ShareChat
click to see wallet page
search
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்* "ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன். என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும்". (திருப்பாடல் 86: 1-6) எங்களோடு என்றும் இருப்பவரே! எங்களைத் தேற்றும் தெய்வமே! எங்களுக்கு புத்துயிர் அளிப்பவரே! உம்மை வணங்குகிறேன். வாழ்த்துகிறேன். உம்மை ஆராதனை செய்கிறேன். இறைவா! இந்த தவக்காலத்தில், பிறரை சுட்டிக்காட்டி குற்றஞ்சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும், நான் முற்றிலும் தவிர்க்க எனக்கு அருள் புரியும். பசி, பட்டினியில் இருப்போரை நான் கண்டுணர்ந்து, அவர்களது தேவையை நிறைவு செய்யும் வாய்ப்பினை எனக்குத் தந்தருளும். ஏனெனில், "பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்." என நீர் கூறி இருக்கிறீர். ஆண்டவரே! இன்று உமது வழியை எனக்குக் கற்பியும். நான் தூசிக்கு சமமானவன். இந்த எளியவனின் வேண்டுதல்களை செவி சாய்த்தருளும். “என்னைப் பின்பற்றி வா!” என்று சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த, லேவியை நீர் அழைத்தது போல, இந்த தவக்காலம் முழுவதும் என்னைக் கரம் பிடித்து வழிநடத்தும். இறைவா! இந்த புதிய நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக. இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில்... (1) அருள் நிறைந்த... (3) பிதாவுக்கும், சுதனுக்கும்... (1) *ஆமென்.*
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat