#நல்லதே பேசு நல்லதே நினை நிக்காஹ் விழா: மணமக்களை வாழ்த்திய சமூக நிறுவன தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாவட்ட அரசு வழக்கறிஞர் யூ. அம்ஜத் அலி அவர்களின் மகள் அ. தயிபா பாத்திமா -ர. ரியாஸ் அஹமத்,
அ. சாதிக் பாஷா- சா.ரெமிஜாபீவி இவர்களின் மகள் சா. ஷிஃபானா-கா ஜாகிர் உசேன்,
செ.ஆதம் மரைக்காயர் -ஷார்புனிசா இவர்களின் மகன் ஆ. ரகுமான்-அ. அஜீமுன்னிசா ஆகியோருக்கு 29.3.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை 11:00 மணி அளவில் நிக்காஹ(எ) திருமணம் திண்டிவனம் ஜமாத்தார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது நவாப் மஜித் இமாம் நியாஸ் அஹமத். தாருஸ்ஸலாம் மஜீத் இமாம் ஹாருன் ரசீத். சான்று வழக்கறிஞர் யூ. அஜ்மல்அலி. சரஸ்வதி சட்டக் கல்லூரி மாணவி ஜை. ஆயிஷா பேகம். அவர்களும் உடன் இருந்தார்.
இந்த நிகழ்வு சமூக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மகிழ்ச்சியுடன் நிறைவுற்றது.


