ShareChat
click to see wallet page
search
#நல்லதே பேசு நல்லதே நினை உரிமைதொகை ரூ.5000 – முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு முஸ்லிம் மக்கள் கழகம் பாராட்டு சென்னை: பெண்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தை உயர்த்தும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அரசு, மகளிர் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக முதல்வர் அறிவித்த மகளிர் உரிமை தொகை ரூ.5000 வழங்கும் திட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: பெண்களின் உரிமை, சுயமரியாதை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு வரலாற்று சிறப்புமிக்க பணியை செய்து வருகிறது. தமிழகத்தை பெண்கள் முன்னேறும் மாநிலமாக மாற்றும் நோக்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மகளிர் ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கும் திட்டம் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் உதவியாக இருக்கும். இதனை முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் வரவேற்று பாராட்டுகிறோம். மேலும், பெண்களின் ஆதரவு அதிகரித்து வருவதால் மீண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் நிலை உருவாகி வருகிறது. அதற்காக முஸ்லிம் மக்கள் கழகம் முழு ஆதரவு அளித்து பாடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லதே பேசு நல்லதே நினை - CA( CA( - ShareChat