நம்மிடம் நாம் பயன்படுத்திய பழைய பொருட்கள் இல்லை ஆனால் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம்
நாம் இந்த ஆண்டு விவசாயம் செய்து அறுவடை செய்த புது நெல் அரிசி இல்லை ஆனால் நாம் பொங்கல் வைக்கின்றோம்
நம்மிடம் நம்மோடு வாழ்ந்த மாடுகள் இல்லை ஆனால் நாம் மாட்டுக்காக மாட்டுப் பொங்கல் வைக்கிறோம்ம்
உறவினர்களும் நண்பர்களும் இல்லாமல் செல்போனை மட்டும் நம்பி வாழ்கிறோம் ஆனால் யாரையும் காணாமல் காணும் பொங்கல் கொண்டாடுகிறோம்
எதுவுமே இல்லை
பிறகு எதற்கு பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறோம்
நம் மனதில் படிந்துள்ள மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனங்களையும் தீயிட்டு கொளுத்தி போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்
நம் நிலங்களையும் நீர் நிலைகளையும் விவசாயத்தையும் மீட்டெடுத்து புது நெல் அரிசியில் பொங்கல் வைப்போம்
நம்மோடு வாழ்ந்த மாடுகளை மீண்டும் மறு உருவாக்கம் செய்து மாட்டுப் பொங்கல் வைப்போம்
உறவினர்களையும் நண்பர்களையும் கண்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு காணும் பொங்கலை கொண்டாடுவோம்
இந்த நம்பிக்கையில் தான் நாம் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகிறோம்
இந்த பொங்கல் திருநாளில் நாம் இழந்ததை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் தமிழராய் ஒன்று பட்டு போராடுவோம்.
#🤔தெரிந்து கொள்வோம்


