திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள
இராமபிரான் வில் அம்பு இல்லாமல் அமர்ந்து
யோக நிலையில் காட்சிதரும் ஒரே தலமான
தமிழகத்தில் உள்ள பிரம்மாண்ட
இராமர் கோயிலான
நெடுங்குணம் என்ற நெடுங்குன்றம்
யோகராமச்சந்திரமூர்த்தி
செங்கமலவல்லிதாயார் திருக்கோயிலை தரிசிக்கலாம்.
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் பெரிதாக போற்றப்படுவது இராம அவதாரம். தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுங்குணம் என்ற ஸ்தலத்தில் அருள்மிகு யோக இராமர் ஆலயம் சுமார் எண்பத்தேழாயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இக்கோயில் இராமபிரானுக்கென தனிச்சிறப்பு பெற்றதாக விளங்குகிறது
இக்கோவிலை விஜயநகர பேரரசர்கள் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டியதால் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகவும் இக்கோவில் உள்ளது. தமிழகத்தில் இராமருக்கு இத்தகைய பெரிய தனி ஆலயம் வேறு எங்கும் இல்லை. தனது திருக்கரங்களில் கோதண்டம் எதுவும் ஏந்தாமல் வலது கை சின் முத்திரையுடன் யோக நிலையில் காட்சியளிப்பது இங்கு அபூர்வ திருக்கோலம் ஆகும். இதனால் இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் ” யோக ராமர்” என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.
#🙏பெருமாள்


