தொடங்கிவிட்டது.
சீனா, சுவீடனில் வெற்றிகரமாக அடிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் டிஜிட்டல் ஐடியும் (Digital ID), டிஜிட்டல் பணமும் இணைக்கப்படும்போது, நீங்கள் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையின் கைதியாக மாறுகிறீர்கள்.
காகிதப் பணமில்லா உலகில், உங்கள் வாழ்வாதாரம் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் 'அனுமதி' (Permission) சார்ந்தது.
அவர்கள் ஒரு பட்டனை அழுத்தினால், உங்கள் ஒட்டுமொத்தப் பொருளாதார இருப்பும் காணாமல் போய்விடும்.
காகிதப் பணம் உங்கள் கையில் இருக்கும் வரை அது உங்களுடையது.
அது டிஜிட்டல் எண்களாக மாறும்போது, அது வெறும் 'Access under Conditions’ மட்டுமே.
வசதி என்பது ஒரு தற்காலிக இன்பம்.
ஆனால், சுதந்திரம் என்பது ஒரு நிரந்தர உரிமை.
ஒரு சில வினாடி நேரத்தைச் சேமிக்க நாம் நமது வாழ்நாள் சுதந்திரத்தை அடகு வைக்க போகின்றீர்கள்.
Digital Currency என்பது வெறும் பரிவர்த்தனை கருவியல்ல, அது ஒரு Digital handcuff. #@அமானுஷ்யம்@( HORROR ) #😅 தமிழ் மீம்ஸ் #🙋♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢


