இந்த உலகத்தில் பல வகையான அல்வா வகைகள் இருக்கும்போது ஏன் இந்த திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவுக்கு மட்டும் அப்படி ஒரு தனி சிறப்பு ? இதற்கான காரணம்,
இந்த அல்வாவுக்கு தேவையான கோதுமையை இவர்கள் கையால் தான் அரைக்கிறார்கள்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச்சாப்பிட்டிருக்கிறார்.
அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றாலே திருநெல்வேலி என்றாகி விட்டது
என்று சிலர் சொல்கிறார்கள்..
வட இந்தியாவிலிருந்து வணிகத்திற்காக தமிழகத்தின் தென்பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினர் திருநெல்வேலியில் அவர்கள் ஊரின் அல்வாவைத் தயாரித்திருக்கிறார்கள்.
தாமிரபரணித் தண்ணீரின் சேர்க்கையால் அந்த அல்வா அவர்களின் ஊரில் செய்த
அல்வாவை விட மிகவும்
ருசியாக இருந்திருக்கிறது.
இந்த சுவையான திண்பண்டத்தை இந்த ஊரிலேயே தயாரித்து விற்பனை செய்தால் என்னவென்று அல்வாக் கடையைத் துவங்கி இருக்கிறார்கள் அன்றிலிருந்து அல்வா திருநெல்வேலியில் ஒன்றாகி விட்டது என மற்றும் சிலர் சொல்கிறார்கள்..
எது எப்படியோ இன்று திருநெல்வேலி என்றாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அல்வா ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. இந்த ஊரு அல்வாவிற்கு இருக்கும் சுவையே தனிதான். திருநெல்வேலி முழுக்க அல்வாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலின் எதிரே இருக்கும் “இருட்டுக்கடை” அல்வாவிற்குத்தான் முதலிடம்.
சந்திரவிலாஸ் என்கிற கடையும் உண்டு..இங்கு கிடைக்கும்
அல்வாவும் மிக பிரபலமானதுதான்
இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகிலுள்ள”சாந்தி ஸ்வீட்ஸ்” கடையின் அல்வாவிற்கு இரண்டாமிடம் .
அடுத்த இடத்தில் “லெட்சுமி விலாஸ்” கடை அல்வா இருக்கிறது.
இது தவிர பல லாலா கடைகள் சுவையான அல்வாவைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்த மூன்று கடைகளில் கிடைக்கும் சுவையை விட கூடுதலான சுவை
அதே திருநெல்வேலியில் உள்ள அம்பாசமுத்திரத்தில் உள்ள பெரிய லாலா(சண்முகா விலாஸ்)கடையில் கிடைக்கும்.அதிலும் அங்கு கிடைக்கும் ஸ்பெஷல் அல்வா பிரமாதம்.
பாபநாசம் செல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் இந்த அல்வாவின் சுவையை சுவைக்க மறக்காதீர்கள்.
அம்பாசமுத்திரம் பூக்கடை
ஸ்டாப் அருகில்..
சுவைத்து கொண்டே பயணம். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


