ShareChat
click to see wallet page
search
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்* "கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள். பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர்". (திருப்பாடல் 45: 10-11. 13-16) மக்கள் பணிந்து தொழுதிடும் இறைவனே! உம்மை போற்றுகின்றோம். வருங்காலத் தலைமுறையினருக்கும் இறைவனே! உம்மை போற்றுகின்றோம். எங்களுக்கு புத்துயிர் அளிக்கும் இறைவனே! உம்மை போற்றிப் புகழ்கின்றோம். இறைவா! இந்த காலை வேளையில் உம்மை நோக்கி செபிப்பது, உம்மை போற்றுவது, உம்மை துதிப்பது மனதிற்கு நிறைவையும், மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகிறது அப்பா. நன்றி இறைவா! ஏனெனில், தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவரே! நீர் அண்மையில் இருக்கின்றீர். விண்ணகத்தில் இறையாட்சியை சுவீகரித்துக் கொள்ள இருக்கும் ஏழைகளுக்கு, மண்ணகத்தில் வாழும் காலத்திலேயே தகுந்த உதவிகளை நான் செய்ய, நல்ல வாய்ப்பினைத் தந்தருளும். அவ்வாறே விண்ணகத்தில் நிறைவினைக் காண, பட்டினியில் இருப்போரை நான் மண்ணகத்தில் இனம் கண்டு, அவர்களது பசியினைப் போக்க அருள் புரிவீராக. இறைவா! இந்த புதிய நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். நீரே எம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவீராக. இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணகத்தில் இருக்கிற...(1) அருள் நிறைந்த...(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*
✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் - ShareChat