ShareChat
click to see wallet page
search
ஒரு முறை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுடன் உரையாடிக்கொண்டுருக்கும் போது ஒருவர் மிக வேகமாக ஓடிவந்து, கவலை கலந்த முகத்தோடு சொன்னார். யா ரஸூலல்லாஹ்! என் மகனை காணவில்லை, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, தங்கள் என் மகனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொண்டார். அப்போது அந்த சபையில் இருந்த ஸஹாபி எழுந்து சொன்னார். யா ரஸூலல்லாஹ்! எனக்கு இவருடைய மகனை தெரியும், அந்த குழந்தை நான் வருகிற பாதையில் தான் விளையாடிக் கொண்டிருந்தது. அதை கேட்ட குழந்தையின் தந்தை அவசர அவசரமாக புறப்பட ஆயத்தமானார். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்துக் கேட்டார்கள். தாங்களுக்கு இவ்வளவு அவசரமா? அவர் கூறினார். யா ரஸூலல்லாஹ்! தாங்களுக்கு தெரியாதா? ஒரு தந்தையின் மனவேதனை,.. என்னுடைய மகன் காணாமல் நானும் என்னுடைய மனைவியும் மிகவும் சோகத்தில் உள்ளோம். என் மனைவி, என் மகனை எதிர்நோக்கி வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறாள். ஆகவே நான் அவசரமாக என் மகனை பார்க்க போகிறேன். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், மகனை காணாத மனவேதனையில் உள்ளீர்கள் என்பது தெரியும், ஆனால் தாங்கள் உங்களுடைய மகனை நேரில் சந்திக்கும் போது தங்களுக்கும் அறியாது, பாசத்தின் இனிமையில், அன்பால் அவனைக் கொஞ்ச நேரிடும், ஆனால் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளின் கூட்டத்தில் சில சமயங்களில் யத்தீமான (அனாதையான) குழந்தைகளும் இருக்கலாம். அது உங்களுக்கு தெரியாது, அன்போடு, மகனே என்று அழைத்து உறவாடும் போது யத்தீம் (அனாதையான) குழந்தைகளின் மனது வேதனைப்படலாம்.. என்னுடைய தந்தை இருந்திருந்தால் இதுபோல் என்னையும் அன்போடு அழைத்து அரவணைத்து கொஞ்சி இருப்பாரே, என்று பிஞ்சு இதயம் வலிக்ககூடும். எனவே தாங்களின் வீட்டிற்கு சென்று மகனின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துங்கள் என்றார்கள். இந்த ஹதீஸ் அல்-அதப் அல்-முஃப்ரத் (இமாம் புகாரி) நூலில் 56வது ஹதீஸாக உள்ளது. நினைவில் வைத்துக் கொள்வோம், இதேபோல் விதவைகளின் முன்னிலையில் வைத்து தன் மனைவியோடு "அன்போடும், பாதத்தோடும் கொஞ்சி குலாவாதீர்கள்" ஏழைகளின் முன்னிலையில் வைத்து தன்னுடைய செல்வத்தைக் குறித்து பெருமையாக பேசாதீர்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - யத்தீம் அனாதையான)குழந்தைகளின் மனது வேதனைப்படலாம் இதேபோல் விதவைகளின்மனது வேதனைப்படலாம் யத்தீம் அனாதையான)குழந்தைகளின் மனது வேதனைப்படலாம் இதேபோல் விதவைகளின்மனது வேதனைப்படலாம் - ShareChat