ShareChat
click to see wallet page
search
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 73 வது  திருத்தலம் திருக்கானூர் அருள்மிகு சிவயோகநாயகி உடனுறை செம்மேனிநாதர் மரம்: வன்னி மரம், வில்வ மரம் குளம்: கொள்ளிட நதி பாடல் எண் 3பண் தக்கேசி சிறையார் வண்டும் தேனும் விம்மும் செய்ய மலர் கொன்றை மறையார் பாடல் ஆடலோடு மால்விடை மேல் வருவார் இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார் கறையார் சோலைக் கானூர் மேய பிறையார் சடையாரே. பொழிப்புரை: கருநிறமான சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய பிறை பொருந்திய சடையினராகிய இறைவர், சிறகுகளோடு கூடிய வண்டுகளும் அவற்றால் உண்ணப்பெறும் தேனும் நிறைந்து செவ்விதாக மலர்ந்த கொன்றை மலர்களைச் சூடியவராய் வேதப் பாடல்களைப் பாடி ஆடுபவராய்ப் பெரிய விடைமேல் வருவார். அவ்வாறு வரும் இறைவர் என் இல்லத்தே புகுந்து என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார், இதுமுறையோ?. #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat