ShareChat
click to see wallet page
search
அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட நுழைய முடியாது; பிரமிக்க வைக்கும் புதிய பிரதமர் அலுவலகம்; வல்லரசு நாட்டில் கூட இப்படி ஒரு அலுவலகம் கிடையாதே..! டில்லியில் புதிய பிரதமர் அலுவலகமான 'சேவா தீர்த்' ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகமும் செயல்பட உள்ளது. புதிய வளாகத்தில் தேவநகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட 'சேவா தீர்த்' என்ற பெயர்ப் பலகையும், அதன் கீழே 'நாக்ரிக் தேவோ பவ' (குடிமக்கள் கடவுளுக்கு நிகரானவர்) என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில், தனது பணியைத் தொடங்கிய முதல் நாளான இன்று, ஐந்து திட்டங்களுக்குப் பிரதமர் ஒப்புதல் வழங்கினார். அதன்படி, பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கான நலத்திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். சுமார் 1,100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரதமர் அலுவலக வளாகம், வெறும் அலுவலகம் மட்டுமல்ல; இந்தியாவின் வலிமையைப் பறைசாற்றும் ஒரு நவீனக் கோட்டை. இதன் கட்டமைப்பு மற்றும் உள் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. டெல்லியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சவுத் பிளாக் கட்டிடத்திற்கு அருகிலேயே இந்தப் புதிய பிரதமர் அலுவலகம் அமைந்துள்ளது. பழைய டெல்லியின் பாரம்பரியம் மாறக்கூடாது என்பதற்காக, சிவப்பு மற்றும் பழுப்புக் நிற டோல்பூர் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் பிரம்மாண்ட முறையில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் வெளியே இருந்து பார்க்கும்போது இது ஒரு பாரம்பரியக் கட்டிடமாகத் தெரிந்தாலும், உள்ளே இது ஒரு '22-ம் நூற்றாண்டு' தொழில்நுட்பக் கூடம். நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் அதிநவீன பொறியியல் தொழில்நுட்பத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள்: 1. டிஜிட்டல் இந்தியா மையம்: இந்த புதிய பிரதமர் அலுவலகம் முழுவதும் காகிதமில்லா அலுவலகமாக (Paperless Office) செயல்படும். அதற்கான அதிவேக இன்ட்ராநெட் மற்றும் பாதுகாப்பான சர்வர் வசதிகள் சுவர்களுக்குள்ளேயே ஆங்காங்கே பதிக்கப்பட்டுள்ளன. 2. கலாச்சாரப் பிரதிபலிப்பு: பிரதமர் அலுவலகத்தின் உட்புறச் சுவர்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைக் குறிக்கும் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை' தத்துவத்தை இது பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மிகச்சிறப்பு. 3. வார் ரூம் (War Room): அவசர சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அவசர முடிவுகளை எடுப்பதற்காக, அதிநவீன தகவல் தொடர்பு வசதிகள் கொண்ட 'வார் ரூம்' மற்றும் அமைச்சரவைக் கூட்ட அரங்கம் (Cabinet Meeting Hall) இங்கு அமைக்கப்பெற்றுள்ளது. 4. ஈ கூட நுழைய முடியாதபடி கடும் பாதுகாப்பு: இந்தியாவின் உச்சபட்ச பதவியில் இருப்பவர் அலுவலகம் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் கற்பனைக்கு எட்டாதவை. சுரங்கப் பாதை: பிரதமரின் இல்லத்தில் இருந்து அலுவலகத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் செல்ல பாதுகாப்பான நிலத்தடிச் சுரங்கப்பாதை (Underground Tunnel) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விஐபி போக்குவரத்தின்போது டெல்லியில் பொதுமக்களுக்கு டிராபிக் தொல்லை இருக்காது. 5. டிரோன் பாதுகாப்பு: வானில் இருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஆன்டி-ட்ரோன் சிஸ்டம் (Anti-drone System) மற்றும் புல்லட் ப்ரூஃப் கண்ணாடிகள் இந்த அலுவலகம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. 6. பசுமைக் கட்டிடம் (Green Building): பிரதமர் அலுவலகம் முழுவதுமே 'பசுமைக் கட்டிடம்' சான்றிதழ் பெற்ற வளாகம். சூரிய ஒளி மின்சாரம், மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் மறுசுழற்சித் திட்டங்களுடன், இயற்கையோடு இயைந்த வகையில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. மொத்தத்தில், 90 ஆண்டுகாலப் பழைய கட்டிடத்திலிருந்து, நவீன இந்தியாவின் அடையாளமாக மாறியிருக்கும் இந்தப் புதிய PMO, இந்தியாவின் அதிகார மையத்திற்குப் புதிய கம்பீரத்தைச் சேர்த்துள்ளது என்றால் மிகையாகாது. பிரதமர் அலுவலகம் இருந்த சவுத் பிளாக் கட்டடம் தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இந்திய பிரதமர் அலுவலகம் 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #📺வைரல் தகவல்🤩
📺வைரல் தகவல்🤩 - ShareChat