இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம்
இழப்புகளுக்காக கவலை வேண்டாம் !
தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம்
துன்பம் இதுவும் கடந்து போகும் !
எரிமலை அருகிலும் மனிதன் வாழ்கிறான்
பனிமலை மீதிலும் மனிதன் வாழ்கிறான் !
இடர்பாடுகள் வந்தது கண்டு உடையாதே
இன்னல்கள் கவலைப்படுவதால் தீராதே !
பெய்யாமல் வாட்டியதுண்டு மழை
பெய்து வாட்டுகின்றது மழை !
சுனாமியின் போதும் உயிர்கள் போனது.
சூறைக்காற்று மழையிலும் உயிர்கள் போனது !
அணுகுண்டால் சிதைந்த சப்பான் மீண்டது.
கவலையை மறப்போம் கண்ணீரைத் துடைப்போம்.கட்டி எழுப்புவோம் நம்பிக்கைக் கட்டிடத்தை. 😊😊😊 #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #உற்சாக பானம்


