ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி கூறப்படுகிறது. நம்பெருமாள் திருப்புன்னை மரத்தடியில் எழுந்தருளி இருக்க சற்று தூரத்தில் எம்பெருமானாரும் எழுந்தருளியிருந்தார். அங்கே பெருமாளை சேமிக்க வந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானாரையும் தண்டம் சமர்ப்பித்தார்கள் (கீழே விழுந்து வணங்கினார்கள்). அங்கே வந்திருந்த உடையார் ஸுப்பிரமணியபட்டர் என்கிற அரசாங்க அதிகாரி ஒருவர் இதைக்கண்டார். எம்பெருமானாரிடம் 'சீயரே உம்மை நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்' என்றார். எம்பெருமானார் 'அது என்ன கேள்வி?' என்று கேட்டார். ஸுப்பிரமண்யபட்டர் 'எம்பெருமான் திருமுன்பே சிலர் உண்மைக் கீழே விழுந்து வணங்குகிறார்கள். அவர்களும் வித்வான்களாய் இருக்கிறார்கள். பெருமாள் திருமுன்பே என்னை வணங்க வேண்டாம்' என்று நீரும் அவர்களைத் தடுக்கவில்லை. இதற்குக் காரணம் என்ன என்று கேட்டார். எம்பெருமானார் இது அவசியம் கேட்கப்பட வேண்டிய கேள்விதான் என்றாலும் நீர் கேட்க வேண்டிய கேள்வியல்ல இது என்றார். 'நான் ஏன் கேட்கக் கூடாது எனக்கு என்ன வேற்றுமை?' என்று ஸுப்பிரமணியபட்டர் கேட்க எம்பெருமானார் 'நீர் அரசனிடம் வேலை செய்பவரன்றோ? அரசனிடம் ஒரு காரியத்திற்காக வருபவன் அரசனுடைய காலணிகளை எடுத்து தன் தலையிலே வைத்துக் கொள்வதை நீர் கண்டு இருப்பீரே அப்படி அவன் தன் தலையில் வைத்துக் கொள்ளும் போது அக்காலணிகள் எங்களை தலையில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறுமோ? அவன்தான் உண்மையில் அக்காலணிகளையா கொண்டாடுகிறான்? அவன் அவைகளை கொண்டாடுவதாக இருந்தால் அப்பாதுகைகள் அன்றோ அவன் வந்த காரியத்தைச் செய்து கொடுக்க வேண்டும். அவனுக்கு வேண்டியவைகளை செய்து கொடுப்பவன் அரசனன்றோ?. அவ்வரசனுடைய பாதுகைகளை தலையில் ஒருவன் வைத்துக் கொள்வதால் மகிழ்ச்சி அடைபவன் அரசனே தவிர பாதுகைகள் அல்லவே. ('அதே போலவன்றோ எம்பெருமானுடைய பாதுகைகள் நிலையிலுள்ள நம்மையும் இவர்கள் வணங்குவது') என்றருளிச் செய்தார். 🌺ஸ்ரீ M.A.V ஸ்வாமி தொகுத்தருளிய 'வைணவ ஆசாரியர்களின் வாழ்வும் வாக்கும்' என்ற நூலிலிருந்து.🌺 #ராமாநுஜர்
ராமாநுஜர் - ShareChat