ShareChat
click to see wallet page
search
ரமலான் மாதத்தில் நாம் வணக்க வழிபாடுகளிலும், மறுமைக்கான நற்செயல்களிலும் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு ஒரு பயிற்சியாக அல்லாஹ் இந்த ஷஅபான் மாதத்தை கொடுத்திருக்கின்றான். ரமலானில் நோன்பு வைத்தால் அனைவரும் அறிந்து கொள்ளுவார்கள் ஆனால் இந்த ஷஃபான் மாதத்தில் நோன்பு வைத்தால் பலரும் நம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள் நம்மை படைத்த அல்லாஹ்வை தவிர! எனவே இந்த மாதத்தில் நோன்பு வைப்பதால் இக்லாஸ் (மன தூய்மை) உடன் நம்மால் அமல் செய்ய வாய்ப்பும் நமக்கு கிடைக்கிறது! பலர் நோன்பு என்றாலே ராமலனில் மட்டும் வைக்கிறார்கள் இதனால் ஒரு சில நோன்புலயே சோர்ந்து விடுகிறார்கள் இன்னும் சிலர் முடியவில்லை என்று விட்டு விடுகிறார்கள்! நாம் ரமலான் வருவதற்கு முன்பு இந்த மாதத்திலயே நோன்பு வைக்க ஆரம்பம் செய்தால் ரமலானில் நோன்பு வைப்பது நமக்கு எளிதாக இருக்கும்! ஷஃபான் மாதத்தில் நம்மால் இயன்ற அளவுக்கு நோன்பு வைக்கலாம் இது சுன்னாஹ், கட்டாயம் இல்லை! ஷஃபான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பும் வைத்து உள்ளார்கள். ரமலானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை! ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை! ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: (நூல்: ஸஹீஹ் புகாரி : 1969) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ரமலான் மாதத்தின் நல்லமல்களுக்கு நுற்செயல்கள்) இதயம்தயாராவதற்கு ஷஅபான்மாதம் உதவுகிறது. ரமலான் மாதத்தின் நல்லமல்களுக்கு நுற்செயல்கள்) இதயம்தயாராவதற்கு ஷஅபான்மாதம் உதவுகிறது. - ShareChat