ShareChat
click to see wallet page
search
ஜாதக நோட்டை தூக்கிக்கொண்டு ... அவரவர் விதியை அறிவதற்காக ஜோதிடரை சந்திக்கும் முன்.. ஜாதகத்தில் உள்ள முக்கிய விதிகளில் .....மூன்றை மட்டும் ஜாதகர் அறிந்து வைத்திருப்பது அவசியம். ஏனெனில்.. ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்து ஜோதிடரின் தரத்தை அறிவதற்கு முன். தன்னுடைய சுயத்தை அவரவர் அறிந்து வைத்திருப்பது அவரவர் கொடுப்பினையை புரிந்து கொள்ள உதவும். பொதுவாக.... எந்த ஒரு ஜாதகத்திலும் 1,5,9 என்கிற திரிகோணாதிபதிகளின் நிலை மிக முக்கியம். ஏனெனில்.... இதுவே ஒரு மனிதனை கம்பீரமாக வலம் வரச் செய்து எந்த சூழ்நிலையிலும் தடம் புரளாமல் நிலையாக நிறுத்த கூடியது.. இதில்.... 1 என்பது லக்னம். இது மூளையை குறிக்கும் ஒருவர் மூளையில் தேக்கி வைத்திருக்கக் கூடிய அறிவை பயன்படுத்தி புத்திசாலித்தனமாக வெற்றி பெற்று அனைத்தையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வாழ்வதற்கு லக்னாதிபதியின் பலம் மிக மிக அவசியமாக உள்ளது.. 5 அதாவது பூர்வ புண்ணியாதிபதி. இது...... இதயத்தை குறிக்கும் பொதுவாக..... மனசாட்சி மனசு மனதிற்கு பிடித்தவர்கள் இருக்கும் இடம். அது மட்டுமல் வாழையடி வாழையாக வழிபடக்கூடிய குலதெய்வத்தை குறிக்கக்கூடிய பாவகமும் இதுதான். மேலும் இதயம் சரியாக இயங்கினால் மட்டுமே ஒருவர் உயிர் வாழ முடியும் என்பதால் ஐந்தாம் அதிபதியின் பலம் அவசியமாகிறது. இறுதியாக.. 9 ஆம் அதிபதி அதாவது பூர்வ புண்ணியாதிபதி.... அதிர்ஷ்டங்கள் அனைத்தையும் மொத்தமாக தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கக் கூடிய ஒரு கிரகம். இது... மனிதனுடைய தொடை பகுதியிலிருந்து ஆரம்பித்து முதுகு தண்டுவடத்தை தாங்கி பிடித்திருக்கக்கூடிய இடுப்பு எலும்பு வரையிலான பகுதியை குறிக்கிறது.... புரிந்திருக்கும் என நினைக்கிறேன்... ஆம்.. வசதியாக அமருவதற்கும் நிமிர்ந்து நிற்பதற்கும் ஒன்பதாம் அதிபதி பலம் அவசியமாகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் 1,5,9 என்கிற திரிகோணாதிபதிகள்.. ஒரு மனிதன் சிந்தனை வளத்தோடு தெளிந்த மனத்தோடு வீறு நடை கொண்டு வாழ்க்கையை வாழ்வதற்கு உதவி புரியும். இன்னும் புரியும் படி சொல்ல போனால்.... லக்னாதிபதி வலு தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகை செய்கிறது. ஐந்தாம் அதிபதி வலு ஜாதகரின் தன்னம்பிக்கையை குலதெய்வ அருளினால் வெற்றி பெற வைத்து மனம் மகிழ செய்யும். ஒன்பதாம் அதிபதி வலு.. தன்னம்பிக்கையையும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தாங்கி பிடித்திருக்க கூடிய தூணாகவும். ஜாதகருக்கு தேவையான அதிர்ஷ்டத்தை அவ்வப்போது வழங்கக்கூடிய தேனாகவும் இருக்கும். 1,5,9 இது மூன்றும் சரியாக இருந்தால்..... புத்தம் புதிய வாகனத்தை போல வாழ்க்கை சீராக இயங்கும். இதில் ஏதேனும் இரண்டு மட்டும் சரியாக இருந்தால் 5 வருட பழமையான வாகனத்தை போன்று இயங்கும். ஒன்று மட்டும் சரியாக இருந்தால்... 15 வருட பழமையான வாகனத்தை போன்று இயங்கும் மூன்றுமே சரி இல்லாத பட்சத்தில்... ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காத வண்டி போல ஆகிவிடும். இதை எப்பொழுதும் மனதில் நிலை நிறுத்திக் கொள்வது என்பது... நம்முடைய கொடுப்பினையை நாமே புரிந்து கொள்வதற்கும் தேவையில்லாத புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாகாமல் இருப்பதற்கும் ... இது உங்களுக்கு உதவும். குறிப்பாக முக்கியமாக சுருக்கமாக.... 1,5,9 திரிகோணத்தின் மூலமாக.... ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். இதன் மூலம் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய பெருமைகள் ஏராளம். குறிப்பாக இதன் மூலம் மனிதர்கள் அடைந்த பொருளாதார உயர்வு ஏராளம். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 78100 22628 #🚹உளவியல் சிந்தனை #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️
🚹உளவியல் சிந்தனை - ShareChat