||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
திருவாழியாழ்வான் என்னும் திருச்சக்கரத்தைத் தன் வலது திருக்கரத்தில் ஏந்தியிருப்பவனும், குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் தன் திருமார்பில் அணிந்திருப்பவனும் ஆகிய எம்பெருமானைப் பிரியாமல் திருமகள் என்னும் பெரியபிராட்டியார் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கின்றாள்.
மேகம் நிறைந்த ஆகாயத்தில் மின்னலைப் போன்று விளங்குகின்ற அந்தப் பெரிய பிராட்டியார் அழகிய தாமரை மலரைப் போன்று நெடிய திருக்கண்களுடன் தேன் நிறைந்த தாமரைமலரில் என்றென்றும் தங்கி இருக்கக் கூடியவள்.
இத்தகைய பெரிய பிராட்டியாரே நமக்கு எப்பொழுதும் சரண் அடையக் கூடிய அளவில் அவளே சரணம் ! சரணம் !! சரணம்!!!
பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


