🙏திருச்சிற்றம்பலம்🙏
🙏தடைப்பட்ட திருமணம் (பெண் , ஆண் அனைவருக்கும்) இனிதே விரைவில் நடபெற அன்புடன் ஓதவேண்டிய பதிகம்🙏
🙏இடம் : திருமருகல், திருவாரூர் மாவட்டம்🙏
🙏பண் : இந்தளம்🙏
🙏அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்🙏
🙏இறைவர் திருப்பெயர் : மாணிக்கவண்னர், இரத்தினகிரீஸ்வரர்🙏
🙏இறைவியார் திருப்பெயர் :வண்டுவார் குழலம்மை🙏
🙏சடையாய் எனுமால் சரண்நீ யெனுமால் விடையாய் எனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே.
சிந்தா யெனுமால் சிவனே எனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள் ஏசறவே.
அறையார் கழலும் அழல் வாயரவும் பிறையார் சடையும் உடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில் வவ்வினையே.
ஒலிநீர் சடையில் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய் மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை மெலிநீர் மையள் ஆக்கவும் வேண்டினையே.
துணிநீல வண்ணம் முகில் தோன்றியன்ன மணிநீலகண்டம் உடையாய் மருகல் கணிநீலவண்டார் குழலாள் இவள்தன் அணிநீல ஒண்கண் அயர்வு ஆக்கினையே.
பலரும் பரவப்படுவாய் சடைமேல் மலரும் பிறை யொன்றுடையாய் மருகல் புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்து அலரும் படுமோ அடியா ளிவளே.
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவாள் உடையாய் மருகல் பெருமான் தொழுவா ளிவளைத் துயர் ஆக்கினையே.
இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத் துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்கல் லிவளை அலராக் கினையே.
எரியார் சடையும் அடியும் யிருவர் தெரியா ததோர் தீத்திரளா யவனே மரியார் பிரியா மருகல் பெருமான் அரியாள் இவளை அயர்வாக்கினையே.
அறிவில் சமணும் அலர் சாக்கியரும் நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார் மறியேந் துகையாய் மருகல் பெருமான் நெறியார் குழலி நிறை நீக்கினையே.
வயஞானம் வல்லார் மருகல் பெருமான் உயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால் இயல் ஞானசம்பந்தன் பாடல்வல்லார் வியன் ஞாலமெல்லாம் விளங்கும் புகழே.🙏
🙏திருச்சிற்றம்பலம் 🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
00:29

