#இதயம் பேசுகிறது மகிழ்
பிரபஞ்சம் என்பது ஒரு மௌனமான ஓவியம், அதில் நம் ஒவ்வொரு எண்ணமும் கர்மா எனும் தூரிகையால் வரையப்படும் வண்ணங்கள்..
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
நாம் எதை உணர்வுகளாக இந்தப் பேரண்டத்தில் விதைக்கிறோமோ, அதையே காலச்சக்கரம் சுழன்று வரும்போது ஆச்சரியமான அனுபவங்களாக நம்மிடமே அறுவடைக்குத் தருகிறது என்பதுதான் வாழ்வின் நிதர்சனம்.
கர்மா என்பது ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத தண்டனை அல்ல, அது நீங்கள் செய்யும் செயல்களின் நேர்மையான எதிரொலி..
எப்போது உங்கள் உள்ளம் பிறருக்குத் தீங்கு நினைக்காத தூய்மையுடனும், பேராசை இல்லாத அமைதியுடனும் இருக்கிறதோ,
அப்போது பிரபஞ்சத்தின் ரகசியக் கதவுகள் உங்களுக்காகத் திறக்கப்பட்டு பேரானந்தத்தைப் பரிசாக வழங்குகின்றன.
கடந்த காலத்தின் கசப்புகளையோ எதிர்காலத்தின் கற்பனைப் பயங்களையோ சுமக்காமல்,
இந்த நொடியில் விழிப்புணர்வோடும் நற்பண்புகளோடும் உங்கள் கர்மாவைச் செதுக்கினால்,
நீங்கள் தேடி அலைந்த அந்தப் பிரபஞ்சப் பேரமைதி ஏற்கனவே உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு மௌன இசையாக ஒலித்துக் கொண்டிருப்பதை வியப்புடன் காண்பீர்கள்...
!
கனவுகளை நேசியுங்கள்.ஆனால் நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்.காரணம் உங்கள் நம்பிக்கையை பணம் ஒரு போதும் காப்பாற்றாது.
கோபம் உங்களை நேசிப்பவர்களை கூட வெறுக்க வைக்கும்.ஆனால் அன்பு உங்களை வெறுப்பவர்களைக் கூட நேசிக்க வைக்கும்:
.. செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்தாது உனது மகன் செய்த நம்பிக்கை துரோகம் பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை கால மாற்றத்தை ஏற்று
சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
தன்னை வெட்டும் கோடாரிக்கும்
நறுமணம் தரும் சந்தன மரம் போன்றவனே மாமனிதன்.ஆனால் தன் இனத்தை அழிக்க நினைக்கும் எவருக்கும் கருணை காட்டாமல் அழிப்பவனே எதார்த்தமனிதன்.அதர்மத்தை எதிர்த்து போராடுவதும் ஒரு வகை தர்மம் தான்: பரமாத்மா 🚩🌙
#ஶ்ரீமத்பகவத்கீதை
17. #சிரத்தாத்ரய_விபாக_யோகம்.
பாகம்_8
🙏 12. " பரதகுல சிரேஷ்டனே! பயனை விரும்பியோ, ஆடம்பரத்திற்காகவோ செய்யப்படுகிற ஆராதனையை ராட்சஸம் என்று அறிக."🙏
விளக்கம்: பரதகுலத்தில் உதித்தவர்களில் சிறந்தவனே! அர்ஜுனா! இறைவா! நானுனக்கு இதைத் தருகிறேன்! நீ எனக்கு இதைத் தா! என ஒரு வியாபாரியிடம் பேரம் பேசுவதைப் போல, இறைவனிடம் பேரம் பேசுவது நல்ல வழிபாடல்ல! அது இறைவனும் விரும்புவதில்லை.
தற்பெருமைக்காகவோ, தனது செல்வச் செழிப்பைக் காட்டவோ, சுயவிளம்பரத்திற்காகவோ, ஆடம்பரமான ஆராதனைகளைச் செய்வதும் தவறான வழிபாடாகும். வாழ்வில் நேர்மையாக நடந்துக்கொண்டு, இதயபூர்வமாக நாம் இறைவனுக்கு செலுத்தும் வழிபாடு இறைவன் விரும்புகிறான்.
காலமெல்லாம் பிறரை வஞ்சித்து வாழ்ந்து விட்டு பிறகு இறைவனுக்கு ஆடம்பரமான காணிக்கைகளை வழங்குவதால் இறைவன் மகிழ்வதில்லை; அதனால் அத்தகைய வழிபாட்டை சிறிதும் நேர்மையின்றி, மனசாட்சியுமின்றி செய்பவர்களுக்குப் பெரும் பாபமே பீடிக்கிறது.
தனது சுயநலத்திற்காகவோ(பயனை விரும்பி), பகட்டிற்காகவோ செய்யப்படுகிற வழிபாடுகளை இறைவன் விரும்புவதில்லை! அது இராட்சஸமான வழிபாடாகும்! என்கிறார் #ஶ்ரீகிருஷ்ண_பரமாத்மா.🙏
#ஶ்ரீகிருஷ்ணரே_சரணம் 🙏
_


