ShareChat
click to see wallet page
search
#vaalkkay payanam. ஏன் கஷ்டப்படுகிறோம்...! எங்கிருந்து வருகிறது இந்த துக்கமும், துயரமும், உள்ளும், புறமும், இதற்கு சம்மந்தம் இருக்கிறதா ? இதை எப்படி சரி செய்வது உள்ளேயா, வெளியேவா ? என்று ஆராய்ந்தால். உங்களுக்கு பசி உள்ளே இருக்கிறது. ஆனால் உணவு வெளியில் இருக்கிறது. உங்களுக்கு தாகம் உள்ளே இருக்கிறது. தண்ணீர் வெளியே இருக்கிறது. எதிரி வெளியே இருக்கிறான். கோபம் உள்ளே இருக்கிறது. பெண்ணோ , பொன்னோ, பொருளோ, புகழோ, காரோ, பங்களாவோ, அனைத்தும் வெளியில் இருக்கிறது.ஆனால் அதற்குக் காரணமாக உள்ள ஆசை, பற்று, கவலை, ஏக்கம், துக்கம், துயரம், விரக்தி அனைத்தும் உள்ளே இருக்கிறது. ஒன்றோடு ஒன்று இணைந்தே செயல்படுகிறது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். வெளியில் மாற்றத்தைக் கொடுத்தாலும் பொருள் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் உள்ளே கஷ்டம் அப்படியே இருக்கிறது. அப்படியானால் மாற்றத்தை உள்ளே செய்யலாம் என்று உள்ளே ஆராய்ச்சி செய்தால் 'உள்ளேயும்' மாற்ற ஒன்றும் இருக்காது. அப்பொழுது தான் உங்களுக்குப் புரியும் இல்லாத ஒன்றினால் தான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம். இது வெறும் மன மயக்கமே, இவை அனைத்தும் சமுதாயத்தினால் உங்கள் மீது ஏற்றப்பட்ட கானல் நீரே என்று. உங்களை நீங்கள் உள்ளே ஆராய்ச்சி செய்யும் கணமே, உங்கள் கண்ணோட்டம் மாறும். உலகம் அழகாகத் தெரியும். அனைத்தும் ஆனந்தமாக மாறும். உள்ளேயும், வெளியேயும் ஆனந்தமே என்று உணர்வீர்கள்...! வாழ்க்கை கொண்டாட்டமே. உள்ளும், புறமும் ஆனந்தமே இன்பத்தில் திளைக்கப் பிறந்தவரே நீங்கள்...! 😊😊😊
vaalkkay payanam. - ShareChat