ShareChat
click to see wallet page
search
#💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 15.03.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======= எப்படியு முள்ளறிவோர் எனையறிவார் மாமுனியே அறிந்தோ ரறிவார் அறியாதார் நீறாவார் செறிந்தோர்கள் வாழ்வார் சேராதார் போய்மாழ்வார் சாத்திரத்தி லுந்தோன்றேன் சதுர்மறையைத் தாண்டிநிற்பேன் சேத்திரத்தி லுமடங்கேன் செய்தவத்தி லுமடங்கேன் அன்பிலு மடங்கேன் அறத்திலு மேயடங்கேன் வம்பிலு மடங்கேன் வணங்கிடி லுமடங்கேன் கும்பிடி லுமடங்கேன் குவித்திடி லுமடங்கேன் நம்பிடி லுமடங்கேன் ஞானத்தி லுமடங்கேன் யோகக் கிரியை உறுசரிதை யிலடங்கேன் விற்பனத்தி லடங்கேன் வினோத மதிலடங்கேன் சொற்பனத்தி லடங்கேன் தெரிசனத் திலடங்கேன் கனாவி லடங்கேன் கைகாட்ட லிலடங்கேன் அனாவி லடங்கேன் அச்சரத்திலு மடங்கேன் இத்தனையிலு மடங்காது இருந்து பகைமுடிப்பேன் . விளக்கம் ========= எப்படியாவது அறிந்தே ஆக வேண்டும் என்கிற அகத் தெளிவு உள்ளவர்கள் மட்டுமே என்னைப் பற்றிய உண்மையை அறிவார்கள். அறியாதவர்கள் துவம்சம் ஆகிவிடுவர். நிறைவான மனமுடையோர் வாழ்வார்கள். நிறைவில்லா மனமுடையோர் இறுதிவரை என்னைப் பற்றிய உண்மையை அறியாமலே வாழ்வை முடித்துக் கொள்வர். . நான் சாஸ்திரங்களின் மூலமும் தென்பட மாட்டேன். வேதங்கள் நான்கையும் கடந்து நிற்பேன். யாருடைய உடம்பிலோ, ஆலயங்களிலோ அடங்க மாட்டேன். மேன்மை மிகுந்த தவத்திலோ, அன்பிலோ, தரும காரியங்களில் கூட அடங்கிவிட மாட்டேன். . வம்பர்களிடமோ, வணங்குவோரிடமோ, கும்பிடுதலிலோ, ஒடுங்குவதிலோ, நம்பிக்கையிலோ, அறிவிலோ, தியானத்திலோ, எவ்விதத் தொழிலிலோ, உறுதியான ஒழுக்கத்திலோ, வித்துவத்திலோ, வினோதங்களிலோ, நினைப்பினால் உண்டாகும் சொற்பனத்திலோ, தரிசனக் காட்சிகளிலோ, நித்திரையில் வரும் கனவிலோ, அபிநயம் செய்வதிலோ, ஆத்மாக்களிலோ, எவ்விதமான எழுதிய எழுத்துக்களிலோ அடங்கமாட்டேன். இத்தனையிலும் அடங்காமல், அத்தனையையும் கடந்து நின்று கலியை அழித்துப் பகை முடிப்பேன். . . அகிலம் ======== என்றுநான் சொல்ல ஏற்றகலைக் கோட்டுமுனி மன்றுதனில் வீழ்ந்து மறுகியழு தேபுலம்பி . விருத்தம். ========== மண்ணிலு மடங்கா மரத்திலு மடங்கா மறையிலு மடங்கா பலவசத்திலு மடங்கா கண்ணிலு மடங்கா கருத்திலு மடங்கா கவியிலு மடங்கா பலவிதசெபிப் பிலுமடங்கா எண்ணிலு மடங்கா இகத்திலு மடங்கா இறையினி லடங்கா இரங்கிலு மடங்கா ஒண்ணிலு மடங்காத உனைவந் தடைந்திட உரைத்திட மருளென பதத்தடிமிசை விழுந்தான் . விளக்கம் ========= கலியுகத்தில் வைகுண்ட அவதாரமாக வரவிருக்கும் இயல்பினை நான் எடுத்துச் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த கலைக்கோட்டு மாமுனிவன் மண்ணிலே வீழ்ந்து