ShareChat
click to see wallet page
search
'நேர்வழி மற்றும் கல்வி ஞானம் ஆகியவற்றுடன் என்னை அல்லாஹ் அனுப்பி வைத்ததற்கு உதாரணம் : பூமியை வந்தடைந்த மழையின் உதாரணம் போலாகும். அதில் ஒரு பகுதி தண்ணீரை ஏற்றுக் கொண்டு, செடி-கொடிகளை அதிக அளவில் விளையச் செய்கிறது. தண்ணீரை தேக்கி வைத்து, அதன்மூலம் மக்களுக்கு பயனளித்த கெட்டியான பூமியாக உள்ளது. மக்களும் அதிலிருந்து குடித்தார்கள். கால் நடைகளுக்கு குடிக்கக் கொடுத்தார்கள். விவசாயம் செய்தார்கள். அந்த பூமியின் மற்றொரு பகுதி, கட்டாந்தரையாகும். அது தண்ணீரையும் தேக்கி வைக்காது. செடிகளையும் முளைக்கச் செய்யாது. இதில் முதல் உதாரணம், அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் என்னை அனுப்பி வைத்த மார்க்கம் மூலம் பயன் அளித்து, அதாவது தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுத்தவனுக்குரிய உதாரணமாகும். கட்டாந்தரை உதாரணம் மார்க்கத்தின் பக்கம் தன் தலையைக் கூட திருப்பாமல், அல்லாஹ் என்னை எதன் மூலம் அனுப்பினானோ அந்த வழியை ஒப்புக் கொள்ளாமல் இருப்பவனுக்கும் உதாரணமாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1378) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் ஒருவருக்கு விஷவித்தில்  நல்லககதை 9I6u6or அறிஞராக்குவான்" அறிவிப்பவர்: முஆவியாருலி) (ரியாளுஸ்ஸாலிஹீன் 1376) அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் ஒருவருக்கு விஷவித்தில்  நல்லககதை 9I6u6or அறிஞராக்குவான்" அறிவிப்பவர்: முஆவியாருலி) (ரியாளுஸ்ஸாலிஹீன் 1376) - ShareChat