ShareChat
click to see wallet page
search
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 29.03.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== அதின்மேல் பக்தியாயிருக்கிற பேர்களுக்கும் பிள்ளை யில்லாமலிருக்கிற பேர்களுக்கும் கண்ணில்லாமலிருக்கிற பேர்களுக்கும் தனமில்லாமலிருக்கிற பேர்களுக்கும் பராபர மூர்த்தியும் சாம்பசிவ மூர்த்தியும் ஸ்ரீராமச்சேயரும் தீட்சையாகித் திருமனதிரங்கிப் பக்திகாரணங்களைச் சோதித்துப் பகிர்ந்து அவரவர் கேட்ட வரங்களைக் கொடுப்பார்கள். . விளக்கம் ========= உலகத்தில் துஷ்டர்களே இல்லாது ஒழிந்த பிறகு, பகல்வேசமில்லாத பக்தியுடன் இருக்கிறவர்களுக்கும் குழந்தை இல்லாமல் இருக்கிறவர்களுக்கும், கண் பார்வை இல்லாமல் இருக்கிறவர்களுக்கும், செல்வம் இல்லாமல் இருக்கிறவர்களுக்கும், பரம்மதேவனும், சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் ஒரே மூர்த்தியாகிக் காட்சியளிதது மன இரக்கத்தோடு அவர்களின் பக்திக்கு உண்டான உட்பொருளை எல்லாம் ஆராய்ந்து அதை அவர்களிடமே சொல்லி, அவர்கள் என்ன வரம் கேட்கிறார்களோ அந்தந்த வரத்தைக் கொடுப்பார்கள். . உள்ளுறை மறைபொருள் விளக்கம் =================================== அவரவர் கேட்ட வரங்களைக் கொடுப்பார் என்றதும், ஆகா... இருப்பதை அதிகமாக்கிக் கொள்ளலாம், இல்லாதவற்றை எல்லாம் இறைவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்பதல்ல பொருள். இறைவன் உலகிலுள்ள ஒவ்வொரு மனிதர்களின் மன நிலையையும் அவர்கள் மூலமாகவே அறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு அருள்புரிவார் என்பதே பொருளாகும். . உதாரணமாக, குறோணி முதல் கலிநீசன்வரை எல்லா அரக்கர்களும், இறைவனிடம் கேட்டுப் பெற்ற வரங்களைப் பயன்படுத்தி உலகிற்குச் கெடுதல் செய்து அழிந்தார்களே அதைப் போன்று நாமும் பொன் வேண்டும், பொருள் வேண்டும், சொத்து, சுகம், பட்டம், பதவி, புஜபலம், அதிகாரம், ஆடம்பரம் போன்றவை எல்லாம் வேண்டும் என்று கேட்டுப் பெற்று அவற்றின் மூலம் ஆணவமாகி நல்லோரைப் பகைத்து தெய்வகோபத்திற்கு ஆட்பட்டு நம்முடைய அழிவுக்கு நாமே ஆளாகக் கூடாது. . இருப்பதை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடும், இல்லாதவற்றை எல்லாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உள் நோக்கத்ததோடும் இறைவனை வழிபடுவது இறைவழிபாடு அல்ல. எவ்விதமான உள்நோக்கமும் இல்லாத உறுதியான பக்தனுக்கு எப்போது என்ன வேண்டும் என்பது கல்லுக்குள்ளிருக்கும் தேரைக்கும், கர்ப்பத்தில் இருக்கும் உயிருக்கும் படியளக்கும் அநதப் பரம்பொருளுக்குத் தெரியும். . துவாபர யுகத்தின் நிறைவு காலத்தில் குந்திதேவியைப் பார்த்து, அத்தை, தங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கிருஷ்ண பரமாதம்மா கேட்டபோது, கிருஷ்ணா எப்போதும் உன்னை மறவாதிருக்க வரம் வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மாவிடம் வேண்டினாளே குந்திதேவி, அதைப்போல