ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ கடலில் நன்றாக ஊறிக் கிளம்பிய நஞ்சினை உட்கொண்டு உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு திருநீற்றைத் திருமேனியில் திகழப் பூசியணிந்து, வயல்களில் வளம் பெருக்கும் அழகிய திருமாற்பேற்றில், இவருக்கு ஒப்பாக வேறு யாரையும் கூற முடியாதவாறு தனிப்பெரும் தலைவராக விளங்குபவர் மணிகண்டர். அ௫ளியவர் : திருஞானசம்பந்தர். திருமுறை : தேவாரம், முதல்-திருமுறை. பண் : பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம். நாடு : தொண்டை நன்னாட்டுத் திருத்தலம். தலம் : திரு மாற்பேறு (திருமால்பூர்). சுவாமி : மணிகண்டேசுவரர், மால்வணங்கீசுவரர். அம்பாள் : அஞ்சனாட்சி அம்மை, கருணை நாயகி.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 35 @a நமசிவாய ஓம் ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டுஉமை, நீறு சேர்திரு மேனியர் சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின் மாறு இலாமணி கண்டரே 35 @a நமசிவாய ஓம் ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டுஉமை, நீறு சேர்திரு மேனியர் சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின் மாறு இலாமணி கண்டரே - ShareChat