மறுகி அழுதவாறு, சுவாமி, மண்ணிலோ, தாவரங்களிலோ, வேதாகம விளக்கங்களிலோ, பல்வேறு விதமான வழிபாடுகளிலோ, மந்திர உச்சரிப்புக்களிலோ, எந்த விதமான இலக்கங்களிலோ, எந்த லோகத்திலோ, அணுக்களிலோ, அழுகைகளிலோ அடக்கிவிட முடியாத தங்கள் நாங்கள் வந்து அடைவதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தந்து அந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கான உறுதி வாய்ந்த மனத்தையும் எங்களுக்கு அருள்பாலியுங்கள் என்று என்னுடைய பாதம் பணிந்து வேண்டினான். . . அகிலம் ======== விருத்தம் ========= மறையினி லடங்கா இறையினி லடங்கா வணங்கிலு மடங்கா பலவகையிலு மடங்கா துறையினி லடங்கா தொல்வியி லடங்கா சுகயினி லடங்கா சுருதியி லடங்கா உறவிலு மடங்கா ஒளியிலு மடங்கா உகத்திலு மடங்கா ஒருவிதத்திலு மடங்கா புறத்திலு மடங்கா அகத்திலு மடங்கா புகழ்ந்துனை யடைந்திட வகுத்துரையென பதத்தடிவிழுந்தான் . விளக்கம் ========= வேதங்களிலும், அணுக்களிலும், கீழ்படிதலிலும், எவ்வகையிலும் எந்த வழியிலும் இந்தப் பழைமை வாய்ந்த பூலோகத்திலும் எவ்வகை இசையிலும், எந்தச் சுகத்திலும், உறவுகளிலும், ஒளியிலும், யுகங்களிலும், புறத்திலும், அகத்திலும் கட்டுப்படாத தங்களைப் புகழ்ந்துரைத்தேனும் அடைவதற்கு உகந்த விவரங்களை விளக்கமாக உரைத்து அருளுங்கள் என்று மீண்டும் வணங்கி வேண்டினான். . . தொடரும்... அய்யா உண்டு.
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 1 மும்முர்த்தி யெல்லாம் ஒருமூர்த்தி யாயிருக்கும் யல்முர்த்தி போலிருக்கும் எம்முர்த்தி பெல்லாம் வைகுண்டப் பெம்மான் வாய்த்தசெந் தூர்க்கடலில் வந்து  பிறப்பதுதான் மைகொண்ட நாதன் வளர்ந்துதவம் செய்வதுவும் வாய்த்தபுவி தெச்சணமே குழந்தை வைகுண்டர் குமாரப் பிராயமட்டும் கோலா கலனாய்க குருவாய்ச் சமையமட்டும் நாலாஞ் சொரூபம் நடத்தும்வரை தெச்சணமே பொல்லாதெல் லாமழிந்து பூவர்கொலு வாகுமட்டும் வழக்கும் இருப்புந்தெச்ச ணாபதயோ எஸ்லா அகிலம் ! 15.03.2026 DMuthuprakash வீரத்தனமாய் ுங்கோ ! விளக்கின் Gurroi ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 1 மும்முர்த்தி யெல்லாம் ஒருமூர்த்தி யாயிருக்கும் யல்முர்த்தி போலிருக்கும் எம்முர்த்தி பெல்லாம் வைகுண்டப் பெம்மான் வாய்த்தசெந் தூர்க்கடலில் வந்து  பிறப்பதுதான் மைகொண்ட நாதன் வளர்ந்துதவம் செய்வதுவும் வாய்த்தபுவி தெச்சணமே குழந்தை வைகுண்டர் குமாரப் பிராயமட்டும் கோலா கலனாய்க குருவாய்ச் சமையமட்டும் நாலாஞ் சொரூபம் நடத்தும்வரை தெச்சணமே பொல்லாதெல் லாமழிந்து பூவர்கொலு வாகுமட்டும் வழக்கும் இருப்புந்தெச்ச ணாபதயோ எஸ்லா அகிலம் ! 15.03.2026 DMuthuprakash வீரத்தனமாய் ுங்கோ ! விளக்கின் Gurroi ஒளி - ShareChat