#பத்திஸ்டேட்ஸ் *நண்பர்கள் அனைவருக்கும் * இனிய காலை வணக்கம்.*
இன்று மாசி மாதம் 29ம் நாள் 🌷
#கடைசிவெள்ளிக்கிழமை#🌷
இன்று அம்மன் வழிபாடு சிறப்பானது 🙏
இந்த நாள் முப்பெரும் தேவியர்கள்🔱🙏அருளுடனும்🙏சகல தெய்வங்கள் அருளாசிகளுடனும்🔱🙏நம் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கட்டும்🌹
நல்வாழ்த்துகள்🌹
🕉️ஓம் சக்தி ஓம்🔱🙏🌺
🕉️ஓம் ஶ்ரீமஹாலக்ஷ்மி போற்றி🪷🙏⚜️
🕉️ஓம் ஶ்ரீகலைவாணி போற்றி🌸🙏🔱
🕉️ஓம் ஶ்ரீபால குருநாதா போற்றி🦚🙏⚜️
🕉️ஓம் ஶ்ரீகந்தா போற்றி🦚🙏🔱
🕉️ஓம் ஶ்ரீகதிர்வேலா போற்றி🦚🙏⚜️
🕉️ஓம் ஶ்ரீசுக்கி்ர பகவானே போற்றி🌺🙏🔱
🔱🌹#மாசிவெள்ளிக்கிழமைவழிபாடு#🌹🔱
🌹🔱 வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். வாகனயோகம் அமையும்.
🌹 🔱வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் செய்து இறைவனை வழிபட்டால் நன்மை உண்டாகும். அத்துடன், இந்த நாட்களில் ஆலயங்களிலும் சிறப்பான பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும்.
🌹🔱15 வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு
(மகாலட்சுமி🪷) மல்லிகை🌸செந்தாமரை🌺மனோரஞ்சிதம்🌼 ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரை பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு மற்றும் குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
🌹🔱மாசி வெள்ளியில் மாரியம்மன்🔱 முதலான அம்மனைத் தரிசனம் செய்து வேண்டினால் நன்மை உண்டாகும். மங்காத செல்வங்கள் தந்து காத்தருள்வாள் தேவி என்பது ஐதீகம்! குறிப்பாக, ராகு கால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால் காரியத்தடைகள் நீங்கும்.
🌹🔱அதேபோல மாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை #முன்னோர்கள்# 🙏வழிபாடு செய்வது தொழில் தடை, வருமான தடை, வியாபார தடை, குல விருத்தியில் தடை, சுபகாரிய தடைகள் போன்ற எந்த வகையான தடைகளையும் தகர்த்து எறியும் வல்லமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
🌹🔱 மாசி மாத வெள்ளிக்கிழமையில் முன்னோர்கள் படத்திற்கு மாலை🌺 சாற்றி அவர்களுக்கு உரிய நைவேத்தியங்கள் படைத்து வழிபாடு செய்ய வாழ்வில் சகல யோகங்களையும் பெற்று தரும்.
🌹 🔱அதேபோல், வெள்ளிக்கிழமை ராகு கால வேளையான காலை 10.30 முதல் 12 மணிக்குள், துர்க்கையை வணங்கி எலுமிச்சை🍋 தீபமேற்றி🪔வழிபடுவதும், நவகிரக சன்னிதிக்கு சென்று ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் மிகுந்த பலனைத் தந்தருளும் என்பார்கள். இன்று அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிப்பதும், தீபமேற்றி வழிபடுவதும் மங்காத செல்வத்தைத் தந்தருளும்.
🔱இந்த மாசி வெள்ளியில், #மாரியம்மன்#🔱 முதலான தேவியரை 🙏வணங்குவோம்... மகத்தான வாழ்வை அடைவோம்...🌷


