ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு துன்பம். குருக்ஷேத்திரத்தில் யுத்தம் ஆரம்பமாக இருந்தது. குந்திதேவி பாண்டவர்களைக் காப்பாற்றக் கண்ணனை அணுகினாள். “எதிர்ப்புறம் பீஷ்மர், துரோணர் போன்ற பெரியோர்கள், திறமைசாலிகள் இருக்கிறார்கள். கர்ணனைப் போன்ற வல்லவர்கள் துணை நிற்கிறார்கள். நீதான் பாண்டவர்களைக் காப்பாற்ற வேண்டும். எல்லோருடைய குறியும் அர்ச்சுனன் மீதுதான் இருக்கிறது. நீ அர்ச்சுனனுக்குப் பாதுகாப்பாக இருந்த உதவ வேண்டும்!" என்று கேட்டுக் கொண்டாள். போரும் முடிவுக்கு வந்தது. வெற்றி அடைந்த பாண்டவர்கள் நாடாளத் திரும்பினார்கள். கண்ணன் கூடவே இருந்து தர்மரை அரசராக அரியணையில் அமர்த்தி முடிசூட்டி ஆசீர்வதித்தான். குந்திதேவிக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. கண்ணன் பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டான். குந்திதேவியிடமும் சொல்லிக் கொண்டு போவதற்கு வந்தான். "கண்ணா! எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது. அவற்றுக்கெல்லாம் நீயே ஆதார பலமாக இருந்து வெற்றி தேடிக் கொடுத்துவிட்டாய். எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் எங்களை விட்டுத் துவாரகைக்குப் பிரிந்து செல்லப் போகிறேன் என்கிறாயே, அதுதான் எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் எப்படி உன்னைப் பிரிந்து இருப்பேன்?" என்று கண்களில் நீர்மல்கக் கேட்டாள் குந்திதேவி. தாயே! கவலைப்படாதீர்கள். யாதவர்களின் அரசுப் பொறுப்பை ஏற்க நான் போவது, என்னுடைய கடமை. ஆனால் எங்கிருந்தாலும் என் கவனம் உங்களிடம் தான் இருக்கும் "எப்போது நீங்கள் என்னை நினைத்து அழைத்தாலும் நான் உடனே வந்துவிடுவேன்!" என்றான் கண்ணன். "அப்படியானால் எனக்கு ஒரு வரம் கொடு!" என்று கேட்டாள் குந்திதேவி. "வரமா? என்னிடமா? என்ன வரம் வேண்டும் தாயே?" என்று வியப்புடன் கேட்டான் கண்ணன். "தினம் எனக்கு ஒரு துன்பம் நேரவேண்டும் என்று அருள் செய் கண்ணா!" என்றாள் குந்திதேவி. "என்னம்மா இது? எல்லோரும் நல்லது கிடைக்க வரம் கேட்பார்கள். நீ தினமும் துன்பம் நேர வேண்டும் என்று கேட்கிறாயே?" என்று ஆச்சரியப்பட்டான் கண்ணன். "கண்ணா! நீ அறியாதது இல்லை. துன்பம் வந்தால் தான் மக்கள் கடவுளை நினைக்கிறார்கள். நான் தினமும் உன்னை நினைக்க விரும்புகிறேன். அதனால்தான் தினம் எனக்கு ஒரு துன்பம் வரும்படி அருள் செய் என்று சொல்லுகிறேன்" என்றாள் குந்திதேவி. கண்ணன் அந்த ஆழ்ந்த அன்பையும், அதில் பொதிந்த தத்தவத்தையும் உணர்ந்து மனம் நெகிழ்ந்து போனான். 🌿துன்பம் வந்தால்தான் நாம் கடவுளை நினைக்கிறோம். இன்பம் கிடைக்கும் போது அதை நம்முடைய சாதனையாகவே எண்ணிக் கொள்ளுகிறோம். #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨கடவுள் #📸பக்தி படம்
🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் - ? 1615 பிறவி என்பது அனைவருக்கும் ஒரு முறை மட்டுமே கிடைக்கக்கூடியது அதனால் போட்டி, பொறாமை இன்றியும் யாருக்கும் தீங்கு இழைக்காமலும் வாழ்ந்து இந்த மானிட பிறப்பை நிறைவு செய்யுங்கள் ? 1615 பிறவி என்பது அனைவருக்கும் ஒரு முறை மட்டுமே கிடைக்கக்கூடியது அதனால் போட்டி, பொறாமை இன்றியும் யாருக்கும் தீங்கு இழைக்காமலும் வாழ்ந்து இந்த மானிட பிறப்பை நிறைவு செய்யுங்கள் - ShareChat