நாமும் இறைவா எப்போதும் உம்மை மறவாதிருக்கும் மனம் வேண்டும் என்று அன்றாடம் கேட்டுப் பெறுவோமாக. அதுவே பக்தி, பக்தி ஒன்றே முக்தி தரும் மூல நீதி. . அகிலம் ======== இன்னுஞ்சிறிது நாளையிலே சிலபேர்கள் தெய்வீகமாய்ப் போவார்கள். முன்னுக்கு மழைதட்டும் உலகிற்பல பல வஸ்துவும் பலிக்குமென வகுத்தார். . விளக்கம் ========= அப்படி அவர்கள் கேட்ட வரங்களைக் கொடுக்கும்போது, இறையருளை மட்டுமே வரமாகக் கேட்கும் சிலர் தெய்வீகத் தன்மை அடைவார்கள். அந்தக் காலக் கட்டத்தில் மாதம் மும்மாரி என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படுவதோடு, முன்னுக்குப் பின் முரணாக மழை பெய்யும். அப்பொழுது உலகில் பற்பல நூதன கண்டுபிடிப்புகளும், அதன் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்று சரசுவதி சொல்லச் சொல்ல மகாவிஷ்ணு எழுதிக்கொண்டே இருக்கிறார். .. அகிலம் ======== சிலநீசர் மிகக் கறுப்பை நினைவில்லாத்தொட்டு மிகப் பாசமடைந்து அலைந்து அழிந்து போவார்கள். வாலி சுக்ரீபனும் பண்டாரமாகிப் போவார்கள். வாச்சி கொழு கலப்பையெல்லாம் நாசமாகிப் போய்விடும். முன்னாலே துலுக்கர் தம்மை நாசம் பண்ணுகிறதற்காகவே துர்க்கையம்மாளைப் பிறவி செய்தனுப்புகிறோம். . விளக்கம் ========= சில ஈனர்கள் தாம் செய்யும் குற்றத்தை குற்றம் என்று உணராத காரணத்தால் கெடுமதியாளர்களின் பாசாங்குக் கண்ணியில் சிக்குண்டு, அதனால் அலைக்கழிந்து அழுந்தப்படுவார்கள். . வாலி, சுக்ரீவன் போன்று நற்குணமுள்ள புஜபல பராக்கிரமசாலிகள் கூட கொடுமை மிகுந்த கலியின் கபடமான மாய்கையைச் சகித்துக்கொள்ள முடியாமல் பண்டாரக் கோலமே மேலானது என்று அக்கோலத்தில் தம்மை ஆட்படுத்திக் கொள்வார்கள். . மரங்களை வகைப்படிகள் செய்வதற்காகப் பயன்படுத்தும் கருவியாகிய நேர்ப்பட்டைக் கோடாரி முதலானவைகளும், ஏர்முனையாகிய இரும்புக்கொழு, உழவுத் தொழிலுக்கான கலப்பைப் போன்று கைத்தொழிலுக்குப் பயன்படுத்துகின்ற உபயோகப்பொருட்கள் எல்லாம் இயந்திரங்களின் வருகையால் பயன்படுத்துவாரற்றுப் பாழாகிப் போகும். . அதற்கு முன்பே, தானும், தன் கூட்டமும்தான் உயர்வடைய வேண்டும், உல்லாசமாக வாழவேண்டும் என்று வெறிபிடித்த அசுரக் குணமுடைய வன்முறையாளர்களை வதை செய்வதற்காக அணுவாயுதங்களை அணுப்புகிறோம். . உள்ளுறை மறைபொருள் விளக்கம் =================================== பதினெட்டுத் துர்க்கையாலே பாழாகும் லோகமெல்லாம் என்று அருள்நூலிலும், அகிலத்திரட்டிலும் துர்க்கை என்று அய்யா குறிப்பிடுவது அணுசக்திகளையே ஆகும். துர்க்காதேவிக்கு அருளும் சக்தியைவிட அழிக்கும் சக்தி பன்மடங்கு அதிகம் என்பதைப் புராணங்கள் நமக்குப் போதிக்கின்றன. அணுசக்திகள் ஆக்கவேலைகளுக்கு அதிக அளவில் பயன்பட்டுக்கொண்டு இருக்கின்றன என்றாலும் மிகப்பெருமளவில் அதாவது, உலகத்தையே அழிக்கும் அளவில் பயன்படப்போகிறது என்பதையே அகிலத்திரட்டின் மூலம் அய்யா நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். . அகிலம் ======== பிராமணர் நன்றாய் சுகத்துடன் வாழ்வார்கள். . விளக்கம் ========= தாமாகத் தோன்றி, ஏகனாய் இருந்து, எங்கும் நிறைந்து, அனேகராய் நின்று அனேகாகாரமாய், பற்பலவாய், பலமாதிரியாய் பரிணாமமாகி, எல்லாவற்றுள்ளும் மறைபொருளாய் உறைந்து, அனைத்தும் இயக்குவதற்கும் காரணமாகி. உண்டானவை யாவும் ஒடுங்குதற்கும் இடமாகி என்றென்றும் இளமையாக இருந்துகொண்டிருக்கும் பிரம்மத்தை, அதாவது அனைத்துக்கும் காரணனாகிய ஆதி முதல்வனை உணர்ந்தவர்களும், உணர வேண்டும் என்ற உண்மையான நோக்கம் உடையோருமே பிராமணர்களாவர். அவர்களெல்லாம் சகல சுகத்தோடும் சந்தோசமாக வாழ்வார்கள். . . அகிலம் ======== புவியில் முகத்துலிங்க மில்லாத பேர்க்குப் பிரமதேவரை யனுப்புகிறோம். பிரமதேவர் புவிமீதில் வந்து பக்தி காரணங்களைச் சோதித்துப் பொல்லாத பேரைத் தெரிந்து பிடித்துப் புதுக்கிராம தேசத்தில் வாழுந் தேவதைக்குப் பூசைப்பண்ணிப் போடுவாரெனப் புகட்டினார். . விளக்கம் ========= பூலோகத்தில் வாழுகின்ற மக்கள் அனைவரிடத்திலும் முகத்து லிங்கம் இருக்க வேண்டும் என்பதே படைத்தவரின் நோக்கமாகும். . நம்முடைய முகத்தில் இருக்கின்ற இயல்பான இரு கண்களாலும் காண இயலாதவற்றையெல்லாம் காணுகின்ற ஏற்புடையதே முகத்து லிங்கமாகும். அதுவே, அகத்தின் தெளிவை முகத்தில் காட்டுகின்ற முகப்பு வாயிலாகிய திலர்தகாலம் என்று வர்ம சாஷ்திரம் குறிப்பிடுகின்ற புருவமத்தியாகும். . மனத்துக்கண் மாசு இல்லாதவர்களுக்கே அகத்துக் கண் எனப்படும் முகத்து லிங்கமாகிய ஞானக்கண் திறக்கும். அத்தகு ஞானக்கண் இல்லாதவர்களைக் கண்டு பிடிப்பதற்காகப் பிரம்ம தேவரைப் பூலோகத்திற்கு அணுப்பப் போகிறோம். . பிரம்மதேவர் பூலோகத்தில் வந்து மக்களின் பக்தி முதலான அனைத்து நடவடிக்கைகளையும் அலசி ஆராய்ந்து பார்த்து, அதில் நல்ல மனத்தால் முகத்து லிங்கமுடையோருக்குப் பேரானந்தத்தை அருளுவார். . முகத்துலிங்கமாகிய அகத்தூய்மை இல்லாதவர்களைக் கண்டு பிடித்து, அவர்களை புதிது புதிதாக ஏற்படுகின்ற யாமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் ஆகிய துர்ச்செயல்களுக்கு ஆட்படுத்தி அழித்துவிடுவாரென உரைத்தார். . தொடரும்... அய்யா உண்டு.
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 48 ஒருகுடை யதற்குள் ளாள ஒருவிஞ்சை யதிகம் பெற்றேன் கருவுடை யோர்க்குங் காண கனவரம் பெற்றேனானும் மறுகிநீர் தவிக்க வேண்டாம் Gom வருவேனான் சரன் ஏணஏடை குறுகலி யதனைத் தாண்டிக் கொள்வேனென் குலத்தைத் தானே ! அய்பா 29.03.2026 DHut Paಬash ருங்கோ ! விளக்கின் ஒளி போல்  வீரத்தனமாய்  அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 48 ஒருகுடை யதற்குள் ளாள ஒருவிஞ்சை யதிகம் பெற்றேன் கருவுடை யோர்க்குங் காண கனவரம் பெற்றேனானும் மறுகிநீர் தவிக்க வேண்டாம் Gom வருவேனான் சரன் ஏணஏடை குறுகலி யதனைத் தாண்டிக் கொள்வேனென் குலத்தைத் தானே ! அய்பா 29.03.2026 DHut Paಬash ருங்கோ ! விளக்கின் ஒளி போல்  வீரத்தனமாய் - ShareChat