மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் சாமநத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்..
மதுரை அஇஅதிமுக செந்தில் குமார்
இவர் தன்னுடைய ஊரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இவருக்கு காவியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
காவியாவிற்கும் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே கடந்த சில காலமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டார்கள்..
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சமரசம் செய்து காவியாவை மீண்டும் செந்தில்குமாருடன் சேர்த்து வைத்தனர்... ஆனாலும் காவியா தனது தொடர்பை கைவிடாமல் கார்த்திக்கிடம் செல்போனில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.. அத்துடன் வீட்டிலிருந்த பணத்தையும் கள்ளக்காதலனுக்கு தந்து வந்துள்ளார்.. மேலும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
கள்ளக்காதல் காவ்யா
இந்த விஷயம் தெரிந்த செந்தில்குமார் தனது மனைவியை கண்டித்ததால், இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் மீண்டும் கோபித்துக்கொண்டு அவனியாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார் காவியா.. இதனால் மனம் நொந்த பெற்றோர், கணவருடன் சேர்ந்து வாழுமாறு காவ்யாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எங்கே திரும்பினாலும் அட்வைஸ் சத்தமாகவே உள்ளதால் கடுப்பான காவியா தனது அப்பா மீதே போலீஸில் புகார் தந்துவிட்டார்.. இந்த புகாரை கண்டு திடுக்கிட்ட போலீசார், காவ்யாவை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
தங்கள் காதலுக்கு மொத்த பேரும் எதிரியாக இருப்பதால் ஆத்திரமடைந்தார் காவ்யா.. கணவர் உயிரோடு இருந்தால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது என்றும் கார்த்திக்கிடம் சொல்லி உள்ளார்.. இதையடுத்து செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட கார்த்திக், சம்பவத்தன்று தனது நண்பர்கள் 6 பேருடன் ஆட்டோ, பைக்குகளில் சாமநத்தம் பகுதிக்கு சென்றுள்ளார்.
விடிய விடிய காத்திருந்த கும்பல்
நேற்று முன்தினம் இரவு முழுவதும் டீக்கடை அருகிலேயே தண்ணி அடித்துவிட்டு செந்தில்குமாருக்காக விடிய விடிய காத்திருந்தது அந்த கும்பல்.. நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டீ கடையை திறக்க வந்தார் செந்தில்குமார்.. அப்போது அவரை வழிமறித்த கும்பல், அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டியது.
இதில் அவரது கை துண்டிக்கப்பட்டதுடன், முகமும் சிதைக்கப்பட்டது.. இறுதியில் ரத்த வெள்ளத்தில் செந்தில்குமார் கொடூரமாக விழுந்து இறந்தார்..
காவ்யாவின் சதித்திட்டம்
இந்த சம்பவம் குறித்து எஸ்பி அரவிந்த் உத்தரவின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காவியாவின் சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
இதனிடையே கள்ளக்காதலன் கார்த்திக் உட்பட 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மதுரையில் அரங்கேறிய இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!! #📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔


