ShareChat
click to see wallet page
search
வள்ளூவர் இன்றிருந்தால் ஏதோ குறள் சொல்லியிருப்பாராம்... தற்குறி விஜய்யே, கரூர் சம்பவத்திற்குப் பிறகு, திருச்சி விமான நிலையத்தில் திரும்பி பார்க்காமல் ஓடிவிட்டு, இன்று வரை கரூர் செல்லாத உன்னை பற்றி திருவள்ளுவர் அன்றே எத்தனை குறள் எழுதியிருக்கிறார் தெரியுமா? ஒரு தலைவன் இக்கட்டான சூழலில் எப்படி இருக்கக் கூடாது என்பதை பற்றி வள்ளுவர் நிறையவே சொல்லியிருக்கிறார்... "அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமராகிக் தங்கி விடல்." ​ போர்க்களத்தின் நடுவே தன்மேல் அமர்ந்து வருபவரைத் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும் பயந்த குதிரையைப் போன்றவர்கள் பக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் விலகி இருப்பதே மேலானது. உன்னை நம்பி உயிரைவிட்ட அந்த 41 அப்பாவிகளின் குடும்பங்களுடன் நிற்காமல் அவர்களை விட்டு விட்டு ஓடி வந்த நீ தான் அந்த குதிரை. ​"ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்." தலைமைப் பண்பு இல்லாதவர்கள் சத்தத்தைக் கேட்டாலே அஞ்சுவார்களாம், பாஜக என்று சொன்னால் நீ அஞ்சுவதை போல். "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்." வீரம் இல்லாத ஒருவன் கையில் வாள் இருந்தாலும், அவனால் எதையும் சாதிக்க முடியாது. நீ கவுன்சிலர் ஆகவே தகுதியில்லாத ஒரு நடிகன். நீ முதல்வராக ஆசைப்படலாமா? ​"அன்பறிவு தேற்றம் விழைவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே பணி." அன்பும் அறிவும் தெளிவும் இருந்தாலும், மன உறுதி இல்லாதவன் தலைவனாக இருக்க முடியாதாம். கட்டின மனைவி, பெற்ற மகன் மீதே உனக்கு அன்பு இல்லை. மேலும் அறிவும் இல்லாத, தெளிவும் இல்லாத ஒரு கோழை. ​"இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்." ​துன்பம் வரும்போது அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அதைச் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். அதைவிட அந்தத் துன்பத்தை வெல்லும் வேறு மருந்து இல்லை. நீ 40 நாள் கதவை பூட்டிக்கொண்டு பனையூரில் படுத்து கிடந்தாயே அதை தான் சொல்லுகிறார். ​"கணையினால் எய்தவர் கையில் வாள் ஏந்தி துணையிலார் அஞ்சும் தகையது." போர்க்களத்தில் உன்னை போல் பயந்து ஓடுபவனைப் பற்றி 'படைச்செருக்கு' அதிகாரத்தில் இந்த குறள். "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்" மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்பவனே இறைவனாக மதிக்கப்படுவான். அன்று விபத்து நடந்த நேரத்தில் மக்களோடு இருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியது முதல்வர். ஆனால், நீ சம்பவம் செய்துவிட்டு அந்த இடத்திலிருந்து திரும்பி பார்க்காமல் ஓடிவிட்டாய். "எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்" வரும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து காக்கும் அறிவுடைய தலைவனுக்கு நடுக்கம் தரும் துன்பம் ஒரு போதும் வராது. கரூர் கூட்டத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியது, மற்றும் அளவுக்கு அதிகமான கூட்டத்தைக் கூட்ட அனுமதித்தது உன் தலைமையின் திட்டமிடல் தோல்வி என்பதை இன்றுவரை நீ ஒப்புக்கொள்ளவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது... #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - 427 NE 427 NE - ShareChat