#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏 ஓம் நமசிவாய #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்று. அவன் பார்த்து செய்யட்டும் என்று எல்லாவற்றையும் அவனிடமே விட்டு விட்டார் மாணிக்கவாசகர்...
பாடல்:
********
♦️வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.♥️
பொருள்:
***********
வேண்டத் தக்க தறிவோய்நீ = வேண்டத் தக்கது அறிவோய் நீ = எது வேண்டுவதற்கு உரியதோ, அதை நீ அறிவாய்.
வேண்ட முழுதுந் தருவோய்நீ = எதை வேண்டினாலும் அதை முழுமையாகத் தருவாய்
வேண்டும் = வேண்டுகின்ற
அயன்மாற் கரியோய்நீ = அயன் + மால் + அரியோய் நீ. விரும்புகின்ற பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் நீ அரியவன்.
வேண்டி = நீயே விரும்பி
என்னைப் பணிகொண்டாய் = என்னை உன் பணியாளனாக ஏற்றுக் கொண்டாய்
வேண்டி = விரும்பி
நீயா தருள்செய்தாய் யானும் = நீ எனக்கு என்ன அருள் செய்தாலும்
அதுவே வேண்டின்அல்லால் = அதுவே நானும் வேண்டினேன், அல்லாமல்
வேண்டும் = நான் வேண்டும், நான் விரும்பும்
பரிசொன் றுண்டென்னில் = பரிசு என்று ஒன்று இருந்தால்
அதுவும் உன்றன் விருப்பன்றே. = அதுவும் உன்னோட விருப்பம்.
எனக்குன்னு ஒரு விருப்பமும் கிடையாது.!


