ShareChat
click to see wallet page
search
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்* "ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!" (திருப்பாடல் 128: 1-5) எல்லாம் வல்ல எம் ஆண்டவரே! சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றவரே! வலிமை இழந்தோர்க்கு ஊக்கம் அளிப்பவரே! உம்மை வாழ்த்தி, போற்றி, ஆராதித்து வணங்குகிறேன். ஒரு தாய், தன் சேயை அன்போடு நோக்குவது போல், கடந்த இரவு முழுவதும் என் அருகில் இருந்து, என்னை உள்ளன்போடு உற்று நோக்கியவரே! உமக்கு நன்றி! மற்றொரு புதிய நாளை எனக்கு வாய்ப்பாகக் கொடுத்து இருக்கிறீர். உமக்கு நன்றி அப்பா! இறைவா! என் வாழ்வில் பல நேரங்களில் நம்பிக்கைக் குன்றியதன் நிமித்தம் எடுத்த முயற்சிகளைக் கைவிட்ட, எனது கடந்த காலங்களை நினைத்து மனம்வருந்தி உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறேன். இயேசுவே, "மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்று, உம்மிடம் சொன்ன அந்த கிரேக்கப் பெண்ணின் திட நம்பிக்கையையும், விடா முயற்சியையும் நாங்களும் கைக்கொள்ள அருள் புரிவீராக. இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற...(1) அருள் நிறைந்த மரியே...(3) பிதாவுக்கும், சுதனுக்கும்,...(1) *ஆமென்.*
⛪ வேளாங்கண்ணி சர்ச் - 108 55' 55 55 55 108 55' 55 55 55 - ShareChat