#meenaatchi panjrethanam. மீனாட்சி🪷 பஞ்சரத்னம்...!*
〰️〰️〰️〰️〰️〰️〰️
🔴🟢🔴🟢🔴🟢🔴
*ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது...!*
➿➿➿➿➿➿➿➿
💐🌿💐🌿💐🌿💐🌿
*பாடல்:04...!*
ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் பயஹராம் ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாசனார்ச்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் நானாவிதாமம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்.
*விளக்கம்:*
🛕 சுந்தரேசருடைய நாயகியும், அடியவர்களுடைய பயத்தை நீக்குபவளும், அடியவர்களுக்கு பேரறிவை (ஞானத்தை) நல்குபவளும், குறையொன்றும் இல்லாதவளும், கருநீல நிறம் கொண்டவளும், தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் அருச்சிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும், நாராயணனுடைய தங்கையும், யாழ், குழல், மிருதங்கம் முதலியவற்றின் இசையை இரசிப்பவளும், பல்விதமான உயிர்களுக்கு அன்னையும, கருணைக்கடல் ஆனவளும, பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.
*மலரும்...*
🔳🟢🔳🟢🔳🟢🔳🟢🔳🟢🔳🔳🟢🔳🟢🔳🟢🔳🟢🔳🟢🔳


