#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻
(மெட்டு:- கண்ணன் வந்தான்..அங்கே கண்ணன் வந்தான்...)
(நம்பினார் கெடுவதில்லை....)
எம்பிரான் எதிர்ப்பதில்லை எம்கோதை தீர்ப்பு..
என்றும்அவள் சொல்ஒன்றே அவனுக்குமே ஏற்பு...
விதியினை மாற்றிடுவாள்..
பதியிடம் சேர்த்திடுவாள்..
விட்டுச்சித்தன் கோதைபதம் அடைவாய் நெஞ்சே....
கோதை தந்தாள்..
எங்கள் கோதை தந்தாள்..
வாழ வைக்கின்ற மகராசி கோதை தந்தாள்..
(கோதை..)
ஓடி வந்து தன்னருளைக் கோதை தந்தாள்..
உதவி என்னும் கரம்நீட்டி கோதை தந்தாள்..
(ஓடி வந்து..)
பேதமென்று ஏதுமின்றி கோதை தந்தாள்..
வாதையதன் வேர்சாய கோதை தந்தாள்...
கனியும் உள்ளம் தோற்ற எமது கோதை தந்தாள்..
காவல் தெய்வம் தானாகிக் கோதை தந்தாள்..
கோதை தந்தாள்..
அன்னை கோதை தந்தாள்..
கோதை தந்தாள்..
(கோதை..)
நேசநெஞ்சம் தேடிவரும் பெண்தான் அவள்..
நேரில்நின்று பேசுகின்ற
பெண்தான் அவள்..
(நேசநெஞ்சம்)
மாசிலாத உளம்நாடும்
பெண்தான் அவள்..
மாதவனொடு பூட்டிவிடும்
பெண்தான் அவள்..
(மாசிலாத..)
காணாத அன்பிருக்கும் கருணை உள்ளம்..
கோணாது கொடையளிக்கும் கருணை உள்ளம்..
கருணை உள்ளம்..
கோதை கருணை உள்ளம்..
கருணை உள்ளம்..
(கோதை..)
கோதே..கோதே....
கோதே....
கோதை மொழி வாய் திறந்து பாட வேண்டும்..
கொஞ்சு தமிழ் அதைக் கொஞ்சம் பயில வேண்டும்..
(கோதை மொழி..)
கணமேனும் அவள் நினைவில் வாழ வேண்டும்..
கண்ணனருள் சேர வழி செய்ய வேண்டும்..
(கணமேனும்..)
கவலைஇனி நம்மிடத்தில் ஏதும் உண்டோ?
கோதையும் துணையிருக்க, குறையும் உண்டோ?.
(கவலை இனி..)
கோதே..கோதே..
கோதே...கோதே...
கோதை தந்தாள்...
எங்கள் கோதை தந்தாள்....
💐💐💐💐💐K. R💐💐💐💐💐


