ஸ்ரீ (969)ஸ்வாமி ஸ்ரீராமானுஜர் வைணவத்திற்குச் செய்துள்ள பணிகளில் மிகச் சீறிய பணி திவ்ய பிரபந்தங்களுக்கு பல்வேறு வியாக்கியானங்கள் அவதரிக்கும்படி செய்தமையேயாகும். 'பெருக்காறு போலே விபவங்கள் ; தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்' என்பது போல வாய்மொழியாக வழங்கி வந்த உரைகள் பெருக்காறு போல அக்காலத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு இருக்கும். ஆனால் எழுதி வைக்கப் பெற்ற உரைகள் அதிலே தேங்கின மடுக்கள் போல பிற்காலத்தவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளன. எனவே உரைகளைத் தோற்றுவித்த பணியே ஸ்வாமி ராமானுஜர் செய்துள்ள பணிகளில் மிகச் சீறிய பணியாகும் என்பர் பெரியோர்.
அடியேன்🙏 #ராமாநுஜர்


